மதுரைப் போத்தனார் |
"அருள் அன்று ஆக, ஆள்வினை, ஆடவர் |
|
பொருள்" என வலித்த பொருள் அல் காட்சியின் |
|
மைந்து மலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது, |
|
எரி சினம் தவழ்ந்த இருங் கடற்று அடைமுதல் |
|
5 |
கரி குதிர் மரத்த கான வாழ்க்கை, |
அடு புலி முன்பின், தொடு கழல் மறவர் |
|
தொன்று இயல் சிறுகுடி மன்று நிழற் படுக்கும் |
|
அண்ணல் நெடு வரை, ஆம் அறப் புலர்ந்த |
|
கல் நெறிப் படர்குவர்ஆயின் நல் நுதல், |
|
10 |
செயிர் தீர் கொள்கை, சில் மொழி, துவர் வாய், |
அவிர் தொடி முன்கை, ஆய்இழை, மகளிர் |
|
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து, |
|
ஆராக் காதலொடு தாரிடைக் குழையாது |
|
சென்று படு விறற் கவின் உள்ளி, என்றும் |
|
15 |
இரங்குநர் அல்லது, பெயர்தந்து, யாவரும் |
தருநரும் உளரோ, இவ் உலகத்தான்?' என- |
|
மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன |
|
அம் மா மேனி, ஐது அமை நுசுப்பின்; |
|
பல் காசு நிரைத்த, கோடு ஏந்து, அல்குல்; |
|
20 |
மெல் இயல் குறுமகள்! புலந்து பல கூறி |
ஆனா நோயை ஆக, யானே |
|
பிரியச் சூழ்தலும் உண்டோ, |
|
அரிது பெறு சிறப்பின் நின்வயினானே?' |
|
'பொருள்வயிற் பிரிவர்' என வேறுபட்ட தலைமகட்கு, 'பிரியார்'எனத் தோழி சொல்லியது. - மதுரைப்போத்தனார் | |
உரை |
மேல் |