மதுரைப் புல்லங் கண்ணனார் |
வினைவயிற் பிரிதல் யாவது? 'வணர் சுரி |
|
வடியாப் பித்தை, வன்கண், ஆடவர் |
|
அடி அமை பகழி ஆர வாங்கி; |
|
வம்பலர்ச் செகுத்த அஞ்சுவரு கவலை, |
|
5 |
படுமுடை நசைஇய வாழ்க்கைச் செஞ் செவி |
எருவைச் சேவல் ஈண்டுகிளை பயிரும் |
|
வெருவரு கானம் நீந்தி, பொருள் புரிந்து |
|
இறப்ப எண்ணினர்' என்பது சிறப்பக் |
|
கேட்டனள்கொல்லோ தானே? தோள் தாழ்பு |
|
10 |
சுரும்பு உண ஒலிவரும் இரும் பல் கூந்தல், |
அம் மா மேனி, ஆய் இழை, குறுமகள் |
|
சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த |
|
நல் வரல் இள முலை நனைய; |
|
பல் இதழ் உண்கண் பரந்தன பனிஏ. |
|
பிரிவுணர்த்திய தோழி, தலைமகளது வேறுபாடு கண்டு, 'முன்னமே உணர்ந்தாள். நம் பெருமாட்டி' என்று, தலைமகனைச் செலவு விலக்கியது. - மதுரைப் புல்லங்கண்ணனார் | |
உரை |
மேல் |