வெள்ளாடியனார் |
"தொடங்கு வினை தவிரா, அசைவு இல் நோன் தாள், |
|
கிடந்து உயிர் மறுகுவதுஆயினும், இடம் படின் |
|
வீழ் களிறு மிசையாப் புலியினும் சிறந்த |
|
தாழ்வு இல் உள்ளம் தலைதலைச் சிறப்ப, |
|
5 |
செய்வினைக்கு அகன்ற காலை, எஃகு உற்று |
இரு வேறு ஆகிய தெரி தகு வனப்பின் |
|
மாவின் நறு வடி போல, காண்தொறும் |
|
மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண் |
|
நினையாது கழிந்த வைகல், எனையதூஉம், |
|
10 |
வாழலென் யான்" எனத் தேற்றி, பல் மாண் |
தாழக் கூறிய தகைசால் நல் மொழி |
|
மறந்தனிர் போறிர் எம்' எனச் சிறந்த நின் |
|
எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க |
|
வினவல் ஆனாப் புனைஇழை! கேள் இனி |
|
15 |
வெம்மை தண்டா எரி உகு பறந்தலை, |
கொம்மை வாடிய இயவுள் யானை |
|
நீர் மருங்கு அறியாது, தேர் மருங்கு ஓடி, |
|
அறு நீர் அம்பியின் நெறிமுதல் உணங்கும் |
|
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை, |
|
20 |
எள்ளல் நோனாப் பொருள் தரல் விருப்பொடு |
நாணுத் தளை ஆக வைகி, மாண் வினைக்கு |
|
உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை, |
|
மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே! |
|
வினை முற்றி மீண்ட தலைமகன், 'எம்மையும் நினைத்தறிதிரோ?' என்ற தலைமகட்குச் சொல்லியது. - வெள்ளாடியனார் | |
உரை |
மேல் |