முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் |
நெடுங் கயிறு வலந்த குறுங் கண் அவ் வலை, |
|
கடல் பாடு அழிய, இன மீன் முகந்து, |
|
துணை புணர் உவகையர் பரத மாக்கள் |
|
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி, |
|
5 |
உப்பு ஒய் உமணர் அருந் துறைபோக்கும் |
ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ, |
|
அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கி, |
|
பெருங் களம் தொகுத்த உழவர் போல, |
|
இரந்தோர் வறுங் கலம் மல்க வீசி, |
|
10 |
பாடு பல அமைத்து, கொள்ளை சாற்றி, |
கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ! |
|
பெருமை என்பது கெடுமோ ஒரு நாள் |
|
மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத் |
|
தண் நறுங் கானல் வந்து, 'நும் |
|
15 |
வண்ணம் எவனோ?' என்றனிர் செலினே? |
பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் | |
உரை |
மேல் |