மோசிக்கரையனார் |
மண்டிலம் மழுக, மலை நிறம் கிளர, |
|
வண்டினம் மலர் பாய்ந்து ஊத, மீமிசைக் |
|
கண்டற் கானல் குருகினம் ஒலிப்ப, |
|
திரை பாடு அவிய, திமில் தொழில் மறப்ப, |
|
5 |
கரை ஆடு அலவன் அளைவயின் செறிய, |
செக்கர் தோன்ற, துணை புணர் அன்றில் |
|
எக்கர்ப் பெண்ணை அக மடல் சேர, |
|
கழி மலர் கமழ் முகம் கரப்ப, பொழில் மனைப் |
|
புன்னை நறு வீ பொன் நிறம் கொளாஅ, |
|
10 |
எல்லை பைப்பயக் கழிப்பி, எல் உற, |
யாங்கு ஆகுவல்கொல் யானே? நீங்காது, |
|
முது மரத்து உறையும் முரவு வாய் முது புள் |
|
கதுமெனக் குழறும், கழுது வழங்கு, அரை நாள், |
|
நெஞ்சு நெகிழ் பருவரல் செய்த |
|
15 |
அன்பிலாளன் அறிவு நயந்தேனே. |
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தோழியால் சொல் எடுக்கப்பட்டு,தலைமகள் சொல்லியது. - மோசிக் கரையனார் | |
உரை |
மேல் |