முள்ளியூர்ப் பூதியார் |
'அறம் தலைப்பிரியாது ஒழுகலும், சிறந்த |
|
கேளிர் கேடு பல ஊன்றலும், நாளும் |
|
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்' எனச் |
|
செய்வினை புரிந்த நெஞ்சினர், 'நறு நுதல் |
|
5 |
மை ஈர் ஓதி! அரும் படர் உழத்தல் |
சில் நாள் தாங்கல்வேண்டும்' என்று, நின் |
|
நல் மாண் எல் வளை திருத்தினர்ஆயின், |
|
வருவர் வாழி, தோழி! பல புரி |
|
வார் கயிற்று ஒழுகை நோன் சுவற் கொளீஇ, |
|
10 |
பகடு துறை ஏற்றத்து உமண் விளி வெரீஇ, |
உழைமான் அம் பிணை இனன் இரிந்து ஓட, |
|
காடு கவின் அழிய உரைஇ, கோடை |
|
நின்று தின விளிந்த, அம் பணை, நெடு வேய்க் |
|
கண் விடத் தெறிக்கும் மண்ணா முத்தம் |
|
15 |
கழங்கு உறழ் தோன்றல, பழங் குழித் தாஅம் |
இன் களி நறவின் இயல் தேர் நன்னன் |
|
விண் பொரு நெடு வரைக் கவாஅன் |
|
பொன் படு மருங்கின் மலை இறந்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. -முள்ளியூர்ப் பூதியார் | |
உரை |
மேல் |