மதுரை மருதன் இளநாகன், மதுரை மருதன் இளநாகனார், மருதன் இளநாகனார் |
சிறு கரும் பிடவின் வெண் தலைக் குறும் புதல் |
|
கண்ணியின் மலரும் தண் நறும் புறவில், |
|
தொடுதோற் கானவன் கவை பொறுத்தன்ன |
|
இரு திரி மருப்பின் அண்ணல் இரலை |
|
5 |
செறி இலைப் பதவின் செங் கோல் மென் குரல் |
மறி ஆடு மருங்கின் மடப் பிணை அருத்தி, |
|
தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை, |
|
மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும் |
|
பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுற, |
|
10 |
செல்க, தேரே நல் வலம் பெறுந! |
பசை கொல் மெல் விரல், பெருந் தோள், புலைத்தி |
|
துறை விட்டன்ன தூ மயிர் எகினம் |
|
துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பில், |
|
செந் தார்ப் பைங் கிளி முன்கை ஏந்தி, |
|
15 |
'இன்று வரல் உரைமோ, சென்றிசினோர் திறத்து' என, |
இல்லவர் அறிதல் அஞ்சி, மெல்லென |
|
மழலை இன் சொல் பயிற்றும் |
|
நாணுடை அரிவை மாண் நலம் பெறவே. |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்ப் |
|
பெருந் தகை இழந்த கண்ணினை, பெரிதும் |
|
வருந்தினை, வாழியர், நீயே! வடாஅது |
|
வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை, |
|
5 |
அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் |
மரம் செல மிதித்த மாஅல் போல, |
|
புன் தலை மடப் பிடி உணீஇயர், அம் குழை, |
|
நெடு நிலை யாஅம் ஒற்றி, நனை கவுள் |
|
படி ஞிமிறு கடியும் களிறே தோழி! |
|
10 |
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல், |
சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து, |
|
அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை, |
|
இன் தீம் பைஞ் சுனை ஈரணிப் பொலிந்த |
|
தண் நறுங் கழுநீர்ச் செண் இயற் சிறுபுறம் |
|
15 |
தாம் பாராட்டிய காலையும் உள்ளார் |
வீங்கு இறைப் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டு |
|
அருஞ் செயற் பொருட்பிணி முன்னி, நப் |
|
பிரிந்து, சேண் உறைநர் சென்ற ஆறே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது.- மதுரை மருதன் இளநாகன் | |
உரை |
'நல் நுதல் பசப்பவும், ஆள்வினை தரீஇயர், |
|
துன் அருங் கானம் துன்னுதல் நன்று' எனப் |
|
பின்னின்று சூழ்ந்தனை ஆயின், நன்று இன்னாச் |
|
சூழ்ந்திசின் வாழிய, நெஞ்சே! வெய்துற |
|
5 |
இடி உமிழ் வானம் நீங்கி, யாங்கணும் |
குடி பதிப்பெயர்ந்த சுட்டுடை முது பாழ், |
|
கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார், |
|
பொறி கண்டு அழிக்கும் ஆவணமாக்களின், |
|
உயிர் திறம் பெயர, நல் அமர்க் கடந்த |
|
10 |
தறுகணாளர் குடர் தரீஇ, தெறுவர, |
செஞ் செவி எருவை, அஞ்சுவர இகுக்கும் |
|
கல் அதர்க் கவலை போகின், சீறூர்ப் |
|
புல் அரை இத்திப் புகர் படு நீழல் |
|
எல் வளி அலைக்கும், இருள் கூர் மாலை, |
|
15 |
வானவன் மறவன், வணங்குவில் தடக் கை, |
ஆனா நறவின் வண் மகிழ், பிட்டன் |
|
பொருந்தா மன்னர் அருஞ் சமத்து உயர்த்த |
|
திருந்துஇலை எஃகம் போல, |
|
அருந் துயர் தரும், இவள் பனி வார் கண்ணே. |
|
தலைமகன் பிரியக் கருதிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்குவித்தது.- மருதன் இள நாகனார் | |
உரை |
மூத்தோர் அன்ன வெண் தலைப் புணரி |
|
இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும் |
|
தளை அவிழ் தாழைக் கானல் அம் பெருந் துறை, |
|
சில் செவித்து ஆகிய புணர்ச்சி அலர் எழ, |
|
5 |
இல்வயிற் செறித்தமை அறியாய்; பல் நாள் |
வரு முலை வருத்தா, அம் பகட்டு மார்பின், |
|
தெருமரல் உள்ளமொடு வருந்தும், நின்வயின், |
|
'நீங்குக' என்று, யான் யாங்ஙனம் மொழிகோ? |
|
அருந் திறற் கடவுட் செல்லூர்க் குணாஅது |
|
10 |
பெருங் கடல் முழக்கிற்று ஆகி, யாணர், |
இரும்பு இடம் படுத்த வடுவுடை முகத்தர், |
|
கருங் கட் கோசர் நியமம் ஆயினும், |
|
'உறும்' எனக் கொள்குநர்அல்லர் |
|
நறு நுதல் அரிவை பாசிழை விலையே. |
|
பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு நின்று, இற்செறிப்பு அறிவுறீஇயது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
வேந்து வினை முடித்தகாலை, தேம் பாய்ந்து |
|
இன வண்டு ஆர்க்கும் தண் நறும் புறவின் |
|
வென் வேல் இளையர் இன்புற, வலவன் |
|
வள்பு வலித்து ஊரின் அல்லது, முள் உறின் |
|
5 |
முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா |
நல் நால்கு பூண்ட கடும் பரி நெடுந் தேர், |
|
வாங்குசினை பொலிய ஏறி; புதல |
|
பூங் கொடி அவரைப் பொய் அதள் அன்ன |
|
உள் இல் வயிற்ற, வெள்ளை வெண் மறி, |
|
10 |
மாழ்கியன்ன தாழ் பெருஞ் செவிய, |
புன் தலைச் சிறாரோடு உகளி, மன்றுழைக் |
|
கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும் |
|
சீறூர் பல பிறக்கு ஒழிய, மாலை |
|
இனிது செய்தனையால் எந்தை! வாழிய! |
|
15 |
பனி வார் கண்ணள் பல புலந்து உறையும் |
ஆய் தொடி அரிவை கூந்தற் |
|
போது குரல் அணிய வேய்தந்தோயே! |
|
வினை முற்றி மீளும் தலைமகற்குத் தோழி சொல்லியது.- மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
நாம் நகை உடையம் நெஞ்சே! கடுந் தெறல் |
|
வேனில் நீடிய வான் உயர் வழிநாள், |
|
வறுமை கூரிய மண் நீர்ச் சிறு குளத் |
|
தொடுகுழி மருங்கில் துவ்வாக் கலங்கல் |
|
5 |
கன்றுடை மடப் பிடிக் கயந்தலை மண்ணி, |
சேறு கொண்டு ஆடிய வேறுபடு வயக் களிறு |
|
செங் கோல் வால் இணர் தயங்கத் தீண்டி, |
|
சொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்து |
|
அல்குறு வரி நிழல் அசைஇ, நம்மொடு |
|
10 |
தான் வரும் என்ப, தட மென் தோளி |
உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட |
|
ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை |
|
கனை விசைக் கடு வளி எடுத்தலின், துணை செத்து |
|
வெருள் ஏறு பயிரும் ஆங்கண், |
|
15 |
கரு முக முசுவின் கானத்தானே. |
தோழியால் தலைமகளை உடன்வரும் எனக் கேட்ட தலைமகன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகன் | |
உரை |
'விசும்பு உற நிவந்த மாத் தாள் இகணைப் |
|
பசுங் கேழ் மெல் இலை அருகு நெறித்தன்ன, |
|
வண்டு படுபு இருளிய, தாழ் இருங் கூந்தல் |
|
சுரும்பு உண விரிந்த பெருந் தண் கோதை |
|
5 |
இவளினும் சிறந்தன்று, ஈதல் நமக்கு' என |
வீளை அம்பின் விழுத் தொடை மழவர் |
|
நாள் ஆ உய்த்த நாம வெஞ் சுரத்து |
|
நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின் |
|
கடைமணி உகுநீர் துடைத்த ஆடவர் |
|
10 |
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும் |
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் |
|
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் |
|
வெருவரு தகுந கானம், 'நம்மொடு |
|
வருக' என்னுதிஆயின், |
|
15 |
வாரேன்; நெஞ்சம்! வாய்க்க நின் வினையே. |
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
கடவுட் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய |
|
புதல்வற் பயந்த புகழ் மிகு சிறப்பின் |
|
நன்னராட்டிக்கு அன்றியும், எனக்கும் |
|
இனிது ஆகின்றால்; சிறக்க, நின் ஆயுள்! |
|
5 |
அருந் தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு |
சுரும்பு இமிர் மலர கானம் பிற்பட, |
|
வெண் பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில் |
|
குண்டைக் கோட்ட குறு முள் கள்ளிப் |
|
புன் தலை புதைத்த கொழுங் கொடி முல்லை |
|
10 |
ஆர் கழல் புதுப் பூ உயிர்ப்பின் நீக்கி, |
தெள் அறல் பருகிய திரிமருப்பு எழிற் கலை |
|
புள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண், |
|
கோடுடைக் கையர், துளர் எறி வினைஞர், |
|
அரியல் ஆர்கையர், விளைமகிழ் தூங்க, |
|
15 |
செல்கதிர் மழுகிய உருவ ஞாயிற்றுச் |
செக்கர் வானம் சென்ற பொழுதில், |
|
கற் பால் அருவியின் ஒலிக்கும் நல் தேர்த் |
|
தார் மணி பல உடன் இயம்ப |
|
சீர் மிகு குருசில்! நீ வந்து நின்றதுவே. |
|
தலைமகன் வினைவயிற் பிரிந்து வந்து எய்திய இடத்து, தோழி புல்லு மகிழ்வு உரைத்தது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
கான் உயர் மருங்கில் கவலை அல்லது, |
|
வானம் வேண்டா வில் ஏர் உழவர் |
|
பெரு நாள் வேட்டம், கிளை எழ வாய்த்த, | |
பொரு களத்து ஒழிந்த குருதிச் செவ் வாய், |
|
5 |
பொறித்த போலும் வால் நிற எருத்தின், |
அணிந்த போலும் செஞ் செவி, எருவை; |
|
குறும் பொறை எழுந்த நெடுந் தாள் யாஅத்து |
|
அருங் கவட்டு உயர்சினைப் பிள்ளை ஊட்ட, |
|
விரைந்து வாய் வழுக்கிய கொழுங் கண் ஊன் தடி |
|
10 |
கொல் பசி முது நரி வல்சி ஆகும் |
சுரன் நமக்கு எளியமன்னே; நல் மனைப் |
|
பல் மாண் தங்கிய சாயல், இன் மொழி, |
|
முருந்து ஏர் முறுவல், இளையோள் |
|
பெருந் தோள் இன் துயில் கைவிடுகலனே. |
|
பொருள் வலித்த நெஞ்சிற்குச் சொல்லி, தலைமகன் செலவு அழுங்கியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
என் எனப்படும்கொல் தோழி! நல் மகிழ்ப் |
|
பேடிப் பெண் கொண்டு ஆடுகை கடுப்ப, |
|
நகுவரப் பணைத்த திரி மருப்பு எருமை |
|
மயிர்க் கவின் கொண்ட மாத் தோல் இரும் புறம், |
|
5 |
சிறு தொழில் மகாஅர் ஏறி, சேணோர்க்குத் |
துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன், |
|
மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன |
|
அம் மா மேனி, ஆய்இழை, மகளிர் |
|
ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்து |
|
10 |
ஆராக் காதலொடு தார் இடை குழைய, |
முழவு முகம் புலரா விழவுடை வியல் நகர், |
|
வதுவை மேவலன் ஆகலின், அது புலந்து, |
|
அடுபோர் வேளிர் வீரை முன்துறை, |
|
நெடு வெள் உப்பின் நிரம்பாக் குப்பை, |
|
15 |
பெரு பெயற்கு உருகியாஅங்கு, |
திருந்துஇழை நெகிழ்ந்தன, தட மென் தோளே? |
|
வாயில் வேண்டிச் சென்ற விறலிக்குத் தலைமகள் வாயில் மறுத்தது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ, |
|
தேரொடு மறுகியும், பணி மொழி பயிற்றியும், |
|
கெடாஅத் தீயின் உரு கெழு செல்லூர், |
|
கடாஅ யானைக் குழூஉச் சமம் ததைய, |
|
5 |
மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன் |
முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி, |
|
கயிறு அரை யாத்த காண் தகு வனப்பின், |
|
அருங் கடி நெடுந் தூண் போல, யாவரும் |
|
காணலாகா மாண் எழில் ஆகம் |
|
10 |
உள்ளுதொறும் பனிக்கும் நெஞ்சினை, நீயே |
நெடும் புற நிலையினை, வருந்தினைஆயின், |
|
முழங்கு கடல் ஓதம் காலைக் கொட்கும், |
|
பழம் பல் நெல்லின் ஊணூர் ஆங்கண், |
|
நோலா இரும் புள் போல, நெஞ்சு அமர்ந்து, |
|
15 |
காதல் மாறாக் காமர் புணர்ச்சியின், |
இருங் கழி முகந்த செங் கோல் அவ் வலை |
|
முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும் |
|
நெடுங் கதிர்க் கழனித் தண் சாய்க்கானத்து, |
|
யாணர்த் தண் பணை உறும் என, கானல் |
|
20 |
ஆயம் ஆய்ந்த சாய் இறைப் பணைத் தோள் |
நல் எழில் சிதையா ஏமம் |
|
சொல் இனித் தெய்ய, யாம் தெளியுமாறே. |
|
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டுத் தோழி சொல்லியது. -மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
'உயிரினும் சிறந்த ஒண் பொருள் தருமார் |
|
நன்று புரி காட்சியர் சென்றனர், அவர்' என |
|
மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல் |
|
நீ நற்கு அறிந்தனைஆயின், நீங்கி, |
|
5 |
மழை பெயல் மறந்த கழை திரங்கு இயவில், |
செல் சாத்து எறியும் பண்பு இல் வாழ்க்கை |
|
வல் வில் இளையர் தலைவர், எல் உற, |
|
வரி கிளர் பணைத் தோள், வயிறு அணி திதலை, |
|
அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில், |
|
10 |
மகிழ் நொடை பெறாஅராகி, நனை கவுள் |
கான யானை வெண் கோடு சுட்டி, |
|
மன்று ஓடு புதல்வன் புன் தலை நீவும் |
|
அரு முனைப் பாக்கத்து அல்கி, வைகுற, |
|
நிழல் படக் கவின்ற நீள்அரை இலவத்து |
|
15 |
அழல் அகைந்தன்ன அலங்குசினை ஒண் பூக் |
குழல் இசைத் தும்பி ஆர்க்கும் ஆங்கண், |
|
குறும் பொறை உணங்கும் ததர் வெள் என்பு |
|
கடுங் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும் |
|
கல் நெடுங் கவலைய கானம் நீந்தி, |
|
20 |
அம் மா அரிவை ஒழிய, |
சென்மோ நெஞ்சம்! வாரலென் யானே. |
|
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறி, தலைமகன் சொல்லிச், செலவு அழுங்கியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
உலகு கிளர்ந்தன்ன உரு கெழு வங்கம் |
|
புலவுத் திரைப் பெருங் கடல் நீர் இடைப் போழ, |
|
இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி, |
|
விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்ட, |
|
5 |
கோடு உயர் திணி மணல் அகன் துறை, நீகான் |
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய, |
|
ஆள் வினைப் பிரிந்த காதலர் நாள் பல |
|
கழியாமையே, அழி படர் அகல, |
|
வருவர்மன்னால் தோழி! தண் பணைப் |
|
10 |
பொரு புனல் வைப்பின் நம் ஊர் ஆங்கண், |
கருவிளை முரணிய தண் புதல் பகன்றை |
|
பெரு வளம் மலர அல்லி தீண்டி, |
|
பலவுக் காய்ப் புறத்த பசும் பழப் பாகல் |
|
கூதள மூதிலைக் கொடி நிரைத் தூங்க, |
|
15 |
அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை |
கடி மனை மாடத்துக் கங்குல் வீச, |
|
'திருந்துஇழை நெகிழ்ந்து பெருங் கவின் சாய, |
|
நிரை வளை ஊருந் தோள்' என, |
|
உரையொடு செல்லும் அன்பினர்ப் பெறினே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூரத், தோழிக்குச் சொல்லியது. -மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
தொடி தோள் இவர்க! எவ்வமும் தீர்க! |
|
நெறி இருங் கதுப்பின் கோதையும் புனைக! |
|
ஏறுடை இன நிரை பெயர, பெயராது, |
|
செறி சுரை வெள் வேல் மழவர்த் தாங்கிய |
|
5 |
தறுகணாளர் நல் இசை நிறுமார், |
பிடி மடிந்தன்ன குறும்பொறை மருங்கின், |
|
நட்ட போலும் நடாஅ நெடுங் கல் |
|
அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி, |
|
நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய |
|
10 |
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின் |
செம் பூங் கரந்தை புனைந்த கண்ணி |
|
வரி வண்டு ஆர்ப்பச் சூட்டி, கழற் கால் |
|
இளையர் பதிப் பெயரும் அருஞ் சுரம் இறந்தோர், |
|
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள், |
|
15 |
பொலங்காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் |
நலம் கேழ் மாக் குரல் குழையொடு துயல்வர, |
|
பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து |
|
வயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்ப, |
|
வண்டற் பாவை உண்துறைத் தரீஇ, |
|
20 |
திரு நுதல் மகளிர் குரவை அயரும் |
பெரு நீர்க் கானல் தழீஇய இருக்கை, |
|
வாணன் சிறுகுடி, வணங்கு கதிர் நெல்லின் |
|
யாணர்த் தண் பணைப் போது வாய் அவிழ்ந்த |
|
ஒண் செங் கழுநீர் அன்ன, நின் |
|
25 |
கண் பனி துடைமார் வந்தனர், விரைந்தே. |
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
நல் நெடுங் கதுப்பொடு பெருந் தோள் நீவி, |
|
நின் இவண் ஒழிதல் அஞ்சிய என்னினும், |
|
செலவு தலைக்கொண்ட பெரு விதுப்பு உறுவி |
|
பல் கவர் மருப்பின் முது மான் போக்கி, |
|
5 |
சில் உணாத் தந்த சீறூர்ப் பெண்டிர் |
திரிவயின், தெவுட்டும் சேண் புலக் குடிஞைப் |
|
பைதல் மென் குரல் ஐது வந்து இசைத்தொறும், |
|
போகுநர் புலம்பும் ஆறே ஏகுதற்கு |
|
அரிய ஆகும் என்னாமை, கரி மரம் |
|
10 |
கண் அகை இளங் குழை கால்முதல் கவினி, |
விசும்புடன் இருண்டு, வெம்மை நீங்க, |
|
பசுங் கண் வானம் பாய் தளி பொழிந்தென, |
|
புல் நுகும்பு எடுத்த நல் நெடுங் கானத்து, |
|
ஊட்டுறு பஞ்சிப் பிசிர் பரந்தன்ன |
|
15 |
வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப, |
இனிய ஆகுக தணிந்தே |
|
இன்னா நீப்பின் நின்னொடு செலற்கே. |
|
உடன்போக்கு வலித்த தோழி தலைமகற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
பானாட் கங்குலும், பெரும் புன் மாலையும், |
|
ஆனா நோயொடு அழி படர்க் கலங்கி, |
|
நம்வயின் இனையும் இடும்பை கைம்மிக, |
|
என்னை ஆகுமோ, நெஞ்சே! நம் வயின் |
|
5 |
இருங் கவின் இல்லாப் பெரும் புன் தாடி, |
கடுங்கண், மறவர் பகழி மாய்த்தென, |
|
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல், |
|
பெயர் பயம் படரத் தோன்று குயில் எழுத்து |
|
இயைபுடன் நோக்கல்செல்லாது, அசைவுடன் |
|
10 |
ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும் |
சூர் முதல் இருந்த ஓமை அம் புறவின், |
|
நீர் முள் வேலிப் புலவு நாறு முன்றில், |
|
எழுதியன்ன கொடி படு வெருகின் |
|
பூளை அன்ன பொங்கு மயிர்ப் பிள்ளை, |
|
15 |
மதி சூழ் மீனின், தாய் வழிப்படூஉம் |
சிறுகுடி மறவர் சேக் கோள் தண்ணுமைக்கு | |
எருவைச் சேவல் இருஞ் சிறை பெயர்க்கும் |
|
வெரு வரு கானம், நம்மொடு, |
|
'வருவல்' என்றோள் மகிழ் மட நோக்கே? |
|
பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
நெஞ்சு உடம்படுதலின் ஒன்று புரிந்து அடங்கி, |
|
இரவின் வரூஉம் இடும்பை நீங்க, |
|
வரையக் கருதும்ஆயின், பெரிது உவந்து, |
|
ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம், |
|
5 |
காந்தள் அம் சிறுகுடிக் கௌவை பேணாது, |
அரி மதர் மழைக் கண் சிவப்ப, நாளைப் |
|
பெரு மலை நாடன் மார்பு புணை ஆக, |
|
ஆடுகம் வம்மோ காதல் அம் தோழி! |
|
வேய் பயில் அடுக்கம் புதையக் கால் வீழ்த்து, |
|
10 |
இன் இசை முரசின் இரங்கி, ஒன்னார் |
ஓடு புறம் கண்ட, தாள் தோய் தடக் கை, |
|
வெல் போர் வழுதி செல் சமத்து உயர்த்த |
|
அடு புகழ் எஃகம் போல, |
|
கொடி பட மின்னிப் பாயின்றால், மழையே! |
|
தலைமகன் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது; தலைமகள் சொல்லியதூஉம் ஆம். -மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
வாங்கு அமை புரையும் வீங்கு இறைப் பணைத் தோள், |
|
சில் சுணங்கு அணிந்த, பல் பூண், மென் முலை, |
|
நல் எழில், ஆகம் புல்லுதல் நயந்து, |
|
மரம் கோள் உமண் மகன் பேரும் பருதிப் |
|
5 |
புன் தலை சிதைத்த வன் தலை நடுகல் |
கண்ணி வாடிய மண்ணா மருங்குல், |
|
கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து, அவ் |
|
ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும் |
|
கண் பொரி கவலைய கானத்து ஆங்கண், |
|
10 |
நனந்தலை யாஅத்து அம் தளிர்ப் பெருஞ் சினை, |
இல் போல் நீழல் செல் வெயில் ஒழிமார், |
|
நெடுஞ் செவிக் கழுதைக் குறுங் கால் ஏற்றைப் |
|
புறம் நிறை பண்டத்துப் பொறை அசாஅக் களைந்த |
|
பெயர் படை கொள்ளார்க்கு உயவுத் துணை ஆகி, |
|
15 |
உயர்ந்த ஆள்வினை புரிந்தோய்; பெயர்ந்து நின்று |
உள்ளினை வாழி, என் நெஞ்சே! கள்ளின் |
|
மகிழின் மகிழ்ந்த அரி மதர் மழைக் கண், |
|
சில் மொழிப் பொலிந்த துவர் வாய், |
|
பல் மாண் பேதையின் பிரிந்த நீயே. |
|
தலைமகன் இடைச் சுரத்து மீளக் கருதிய நெஞ்சினைக் கழறிப் போயது. -மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
நீலத்து அன்ன நிறம் கிளர் எருத்தின், |
|
காமர் பீலி, ஆய் மயில் தோகை |
|
இன் தீம் குரல துவன்றி, மென் சீர் |
|
ஆடு தகை எழில் நலம் கடுப்பக் கூடி, |
|
5 |
கண் நேர் இதழ, தண் நறுங் குவளைக் |
குறுந் தொடர் அடைச்சிய நறும் பல் கூழை |
|
நீடு நீர் நெடுஞ் சுனை ஆயமொடு ஆடாய், |
|
உயங்கிய மனத்தையாகி, புலம்பு கொண்டு, |
|
இன்னை ஆகிய நின் நிறம் நோக்கி, |
|
10 |
அன்னை வினவினள்ஆயின், அன்னோ! |
என் என உரைக்கோ யானே துன்னிய |
|
பெரு வரை இழிதரும் நெடு வெள் அருவி, |
|
ஓடை யானை உயர் மிசை எடுத்த |
|
ஆடு கொடி கடுப்ப, தோன்றும் |
|
15 |
கோடு உயர் வெற்பன் உறீஇய நோயே? |
பகலே சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
அகல் வாய் வானம் மால் இருள் பரப்ப, |
|
பகல் ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடு |
|
சினவல் போகிய புன்கண் மாலை, |
|
அத்த நடுகல் ஆள் என உதைத்த |
|
5 |
கான யானைக் கதுவாய் வள் உகிர், |
இரும் பனை இதக்கையின், ஒடியும் ஆங்கண், |
|
கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை, |
|
வருநர் இன்மையின் களையுநர்க் காணா |
|
என்றூழ் வெஞ் சுரம் தந்த நீயே |
|
10 |
துயர் செய்து ஆற்றாயாகி, பெயர்பு, ஆங்கு |
உள்ளினை வாழிய, நெஞ்சே! வென் வேல் |
|
மா வண் கழுவுள் காமூர் ஆங்கண், |
|
பூதம் தந்த பொரி அரை வேங்கைத் |
|
தண் கமழ் புது மலர் நாறும் |
|
15 |
அம் சில் ஓதி ஆய் மடத் தகையே. |
தலைமகன் இடைச் சுரத்து நின்று சொல்லியது.-மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
தொடுதோற் கானவன் சூடுறு வியன் புனம், |
|
கரி புறம் கழீஇய பெரும் பாட்டு ஈரத்து, |
|
தோடு வளர் பைந் தினை நீடு குரல் காக்கும் |
|
ஒண் தொடி மகளிர்க்கு ஊசலாக |
|
5 |
ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய |
குறும்பொறை அயலது நெடுந் தாள் வேங்கை, |
|
மட மயிற் குடுமியின், தோன்றும் நாடன் |
|
உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலைக் |
|
குரங்கு அறிவாரா மரம் பயில் இறும்பில், |
|
10 |
கடி சுனைத் தெளிந்த மணி மருள் தீம் நீர் |
பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடி, |
|
பல் நாள் உம்பர்ப் பெயர்ந்து, சில் நாள் |
|
கழியாமையே வழிவழிப் பெருகி, |
|
அம் பணை விளைந்த தேக் கட் தேறல் |
|
15 |
வண்டு படு கண்ணியர் மகிழும் சீறூர், |
எவன்கொல் வாழி, தோழி! கொங்கர் |
|
மணி அரை யாத்து மறுகின் ஆடும் |
|
உள்ளி விழவின் அன்ன, |
|
அலர் ஆகின்று, அது பலர் வாய்ப் பட்டே? |
|
பகலே சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. -மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
தேர் சேண் நீக்கி, தமியன் வந்து, 'நும் |
|
ஊர் யாது?' என்ன, நணி நணி ஒதுங்கி, |
|
முன் நாள் போகிய துறைவன், நெருநை, |
|
அகல் இலை நாவல் உண்துறை உதிர்த்த |
|
5 |
கனி கவின் சிதைய வாங்கிக் கொண்டு, தன், |
தாழை வேர் அளை, வீழ் துணைக்கு இடூஉம் |
|
அலவற் காட்டி, 'நற்பாற்று இது' என, |
|
நினைந்த நெஞ்சமொடு, நெடிது பெயர்ந்தோனே; |
|
உதுக் காண் தோன்றும், தேரே இன்றும்; |
|
10 |
நாம் எதிர் கொள்ளாம்ஆயின், தான் அது |
துணிகுவன் போலாம்; நாணு மிக உடையன்; |
|
வெண் மணல் நெடுங் கோட்டு மறைகோ? |
|
அம்ம, தோழி! கூறுமதி நீயே. |
|
பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
திருந்துஇழை நெகிழ்ந்து, பெருந் தோள் சாஅய், |
|
அரி மதர் மழைக் கண் கலுழச் செல்வீர்! |
|
வருவீர் ஆகுதல் உரைமின் மன்னோ |
|
பூக் கண் பறைந்த புன் தலைச் சிறாஅரொடு |
|
5 |
அவ் வரி கொன்ற கறை சேர் வள் உகிர்ப் |
பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய |
|
பூந் துகில் இமைக்கும், பொலன் காழ் அல்குல், |
|
அவ் வரி சிதைய நோக்கி, வெவ் வினைப் |
|
பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ, |
|
10 |
வரிப் புற இதலின் மணிக் கட் பேடை |
நுண் பொறி அணிந்த எருத்தின், கூர் முட் |
|
செங் கால், சேவல் பயிரும் ஆங்கண், |
|
வில் ஈண்டு அருஞ் சமம் ததைய நூறி, |
|
நல் இசை நிறுத்த நாணுடை மறவர் |
|
15 |
நிரை நிலை நடுகல் பொருந்தி, இமையாது, |
இரை நசைஇக் கிடந்த முது வாய்ப் பல்லி |
|
சிறிய தெற்றுவதுஆயின், 'பெரிய |
|
ஓடை யானை உயர்ந்தோர்ஆயினும், |
|
நின்றாங்குப் பெயரும் கானம் |
|
20 |
சென்றோர்மன்' என இருக்கிற்போர்க்கே. |
தலைமகளது குறிப்பு அறிந்து, தோழி தலைமகனைச் செலவு அழுங்கச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
மேல் |