மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார் |
விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப, |
|
வேந்தனும் வெம்பகை தணிந்தனன். தீம் பெயற் |
|
காரும் ஆர்கலி தலையின்று. தேரும் |
|
ஓவத்தன்ன கோபச் செந் நிலம், |
|
5 |
வள் வாய் ஆழி உள் உறுபு உருள, |
கடவுக. காண்குவம் பாக! மதவு நடைத் |
|
தாம்பு அசை குழவி வீங்குசுரை மடிய, |
|
கனைஅல்அம் குரல காற் பரி பயிற்றி, |
|
படு மணி மிடற்ற பய நிரை ஆயம் |
|
10 |
கொடு மடி உடையர் கோற் கைக் கோவலர் |
கொன்றைஅம் குழலர் பின்றைத் தூங்க, |
|
மனைமனைப் படரும் நனை நகு மாலை, |
|
தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன் |
|
பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண் இலைப் |
|
15 |
புன் காழ் நெல்லிப்பைங் காய் தின்றவர் |
நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி, |
|
'முகிழ் நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்! |
|
பொன்னுடைத் தாலி என் மகன் ஒற்றி, |
|
வருகுவைஆயின், தருகுவென் பால்' என, |
|
20 |
விலங்கு அமர்க் கண்ணள் விரல் விளி பயிற்றி, |
திதலை அல்குல் எம் காதலி |
|
புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே. |
|
வினை முடித்து மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.- மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார் | |
உரை |
மேல் |