மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார் |
கோடை நீடலின், வாடு புலத்து உக்க |
|
சிறு புல் உணவு, நெறி பட மறுகி, |
|
நுண் பல் எறும்பி கொண்டு அளைச் செறித்த |
|
வித்தா வல்சி, வீங்கு சிலை, மறவர் |
|
5 |
பல் ஊழ் புக்குப் பயன் நிரை கவர, |
கொழுங் குடி போகிய பெரும் பாழ் மன்றத்து, |
|
நரை மூதாளர் அதிர் தலை இறக்கி, |
|
கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய, |
|
வரி நிறச் சிதலை அரித்தலின், புல்லென்று, |
|
10 |
பெரு நலம் சிதைந்த பேஎம் முதிர் பொதியில் |
இன்னா ஒரு சிறைத் தங்கி, இன் நகைச் |
|
சிறு மென் சாயல் பெரு நலம் உள்ளி, |
|
வம்பலர் ஆகியும் கழிப மன்ற |
|
நசை தர வந்தோர் இரந்தவை |
|
15 |
இசை படப் பெய்தல் ஆற்றுவோரே! |
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார் | |
உரை |
மேல் |