மோசிகீரனார் |
தாழ் பெருந் தடக் கை தலைஇய, கானத்து, |
|
வீழ் பிடி கெடுத்த, வெண் கோட்டு யானை |
|
உண் குளகு மறுத்த உயக்கத்தன்ன, |
|
பண்புடை யாக்கைச் சிதைவு நன்கு அறீஇ, |
|
5 |
பின்னிலை முனியானாகி, 'நன்றும், |
தாது செய் பாவை அன்ன தையல், |
|
மாதர் மெல் இயல், மட நல்லோள்வயின் |
|
தீது இன்றாக, நீ புணை புகுக!' என |
|
என்னும் தண்டும்ஆயின், மற்று அவன் |
|
10 |
அழிதகப் பெயர்தல் நனி இன்னாதே |
ஒல் இனி, வாழி, தோழி! கல்லெனக் |
|
கண மழை பொழிந்த கான் படி இரவில், |
|
தினை மேய் யானை இனன் இரிந்து ஓட, |
|
கல் உயர் கழுதில் சேணோன் எறிந்த |
|
15 |
வல் வாய்க் கவணின் கடு வெடி ஒல்லென, |
மறப் புலி உரற, வாரணம் கதற, |
|
நனவுறு கட்சியின் நல் மயில் ஆல, |
|
மலை உடன் வெரூஉம் மாக் கல் வெற்பன் |
|
பிரியுநன் ஆகலோ அரிதே; அதாஅன்று, |
|
20 |
உரிதுஅல் பண்பின் பிரியுனன்ஆயின், |
வினை தவப் பெயர்ந்த வென் வேல் வேந்தன் |
|
முனைகொல் தானையொடு முன் வந்து இறுப்ப, |
|
தன் வரம்பு ஆகிய மன் எயில் இருக்கை |
|
ஆற்றாமையின், பிடித்த வேல் வலித் |
|
25 |
தோற்றம் பிழையாத் தொல் புகழ் பெற்ற, |
விழை தக ஓங்கிய கழை துஞ்சு மருங்கின் |
|
கான் அமர் நன்னன் போல, |
|
யான் ஆகுவல், நின் நலம் தருவேனே. |
|
பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது. - மோசிகீரனார் | |
உரை |
மேல் |