மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார் |
'இன்பமும் இடும்பையும், புணர்வும் பிரிவும், |
|
நன்பகல் அமையமும் இரவும் போல, |
|
வேறு வேறு இயல ஆகி, மாறு எதிர்ந்து, |
|
உள' என உணர்ந்தனைஆயின், ஒரூஉம் |
|
5 |
இன்னா வெஞ் சுரம், நல் நசை துரப்ப, |
துன்னலும் தகுமோ? துணிவு இல் நெஞ்சே! |
|
நீ செல வலித்தனைஆயின், யாவதும் |
|
நினைதலும் செய்தியோ எம்மே கனை கதிர் |
|
ஆவி அவ் வரி நீர் என நசைஇ, |
|
10 |
மா தவப் பரிக்கும் மரல் திரங்கு நனந்தலை, |
களர் கால் யாத்த கண் அகல் பரப்பின் |
|
செவ் வரை கொழி நீர் கடுப்ப, அரவின் |
|
அவ் வரி உரிவை அணவரும் மருங்கின், |
|
புற்று அரை யாத்த புலர் சினை மரத்த, |
|
15 |
மைந் நிற உருவின், மணிக் கண், காக்கை |
பைந் நிணம் கவரும் படு பிணக் கவலைச் |
|
சென்றோர் செல்புறத்து இரங்கார் கொன்றோர், |
|
கோல் கழிபு இரங்கும் அதர, |
|
வேய் பயில் அழுவம் இறந்த பின்னே? |
|
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறியது. - மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார் | |
உரை |
மேல் |