மாமூலனார் |
'வண்டு படத் ததைந்த கண்ணி, ஒண் கழல், |
|
உருவக் குதிரை மழவர் ஓட்டிய |
|
முருகன் நற் போர் நெடு வேள் ஆவி, |
|
அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண், |
|
5 |
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய |
கல் போல் பிரியலம்' என்ற சொல்தாம் |
|
மறந்தனர்கொல்லோ தோழி! சிறந்த |
|
வேய் மருள் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டுப் |
|
பொலங்கல வெறுக்கை தருமார் நிலம் பக, |
|
10 |
அழல் போல் வெங்கதிர் பைது அறத் தெறுதலின், |
நிழல் தேய்ந்து உலறிய மரத்த; அறை காய்பு, |
|
அறுநீர்ப் பைஞ் சுனை ஆம் அறப் புலர்தலின், |
|
உகு நெல் பொரியும் வெம்மைய; யாவரும் |
|
வழங்குநர் இன்மையின், வௌவுநர் மடிய, |
|
15 |
சுரம் புல்லென்ற ஆற்ற; அலங்கு சினை |
நார் இல் முருங்கை நவிரல் வான் பூச் |
|
சூரல்அம் கடு வளி எடுப்ப, ஆருற்று, |
|
உடை திரைப் பிதிர்வின் பொங்கி, முன் |
|
கடல் போல் தோன்றல காடு இறந்தோரே? |
|
பிரிவிடை ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது-மாமூலனார் | |
உரை |
எம் வெங் காமம் இயைவது ஆயின், |
|
மெய்ம் மலி பெரும் பூண், செம்மற் கோசர் |
|
கொம்மைஅம் பசுங் காய்க் குடுமி விளைந்த |
|
பாகல் ஆர்கைப் பறைக் கட் பீலித் |
|
5 |
தோகைக் காவின் துளுநாட்டு அன்ன, |
வறுங் கை வம்பலர்த் தாங்கும் பண்பின் |
|
செறிந்த சேரிச் செம்மல் மூதூர், |
|
அறிந்த மாக்கட்டு ஆகுகதில்ல |
|
தோழிமாரும் யானும் புலம்ப, |
|
10 |
சூழி யானைச் சுடர்ப் பூண் நன்னன் |
பாழி அன்ன கடியுடை வியல் நகர்ச் |
|
செறிந்த காப்பு இகந்து, அவனொடு போகி, |
|
அத்த இருப்பை ஆர் கழல் புதுப் பூத் |
|
துய்த்த வாய, துகள் நிலம் பரக்க, |
|
15 |
கொன்றை அம் சினைக் குழற்பழம் கொழுதி, |
வன் கை எண்கின் வய நிரை பரக்கும் |
|
இன் துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்கு |
|
குன்ற வேயின் திரண்ட என் |
|
மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே! |
|
மகட்போக்கிய தாய்சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் மண்டிலம் |
|
புலங்கடை மடங்கத் தெறுதலின், ஞொள்கி, |
|
'நிலம் புடைபெயர்வது அன்றுகொல், இன்று?' என, |
|
மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து, |
|
5 |
இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து |
மேற் கவட்டு இருந்த பார்ப்பினங்கட்கு, |
|
கல்லுடைக் குறும்பின் வயவர் வில் இட, |
|
நிண வரிக் குறைந்த நிறத்த அதர்தொறும், |
|
கணவிர மாலை இடூஉக் கழிந்தன்ன |
|
10 |
புண் உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர் |
கண் உமிழ் கழுகின் கானம் நீந்தி, |
|
'சென்றார்' என்பு இலர் தோழி! வென்றியொடு |
|
வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கைத் |
|
தமிழ் கெழு மூவர் காக்கும் |
|
15 |
மொழி பெயர் தேஎத்த பல் மலை இறந்தே. |
'பிரிவிடை ஆற்றாளாயினாள்' என்று பிறர் சொல்லக் கேட்டு, வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
காய்ந்து செலற் கனலி கல் பகத் தெறுதலின், |
|
ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை, |
|
உளி முக வெம் பரல் அடி வருத்துறாலின், |
|
விளி முறை அறியா வேய் கரி கானம், |
|
5 |
வயக் களிற்று அன்ன காளையொடு என் மகள் |
கழிந்ததற்கு அழிந்தன்றோஇலெனே! ஒழிந்து யாம் |
|
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அசைஇ, |
|
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு |
|
கண்படை பெறேன், கனவ ஒண் படைக் |
|
10 |
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப் |
பொருது புண் நாணிய சேரலாதன் |
|
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்தென, |
|
இன்னா இன் உரை கேட்ட சான்றோர் |
|
அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர், |
|
15 |
பெரும்பிறிது ஆகியாங்கு பிரிந்து இவண் |
காதல் வேண்டி, எற் துறந்து |
|
போதல்செல்லா என் உயிரொடு புலந்தே. |
|
புணர்ந்துடன் போன தலைமகட்கு இரங்கிய தாய் தெருட்டும் அயலிலாட்டியார்க்கு உரைத்தது. - மாமூலனார் | |
உரை |
'நோற்றோர்மன்ற தாமே கூற்றம் |
|
கோளுற விளியார், பிறர் கொள விளிந்தோர்' எனத் |
|
தாள் வலம்படுப்பச் சேட் புலம் படர்ந்தோர் |
|
நாள் இழை நெடுஞ் சுவர் நோக்கி, நோய் உழந்து |
|
5 |
ஆழல் வாழி, தோழி! தாழாது, |
உரும் எனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங் கால் |
|
வரி மாண் நோன் ஞாண் வன் சிலைக் கொளீஇ, |
|
அரு நிறத்து அழுத்திய அம்பினர் பலருடன் |
|
அண்ணல் யானை வெண் கோடு கொண்டு, |
|
10 |
நறவு நொடை நெல்லின் நாள் மகிழ் அயரும் |
கழல் புனை திருந்துஅடிக் கள்வர் கோமான் |
|
மழ புலம் வணக்கிய மா வண் புல்லி |
|
விழவுடை விழுச் சீர் வேங்கடம் பெறினும், |
|
பழகுவர்ஆதலோ அரிதே முனாஅது |
|
15 |
முழவு உறழ் திணி தோள் நெடு வேள் ஆவி |
பொன்னுடை நெடு நகர்ப் பொதினி அன்ன நின் |
|
ஒண் கேழ் வன முலைப் பொலிந்த |
|
நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே. |
|
தலைமகன் பொருள்வயிற் பிரிய, வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும் |
|
அன்னை சொல்லும் உய்கம்; என்னதூஉம் |
|
ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழிச் |
|
சேரிஅம் பெண்டிர் கௌவையும் ஒழிகம்; |
|
5 |
நாடு கண் அகற்றிய உதியஞ்சேரற் |
பாடிச் சென்ற பரிசிலர் போல |
|
உவ இனி வாழி, தோழி! அவரே, |
|
பொம்மல் ஓதி! நம்மொடு ஒராங்குச் |
|
செலவு அயர்ந்தனரால் இன்றே மலைதொறும் |
|
10 |
மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி, |
மீன் கொள் பரதவர் கொடுந் திமில் நளி சுடர் |
|
வான் தோய் புணரிமிசைக் கண்டாங்கு, |
|
மேவரத் தோன்றும் யாஅ உயர் நனந்தலை |
|
உயவல் யானை வெரிநுச் சென்றன்ன |
|
15 |
கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி, |
காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல் |
|
ஆறு கடிகொள்ளும் அருஞ் சுரம்; 'பணைத் தோள், |
|
நாறு ஐங் கூந்தல், கொம்மை வரி முலை, |
|
நிரை இதழ் உண்கண், மகளிர்க்கு |
|
20 |
அரியவால்' என அழுங்கிய செலவே! |
வேறுப்பட்ட தலைமகட்குத் தலைமகன் உடன்போக்கு வலித்தமை தோழி சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
விளங்குபகல் உதவிய பல் கதிர் ஞாயிறு |
|
வளம் கெழு மா மலை பயம் கெடத் தெறுதலின், |
|
அருவி ஆன்ற பெரு வரை மருங்கில் |
|
சூர்ச் சுனை துழைஇ நீர்ப்பயம் காணாது, |
|
5 |
பாசி தின்ற பைங் கண் யானை |
ஓய் பசிப் பிடியொடு ஒருதிறன் ஒடுங்க, |
|
வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனந்தலை |
|
அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும், |
|
பெரும் பேர் அன்பினர் தோழி!-இருங் கேழ் |
|
10 |
இரலை சேக்கும், பரல் உயர் பதுக்கைக் |
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த |
|
நெடுங் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர், |
|
விசிபிணி முழவின் குட்டுவன் காப்ப, |
|
பசி என அறியாப் பணை பயில் இருக்கை, |
|
15 |
தட மருப்பு எருமை தாமரை முனையின், |
முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும், |
|
குடநாடு பெறினும் தவிரலர் |
|
மடமான் நோக்கி! நின் மாண் நலம் மறந்தே. |
|
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார் | |
உரை |
'கள்ளி அம் காட்ட புள்ளி அம் பொறிக் கலை |
|
வறன் உறல் அம் கோடு உதிர, வலம் கடந்து, |
|
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை, |
|
இரவுக் குறும்பு அலற நூறி, நிரை பகுத்து, |
|
5 |
இருங் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும் |
கொலை வில் ஆடவர் போல, பலவுடன் |
|
பெருந் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும் |
|
அருஞ் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும், |
|
இருங் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த |
|
10 |
நுணங்கு கண் சிறு கோல் வணங்குஇறை மகளிரொடு |
அகவுநர்ப் புரந்த அன்பின், கழல் தொடி, |
|
நறவு மகிழ் இருக்கை, நன்னன் வேண்மான் |
|
வயலை வேலி வியலூர் அன்ன, நின் |
|
அலர்முலை ஆகம் புலம்ப, பல நினைந்து, |
|
15 |
ஆழல்' என்றி தோழி! யாழ என் |
கண் பனி நிறுத்தல் எளிதோ குரவு மலர்ந்து, |
|
அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில் |
|
அறல் அவிர் வார் மணல் அகல்யாற்று அடைகரை, |
|
துறை அணி மருதமொடு இகல் கொள ஓங்கி, |
|
20 |
கலிழ் தளிர் அணிந்த இருஞ் சினை மாஅத்து |
இணர் ததை புதுப் பூ நிரைத்த பொங்கர், |
|
புகை புரை அம் மஞ்சு ஊர, |
|
நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே? |
|
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
அம்ம வாழி, தோழி! 'இம்மை |
|
நன்று செய் மருங்கில் தீது இல்' என்னும் |
|
தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்றுகொல்? |
|
தகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு, சுரிந்த |
|
5 |
சுவல் மாய் பித்தை, செங் கண், மழவர் |
வாய்ப் பகை கடியும் மண்ணொடு கடுந் திறல் |
|
தீப் படு சிறு கோல் வில்லொடு பற்றி, |
|
நுரை தெரி மத்தம் கொளீஇ, நிரைப் புறத்து |
|
அடி புதை தொடுதோல் பறைய ஏகி, |
|
10 |
கடி புலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர், |
இனம் தலைபெயர்க்கும் நனந்தலைப் பெருங் காட்டு, |
|
அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல, |
|
பகலிடை நின்ற பல் கதிர் ஞாயிற்று |
|
உருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை, |
|
15 |
புன் கால் முருங்கை ஊழ் கழி பல் மலர், |
தண் கார் ஆலியின், தாவன உதிரும் |
|
பனி படு பல் மலை இறந்தோர்க்கு |
|
முனிதகு பண்பு யாம் செய்தன்றோஇலமே! |
|
பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது; தோழி கிழத்திக்குச் சொல்லியதூஉம் ஆம். - மாமூலனார் | |
உரை |
அழியா விழவின், அஞ்சுவரு மூதூர்ப் |
|
பழி இலர்ஆயினும், பலர் புறங்கூறும் |
|
அம்பல் ஒழுக்கமும் ஆகியர்; வெஞ் சொல் |
|
சேரிஅம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக; |
|
5 |
நுண் பூண் எருமை குட நாட்டன்ன என் |
ஆய்நலம் தொலையினும் தொலைக; என்றும் |
|
நோய் இலராக, நம் காதலர் வாய் வாள் |
|
எவ்வி வீழ்ந்த செருவில் பாணர் |
|
கைதொழு மரபின் முன் பரித்து இடூஉப் பழிச்சிய |
|
10 |
வள் உயிர் வணர் மருப்பு அன்ன, ஒள் இணர்ச் |
சுடர்ப் பூங் கொன்றை ஊழுறு விளைநெற்று |
|
அறைமிசைத் தாஅம் அத்த நீளிடை, |
|
பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை, |
|
சினம் மிகு முன்பின், வாம் மான், அஞ்சி |
|
15 |
இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை, |
நன்னர் ஆய்கவின் தொலைய, சேய் நாட்டு, |
|
நம் நீத்து உறையும் பொருட்பிணிக் |
|
கூடாமையின், நீடியோரே. |
|
பிரிவிடை வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
இலங்கு வளை நெகிழச் சாஅய், அல்கலும், |
|
கலங்குஅஞர் உழந்து, நாம் இவண் ஒழிய |
|
வலம் படு முரசிற் சேரலாதன் |
|
முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து, இமயத்து |
|
5 |
முன்னோர் மருள வணங்குவில் பொறித்து, |
நல் நகர் மரந்தை முற்றத்து ஒன்னார் |
|
பணி திறை தந்த பாடுசால் நன்கலம் |
|
பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல் |
|
ஒன்று வாய் நிறையக் குவைஇ, அன்று அவண் |
|
10 |
நிலம் தினத் துறந்த நிதியத்து அன்ன |
ஒரு நாள் ஒரு பகற் பெறினும், வழிநாள் |
|
தங்கலர் வாழி, தோழி! செங் கோற் |
|
கருங் கால் மராத்து வாஅல் மெல் இணர் |
|
சுரிந்து வணர் பித்தை பொலியச் சூடி, |
|
15 |
கல்லா மழவர் வில் இடம் தழீஇ, |
வருநர்ப் பார்க்கும் வெருவரு கவலை |
|
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும், |
|
பழி தீர் காதலர் சென்ற நாட்டே. |
|
பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார் | |
உரை |
தோள் புலம்பு அகலத் துஞ்சி, நம்மொடு |
|
நாள் பல நீடிய கரந்து உறை புணர்ச்சி |
|
நாண் உடைமையின் நீங்கி, சேய் நாட்டு |
|
அரும் பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி, |
|
5 |
நம் உயர்வு உள்ளினர் காதலர் கறுத்தோர் |
தெம் முனை சிதைத்த, கடும் பரிப் புரவி, |
|
வார் கழற் பொலிந்த வன்கண் மழவர் |
|
பூந் தொடை விழவின் தலை நாள் அன்ன, |
|
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றம் |
|
10 |
புலம்புறும்கொல்லோ தோழி! சேண் ஓங்கு |
அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண், |
|
கல் சேர்பு இருந்த சில் குடிப் பாக்கத்து, |
|
எல் விருந்து அயர, ஏமத்து அல்கி, |
|
மனை உறை கோழி அணல் தாழ்பு அன்ன |
|
15 |
கவை ஒண் தளிர கருங்கால் யாஅத்து |
வேனில் வெற்பின் கானம் காய, |
|
முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆர் இடை, |
|
பனை வெளிறு அருந்து பைங் கண் யானை |
|
ஒண் சுடர் முதிரா இளங் கதிர் அமையத்து, |
|
20 |
கண்படு பாயல் கை ஒடுங்கு அசை நிலை |
வாள் வாய்ச் சுறவின் பனித் துறை நீந்தி, |
|
நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர் |
|
வைகு கடல் அம்பியின் தோன்றும் |
|
மை படு மா மலை விலங்கிய சுரனே? |
|
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தலைமகட்குத் தோழி சொல்லியதூஉம் ஆம். - மாமூலனார் | |
உரை |
மா மலர் வண்ணம் இழந்த கண்ணும், |
|
பூ நெகிழ் அணையின் சாஅய தோளும், |
|
நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த |
|
தொல் நலம் இழந்த துயரமொடு, என்னதூஉம் |
|
5 |
இனையல் வாழி, தோழி! முனை எழ |
முன்னுவர் ஓட்டிய முரண் மிகு திருவின், |
|
மறம் மிகு தானை, கண்ணன் எழினி |
|
தேம் முது குன்றம் இறந்தனர் ஆயினும், |
|
நீடலர் யாழ, நின் நிரை வளை நெகிழ |
|
10 |
தோள் தாழ்பு இருளிய குவை இருங் கூந்தல் |
மடவோள் தழீஇய விறலோன் மார்பில் |
|
புன் தலைப் புதல்வன் ஊர்பு இழிந்தாங்கு, |
|
கடுஞ்சூல் மடப் பிடி தழீஇய வெண் கோட்டு |
|
இனம்சால் வேழம், கன்று ஊர்பு இழிதர, |
|
15 |
பள்ளி கொள்ளும் பனிச் சுரம் நீந்தி, |
ஒள் இணர்க் கொன்றை ஓங்கு மலை அத்தம் |
|
வினை வலியுறூஉம் நெஞ்சமொடு |
|
இனையர் ஆகி, நப் பிரிந்திசினோரே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -மாமூலனார் | |
உரை |
அம்ம, வாழி தோழி! 'பொன்னின் |
|
அவிர் எழில் நுடங்கும் அணி கிளர் ஓடை |
|
வினை நவில் யானை விறற் போர்ப் பாண்டியன் |
|
புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை, |
|
5 |
அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து, |
தழை அணிப் பொலிந்த கோடு ஏந்து அல்குல் |
|
பழையர் மகளிர் பனித் துறைப் பரவ, |
|
பகலோன் மறைந்த அந்தி ஆர் இடை, |
|
உரு கெழு பெருங் கடல் உவவுக் கிளர்ந்தாங்கு, |
|
10 |
அலரும் மன்று பட்டன்றே; அன்னையும் |
பொருந்தாக் கண்ணள், வெய்ய உயிர்க்கும்' என்று |
|
எவன் கையற்றனை, இகுளை? சோழர் |
|
வெண்ணெல் வைப்பின் நல் நாடு பெறினும், |
|
ஆண்டு அமைந்து உறைநர்அல்லர் முனாஅது |
|
15 |
வான் புகு தலைய குன்றத்துக் கவாஅன், |
பெருங் கை எண்கின் பேழ்வாய் ஏற்றை |
|
இருள் துணிந்தன்ன குவவு மயிர்க் குருளைத் |
|
தோல் முலைப் பிணவொடு திளைக்கும் |
|
வேனில் நீடிய சுரன் இறந்தோரே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
கேளாய், எல்ல! தோழி! வாலிய |
|
சுதை விரிந்தன்ன பல் பூ மராஅம் |
|
பறை கண்டன்ன பா அடி நோன் தாள் |
|
திண் நிலை மருப்பின் வயக் களிறு உரிஞுதொறும், |
|
5 |
தண் மழை ஆலியின் தாஅய், உழவர் |
வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும் |
|
பனி படு சோலை வேங்கடத்து உம்பர், |
|
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும், நல்குவர் |
|
குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெரு நிரை |
|
10 |
பிடி படு பூசலின் எய்தாது ஒழிய, |
கடுஞ் சின வேந்தன் ஏவலின் எய்தி, |
|
நெடுஞ் சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட |
|
கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய |
|
வன்கண் கதவின் வெண்மணி வாயில், |
|
15 |
மத்தி நாட்டிய கல் கெழு பனித் துறை, |
நீர் ஒலித்தன்ன பேஎர் |
|
அலர் நமக்கு ஒழிய, அழப் பிரிந்தோரே. |
|
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு தோழி சொல்லியது. -மாமூலனார் | |
உரை |
அலமரல் மழைக் கண் மல்கு பனி வார, நின் |
|
அலர் முலை நனைய, அழாஅல் தோழி! |
|
எரி கவர்பு உண்ட கரி புறப் பெரு நிலம் |
|
பீடு கெழு மருங்கின் ஓடு மழை துறந்தென, |
|
5 |
ஊன் இல் யானை உயங்கும் வேனில், |
மறப் படைக் குதிரை, மாறா மைந்தின், |
|
துறக்கம் எய்திய தொய்யா நல் இசை |
|
முதியர்ப் பேணிய, உதியஞ் சேரல் |
|
பெருஞ் சோறு கொடுத்த ஞான்றை, இரும் பல் |
|
10 |
கூளிச் சுற்றம் குழீஇ இருந்தாங்கு, |
குறியவும் நெடியவும் குன்று தலைமணந்த |
|
சுரன் இறந்து அகன்றனர்ஆயினும், மிக நனி |
|
மடங்கா உள்ளமொடு மதி மயக்குறாஅ, |
|
பொருள்வயின் நீடலோஇலர் நின் |
|
15 |
இருள் ஐங் கூந்தல் இன் துயில் மறந்தே. |
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. -மாமூலனார் | |
உரை |
தூதும் சென்றன; தோளும் செற்றும்; |
|
ஓதி ஒண் நுதல் பசலையும் மாயும்; |
|
வீங்கு இழை நெகிழச் சாஅய், செல்லலொடு |
|
நாம் படர் கூரும் அருந் துயர் கேட்பின், |
|
5 |
நந்தன் வெறுக்கை எய்தினும், மற்று அவண் |
தங்கலர் வாழி, தோழி! வெல் கொடித் |
|
துனை கால் அன்ன புனை தேர்க் கோசர் |
|
தொல் மூதாலத்து அரும் பணைப் பொதியில், |
|
இன் இசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க, |
|
10 |
தெம் முனை சிதைத்த ஞான்றை, மோகூர் |
பணியாமையின், பகை தலைவந்த |
|
மா கெழு தானை வம்ப மோரியர் |
|
புனை தேர் நேமி உருளிய குறைத்த |
|
இலங்கு வெள் அருவிய அறை வாய் உம்பர், |
|
15 |
மாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானை |
வாயுள் தப்பிய, அருங் கேழ், வயப் புலி |
|
மா நிலம் நெளியக் குத்தி, புகலொடு |
|
காப்பு இல வைகும் தேக்கு அமல் சோலை |
|
நிரம்பா நீள் இடைப் போகி, |
|
20 |
அரம் போழ் அவ் வளை நிலை நெகிழ்த்தோரே. |
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு,தோழி சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
புகையின் பொங்கி, வியல் விசும்பு உகந்து, |
|
பனி ஊர் அழற் கொடி கடுப்பத் தோன்றும் |
|
இமயச் செவ் வரை மானும்கொல்லோ? |
|
பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர் |
|
5 |
சீர் மிகு பாடலிக் குழீஇ, கங்கை |
நீர்முதல் கரந்த நிதியம்கொல்லோ? |
|
எவன்கொல்? வாழி, தோழி! வயங்கு ஒளி |
|
நிழற்பால் அறலின் நெறித்த கூந்தல், |
|
குழற் குரல், பாவை இரங்க, நத்துறந்து, |
|
10 |
ஒண் தொடி நெகிழச் சாஅய், செல்லலொடு |
கண் பனி கலுழ்ந்து யாம் ஒழிய, பொறை அடைந்து, |
|
இன் சிலை எழில் ஏறு கெண்டி, புரைய |
|
நிணம் பொதி விழுத் தடி நெருப்பின் வைத்து எடுத்து, |
|
அணங்கு அரு மரபின் பேஎய் போல |
|
15 |
விளர் ஊன் தின்ற வேட்கை நீங்க, |
துகள் அற விளைந்த தோப்பி பருகி, |
|
குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர் |
|
புலாஅல் கையர், பூசா வாயர், |
|
ஒராஅ உருள் துடி குடுமிக் குராலொடு |
|
20 |
மராஅஞ் சீறூர் மருங்கில் தூங்கும் |
செந் நுதல் யானை வேங்கடம் தழீஇ, |
|
வெம் முனை அருஞ் சுரம் இறந்தோர் |
|
நம்மினும் வலிதாத் தூக்கிய பொருளே! |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூர, தோழிக்குச் சொல்லியது. -மாமூலனார் | |
உரை |
செய்வது தெரிந்திசின் தோழி! அல்கலும், |
|
அகலுள் ஆண்மை அச்சு அறக் கூறிய |
|
சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது, |
|
ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி, |
|
5 |
வான் போழ் வல் வில் சுற்றி, நோன் சிலை |
அவ் வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வு இயல் |
|
கனை குரல் இசைக்கும் விரை செலல் கடுங் கணை |
|
முரண் மிகு வடுகர் முன்னுற, மோரியர் |
|
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு |
|
10 |
விண்ணுற ஓங்கிய பனி இருங் குன்றத்து, |
ஒண் கதிர்த் திகிரி உருளிய குறைத்த |
|
அறை இறந்து, அவரோ சென்றனர் |
|
பறை அறைந்தன்ன அலர் நமக்கு ஒழித்தே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
நிலம் நீர் அற்று நீள் சுனை வறப்ப, |
|
குன்று கோடு அகைய, கடுங் கதிர் தெறுதலின், |
|
என்றூழ் நீடிய வேய் படு நனந்தலை, |
|
5 |
வேங்கை வென்ற வெரு வரு பணைத் தோள் |
ஓங்கல் யானை உயங்கி, மதம் தேம்பி, |
|
பல் மர ஒரு சிறைப் பிடியொடு வதியும் |
|
கல்லுடை அதர கானம் நீந்தி, |
|
கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர் |
|
10 |
உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ, முரம்பு இடித்து |
அகல் இடம் குழித்த அகல் வாய்க் கூவல் |
|
ஆறு செல் வம்பலர் அசை விட ஊறும், |
|
புடையல் அம் கழற் கால் புல்லி குன்றத்து, |
|
நடை அருங் கானம் விலங்கி, நோன் சிலைத் |
|
15 |
தொடை அமை பகழித் துவன்று நிலை வடுகர், |
பிழி ஆர் மகிழர், கலி சிறந்துஆர்க்கும் |
|
மொழி பெயர் தேஎம் இறந்தனர்ஆயினும், |
|
பழி தீர் மாண் நலம் தருகுவர்மாதோ |
|
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் புரையும் |
|
20 |
அம் கலுழ் கொண்ட செங் கடை மழைக் கண், |
மணம் கமழ் ஐம்பால், மடந்தை! நின் |
|
அணங்கு நிலைபெற்ற தட மென் தோளே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
இரும் பிடிப் பரிசிலர் போலக் கடை நின்று, |
|
அருங் கடிக் காப்பின் அகல் நகர் ஒரு சிறை, |
|
எழுதியன்ன திண் நிலைக் கதவம் |
|
கழுது வழங்கு அரை நாள், காவலர் மடிந்தென, |
|
5 |
திறந்து நப் புணர்ந்து, 'நும்மின் சிறந்தோர் |
இம்மை உலகத்து இல்' எனப் பல் நாள் |
|
பொம்மல் ஓதி நீவிய காதலொடு, |
|
பயம் தலைப்பெயர்ந்து மாதிரம் வெம்ப, |
|
வருவழி வம்பலர்ப் பேணி, கோவலர் |
|
10 |
மழ விடைப் பூட்டிய குழாஅய்த் தீம் புளி |
செவி அடை தீரத் தேக்கிலைப் பகுக்கும் |
|
புல்லி நல் நாட்டு உம்பர், செல் அருஞ் |
|
சுரம் இறந்து ஏகினும், நீடலர் |
|
அருள் மொழித் தேற்றி, நம் அகன்றிசினோரே. |
|
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
அம்ம! வாழி, தோழி! காதலர், |
|
'வெண் மணல் நிவந்த பொலங் கடை நெடு நகர், |
|
நளி இருங் கங்குல் புணர் குறி வாய்த்த |
|
களவும் கைம்மிக அலர்ந்தன்று; அன்னையும் |
|
5 |
உட்கொண்டு ஓவாள் காக்கும்; பின் பெரிது |
இவண் உறைபு எவனோ? அளியள்!' என்று அருளி, |
|
'ஆடு நடைப் பொலிந்த புகற்சியின், நாடு கோள் |
|
அள்ளனைப் பணித்த அதியன் பின்றை, |
|
வள் உயிர் மாக் கிணை கண் அவிந்தாங்கு, |
|
10 |
மலை கவின் அழிந்த கனை கடற்று அருஞ் சுரம் |
வெய்யமன்ற; நின் வை எயிறு உணீஇய, |
|
தண் மழை ஒரு நாள் தலையுக! ஒள் நுதல், |
|
ஒல்கு இயல், அரிவை! நின்னொடு செல்கம்; |
|
சில் நாள் ஆன்றனைஆக' என, பல் நாள், |
|
15 |
உலைவு இல் உள்ளமொடு வினை வலி உறீஇ, |
எல்லாம் பெரும் பிறிதாக, வடாஅது, |
|
நல் வேற் பாணன் நல் நாட்டு உள்ளதை, |
|
வாள் கண் வானத்து என்றூழ் நீள் இடை, |
|
ஆள் கொல் யானை அதர் பார்த்து அல்கும் |
|
20 |
சோலை அத்தம் மாலைப் போகி, |
ஒழியச் சென்றோர்மன்ற; |
|
பழி எவன் ஆம்கொல், நோய் தரு பாலே? |
|
கொண்டு நீங்கக் கருதி ஒழிந்த தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
நீடு நிலை அரைய செங் குழை இருப்பை, |
|
கோடு கடைந்தன்ன, கொள்ளை வான் பூ, |
|
ஆடு பரந்தன்ன, ஈனல் எண்கின் |
|
தோடு சினை உரீஇ உண்ட மிச்சில் |
|
5 |
பைங் குழைத் தழையர் பழையர் மகளிர் |
கண் திரள் நீள் அமைக் கடிப்பின் தொகுத்து, |
|
குன்றகச் சிறுகுடி மறுகுதொறும் மறுகும் |
|
சீறூர் நாடு பல பிறக்கு ஒழிய, |
|
சென்றோர் அன்பு இலர் தோழி!என்றும், |
|
10 |
அருந் துறை முற்றிய கருங் கோட்டுச் சீறியாழ்ப் |
பாணர் ஆர்ப்ப, பல் கலம் உதவி, |
|
நாளவை இருந்த நனை மகிழ்த் திதியன், |
|
வேளிரொடு பொரீஇய, கழித்த |
|
வாள் வாய் அன்ன வறுஞ் சுரம் இறந்தே! |
|
தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
தோளும் தொல் கவின் தொலைய, நாளும் |
|
நலம் கவர் பசலை நல்கின்று நலிய, |
|
சால் பெருந் தானைச் சேரலாதன் |
|
மால் கடல் ஓட்டி, கடம்பு அறுத்து, இயற்றிய |
|
5 |
பண் அமை முரசின் கண் அதிர்ந்தன்ன, |
கவ்வை தூற்றும் வெவ் வாய்ச் சேரி |
|
அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழிய, |
|
சென்றனர்ஆயினும், செய்வினை அவர்க்கே |
|
வாய்க்கதில் வாழி, தோழி! வாயாது, |
|
10 |
மழை கரந்து ஒளித்த கழை திரங்கு அடுக்கத்து, |
ஒண் கேழ் வயப் புலி பாய்ந்தென, குவவு அடி |
|
வெண் கோட்டு யானை முழக்கு இசை வெரீஇ, |
|
கன்று ஒழித்து ஓடிய புன் தலை மடப் பிடி |
|
கை தலை வைத்த மையல் விதுப்பொடு, |
|
15 |
கெடு மகப் பெண்டிரின் தேரும் |
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே! |
|
தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
அரம் போழ் அவ் வளை செறிந்த முன்கை |
|
வரைந்து தாம் பிணித்த தொல் கவின் தொலைய, |
|
எவன் ஆய்ந்தனர்கொல் தோழி! ஞெமன்ன் |
|
தெரி கோல் அன்ன செயிர் தீர் செம் மொழி, |
|
5 |
உலைந்த ஒக்கல், பாடுநர் செலினே, |
உரன் மலி உள்ளமொடு முனை பாழாக, |
|
அருங் குறும்பு எறிந்த பெருங் கல வெறுக்கை |
|
சூழாது சுரக்கும் நன்னன் நல் நாட்டு, |
|
எழிற் குன்றத்துக் கவாஅன், கேழ் கொள, |
|
10 |
திருந்து அரை நிவந்த கருங் கால் வேங்கை |
எரி மருள் கவளம் மாந்தி, களிறு தன் |
|
வரி நுதல் வைத்த வலி தேம்பு தடக் கை |
|
கல் ஊர் பாம்பின் தோன்றும் |
|
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே? |
|
தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
'பனி வார் உண்கணும், பசந்த தோளும், |
|
நனி பிறர் அறியச் சாஅய், நாளும், |
|
கரந்தனம் உறையும் நம் பண்பு அறியார், |
|
நீடினர்மன்னோ, காதலர்' என நீ |
|
5 |
எவன் கையற்றனை? இகுளை! அவரே |
வானவரம்பன் வெளியத்து அன்ன நம் |
|
மாண் நலம் தம்மொடு கொண்டனர் முனாஅது, |
|
அருஞ் சுரக் கவலை அசைஇய கோடியர், |
|
பெருங் கல் மீமிசை, இயம் எழுந்தாங்கு, |
|
10 |
வீழ் பிடி கெடுத்த நெடுந் தாள் யானை |
சூர் புகல் அடுக்கத்து மழை மாறு முழங்கும், |
|
பொய்யா நல் இசை மா வண் புல்லி, |
|
கவைக் கதிர் வரகின் யாணர்ப் பைந் தாள் |
|
முதைத் சுவல் மூழ்கிய, கான் சுடு குரூஉப் புகை |
|
15 |
அருவித் துவலையொடு மயங்கும் |
பெரு வரை அத்தம் இயங்கியோரே! |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.-மாமூலனார் | |
உரை |
கோடு உயர் பிறங்கற் குன்று பல நீந்தி, |
|
வேறு புலம் படர்ந்த வினை தரல் உள்ளத்து |
|
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரிய, |
|
முதைச் சுவற் கலித்த ஈர் இலை நெடுந் தோட்டுக் |
|
5 |
கவைக் கதிர் வரகின் கால் தொகு பொங்கழி, |
கவட்டு அடிப் பொருத பல் சினை உதிர்வை |
|
அகன் கண் பாறைச் செவ்வயின் தெறீஇ, |
|
வரி அணி பணைத் தோள் வார் செவித் தன்னையர் |
|
பண்ணை வெண் பழத்து அரிசி ஏய்ப்ப, |
|
10 |
சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ் |
தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி, |
|
உரல்முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை, |
|
ஆங்கண் இருஞ் சுனை நீரொடு முகவா, |
|
களி படு குழிசிக் கல் அடுப்பு ஏற்றி, |
|
15 |
இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின், |
குடவர் புழுக்கிய பொங்கு அவிழ்ப் புன்கம், |
|
மதர்வை நல் ஆன் பாலொடு, பகுக்கும் |
|
நிரை பல குழீஇய நெடுமொழிப் புல்லி |
|
தேன் தூங்கு உயர் வரை நல் நாட்டு உம்பர், |
|
20 |
வேங்கடம் இறந்தனர்ஆயினும், ஆண்டு அவர் |
நீடலர் வாழி, தோழி! தோடு கொள் |
|
உரு கெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்ப, |
|
தகரம் மண்ணிய தண் நறு முச்சி, |
|
புகர் இல் குவளைப் போதொடு தெரி இதழ் |
|
25 |
வேனில் அதிரல் வேய்ந்த நின் |
ஏமுறு புணர்ச்சி இன் துயில் மறந்தே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார் | |
உரை |
மேல் |