வடம வண்ணக்கன் பேரிசாத்தனார், பேரிசாத்தனார் |
விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன், |
|
தெரி இதழ்க் குவளைத் தேம் பாய் தாரன், |
|
அம் சிலை இடவது ஆக, வெஞ் செலல் |
|
கணை வலம் தெரிந்து, துணை படர்ந்து உள்ளி, |
|
5 |
வருதல் வாய்வது, வான் தோய் வெற்பன். |
வந்தனன் ஆயின், அம் தளிர்ச் செயலைத் |
|
தாழ்வு இல் ஓங்கு சினைத் தொடுத்த வீழ் கயிற்று |
|
ஊசல் மாறிய மருங்கும், பாய்பு உடன் |
|
ஆடாமையின் கலுழ்பு இல தேறி, |
|
10 |
நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம் |
கண் என மலர்ந்த சுனையும், வண் பறை |
|
மடக் கிளி எடுத்தல்செல்லாத் தடக் குரல் |
|
குலவுப் பொறை இறுத்த கோல் தலை இருவி |
|
கொய்து ஒழி புனமும், நோக்கி; நெடிது நினைந்து; |
|
15 |
பைதலன் பெயரலன்கொல்லோ? ஐ தேய்கு |
'அய வெள் அருவி சூடிய உயர் வரைக் |
|
கூஉம் கணஃது எம் ஊர்' என |
|
ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின், யானே. |
|
தோழி தலைமகன் குறை கூறியது; பகலே சிறைப்புறமாக,தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்;தோழி குறி பெயர்த்திட்டுச் சொல்லியதூஉம் ஆம்.- வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் | |
உரை |
அகல் இரு விசும்பகம் புதையப் பாஅய், |
|
பகல் உடன் கரந்த, பல் கதிர், வானம் |
|
இருங் களிற்று இன நிரை குளிர்ப்ப வீசி, |
|
பெரும் பெயல் அழி துளி பொழிதல் ஆனாது; |
|
5 |
வேந்தனும் வெம் பகை முரணி ஏந்துஇலை, |
விடு கதிர் நெடு வேல் இமைக்கும் பாசறை, |
|
அடு புகழ் மேவலொடு கண்படை இலனே; |
|
அமரும் நம் வயினதுவே; நமர் என |
|
நம் அறிவு தெளிந்த பொம்மல் ஓதி |
|
10 |
யாங்கு ஆகுவள்கொல்தானே ஓங்குவிடைப் |
படு சுவற் கொண்ட பகு வாய்த் தெள் மணி |
|
ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ, |
|
பையுள் நல் யாழ் செவ்வழி வகுப்ப, |
|
ஆர் உயிர் அணங்கும் தெள் இசை |
|
15 |
மாரி மாலையும் தமியள் கேட்டே? |
பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் | |
உரை |
அரும்பு முதிர் வேங்கை அலங்கல் மென் சினைச் |
|
சுரும்பு வாய் திறந்த பொன் புரை நுண் தாது |
|
மணி மருள் கலவத்து உறைப்ப, அணி மிக்கு |
|
அவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலை, |
|
5 |
பைந் தாட் செந் தினைக் கொடுங் குரல் வியன் புனம், |
செந் தார் கிள்ளை நம்மொடு கடிந்தோன் |
|
பண்பு தர வந்தமை அறியாள், 'நுண் கேழ் |
|
முறி புரை எழில் நலத்து என் மகள் துயர் மருங்கு |
|
அறிதல் வேண்டும்' என, பல் பிரப்பு இரீஇ, |
|
10 |
அறியா வேலற் தரீஇ, அன்னை |
வெறி அயர் வியன் களம் பொலிய ஏத்தி, |
|
மறி உயிர் வழங்கா அளவை, சென்று யாம், |
|
செல வரத் துணிந்த, சேண் விளங்கு, எல் வளை |
|
நெகிழ்ந்த முன் கை, நேர் இறைப் பணைத் தோள், |
|
15 |
நல் எழில் அழிவின் தொல் கவின் பெறீஇய, |
முகிழ்த்து வரல் இள முலை மூழ்க, பல் ஊழ் |
|
முயங்கல் இயைவதுமன்னோ தோழி! |
|
நறை கால்யாத்த நளிர் முகைச் சிலம்பில் |
|
பெரு மலை விடரகம் நீடிய சிறியிலைச் |
|
20 |
சாந்த மென் சினை தீண்டி, மேலது |
பிரசம் தூங்கும் சேண் சிமை |
|
வரையக வெற்பன் மணந்த மார்பே! |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - பேரிசாத்தனார் | |
உரை |
அறியாய் வாழி, தோழி! பொறி வரிப் |
|
பூ நுதல் யானையொடு புலி பொரக் குழைந்த |
|
குருதிச் செங் களம் புலவு அற, வேங்கை |
|
உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும் |
|
5 |
மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய |
காமம் கலந்த காதல் உண்டுஎனின், |
|
நன்றுமன்; அது நீ நாடாய், கூறுதி; |
|
நாணும் நட்பும் இல்லோர்த் தேரின், |
|
யான் அலது இல்லை, இவ் உலகத்தானே |
|
10 |
இன் உயிர் அன்ன நின்னொடும் சூழாது, |
முளை அணி மூங்கிலின், கிளையொடு பொலிந்த | |
பெரும் பெயர் எந்தை அருங் கடி நீவி, |
|
செய்து பின் இரங்கா வினையொடு |
|
மெய் அல் பெரும் பழி எய்தினென் யானே! |
|
குறை வேண்டிப் பின் நின்ற தலைமகனுக்குக் குறை நேர்ந்த தோழி,தலைமகட்குக் குறை நயப்ப, கூறியது. - வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் | |
உரை |
பகலினும் அகலாதாகி, யாமம் |
|
தவல் இல் நீத்தமொடு ஐயெனக் கழிய, |
|
தளி மழை பொழிந்த தண் வரல் வாடையொடு |
|
பனி மீக்கூரும் பைதல் பானாள், |
|
5 |
பல் படை நிவந்த வறுமை இல் சேக்கை, |
பருகுவன்ன காதலொடு திருகி, |
|
மெய் புகுவன்ன கை கவர் முயக்கத்து, |
|
ஓர் உயிர் மாக்களும் புலம்புவர்மாதோ; |
|
அருளிலாளர் பொருள்வயின் அகல, |
|
10 |
எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து |
யான் எவன் உளெனோ தோழி! தானே |
|
பராரைப் பெண்ணைச் சேக்கும், கூர்வாய், |
|
ஒரு தனி அன்றில் உயவுக் குரல் கடைஇய, |
|
உள்ளே கனலும் உள்ளம் மெல்லெனக் |
|
15 |
கனை எரி பிறப்ப ஊதும் |
நினையா மாக்கள் தீம் குழல் கேட்டே? |
|
பிரிவு உணர்த்தப்பட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் | |
உரை |
மேல் |