மதுரைப் பொன்செய் கொல்லன் வெண்ணாகனார் |
நிரை செலல் இவுளி விரைவுடன் கடைஇ, |
|
அகல் இரு விசும்பில் பகல் செலச் சென்று, |
|
மழுகு சுடர் மண்டிலம் மா மலை மறைய, |
|
பொழுது கழி மலரின், புனையிழை! சாஅய், |
|
5 |
அணை அணைந்து இனையை ஆகல் கணை அரைப் |
புல் இலை நெல்லிப் புகர் இல் பசுங் காய் |
|
கல் அதர் மருங்கில் கடு வளி உதிர்ப்ப, |
|
பொலம் செய் காசின் பொற்பத் தாஅம் |
|
அத்தம் நண்ணி, அதர் பார்த்து இருந்த |
|
10 |
கொலை வெங் கொள்கைக் கொடுந் தொழில் மறவர் |
ஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்த |
|
எஃகு உறு விழுப்புண் கூர்ந்தோர் எய்திய, |
|
வளை வாய்ப் பருந்தின், வள் உகிர்ச் சேவல் |
|
கிளை தரு தெள் விளி கெழு முடைப் பயிரும் |
|
15 |
இன்னா வெஞ் சுரம் இறந்தோர், முன்னிய |
செய் வினை வலத்தர் ஆகி, இவண் நயந்து, |
|
எய்த வந்தனரே தோழி! மை எழில் |
|
துணை ஏர் எதிர் மலர் உண்கண் |
|
பிணை ஏர் நோக்கம் பெருங் கவின் கொளவே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மதுரைப் பொன்செய் கொல்லன் வெண்ணாகனார் | |
உரை |
மேல் |