வண்ணப்புறக் கந்தரத்தனார் |
'கிளியும், பந்தும், கழங்கும், வெய்யோள் |
|
அளியும், அன்பும், சாயலும், இயல்பும், |
|
முன்நாள் போலாள்; இறீஇயர், என் உயிர்' என, |
|
கொடுந் தொடைக் குழவியொடு வயின்மரத்து யாத்த |
|
5 |
கடுங் கட் கறவையின் சிறுபுறம் நோக்கி, |
குறுக வந்து, குவவுநுதல் நீவி, |
|
மெல்லெனத் தழீஇயினேனாக, என் மகள் |
|
நன்னர் ஆகத்து இடைமுலை வியர்ப்ப, |
|
பல் கால் முயங்கினள்மன்னே! அன்னோ! |
|
10 |
விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி, |
வறன் நிழல் அசைஇ, வான் புலந்து வருந்திய |
|
மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும் |
|
காடு உடன்கழிதல் அறியின் தந்தை |
|
அல்குபதம் மிகுத்த கடிஉடை வியல் நகர், |
|
15 |
செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போல, |
கோதை ஆயமொடு ஓரை தழீஇ, |
|
தோடு அமை அரிச் சிலம்பு ஒலிப்ப, அவள் |
|
ஆடுவழி ஆடுவழி, அகலேன்மன்னே! |
|
உடன்போயின தலைமகளை நினைந்து, செவிலித்தாய் மனையின்கண் வருந்தியது. - வண்ணப்புறக் கந்தரத்தனார் | |
உரை |
மேல் |