வெள்ளிவீதியார் |
வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர் |
|
ஆடுகளப் பறையின், அரிப்பன ஒலிப்ப, |
|
கோடை நீடிய அகன் பெருங் குன்றத்து, |
|
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு, |
|
5 |
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும் |
காடு இறந்தனரே, காதலர். மாமை, |
|
அரி நுண் பசலை பாஅய், பீரத்து |
|
எழில் மலர் புரைதல்வேண்டும். அலரே, |
|
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன் |
|
10 |
தொல் நிலை முழுமுதல் துமியப் பண்ணி, |
புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர் |
|
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே. யானே, |
|
காதலற் கெடுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து, |
|
ஆதிமந்தி போல, பேதுற்று |
|
15 |
அலந்தனென் உழல்வென்கொல்லோ பொலந்தார், |
கடல் கால் கிளர்ந்த வென்றி நல் வேல், |
|
வானவரம்பன் அடல் முனைக் கலங்கிய |
|
உடை மதில் ஓர் அரண் போல, |
|
அஞ்சுவரு நோயொடு, துஞ்சாதேனே! |
|
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வெள்ளிவீதியார் | |
உரை |
பாம்புடை விடர பனி நீர் இட்டுத் துறைத் |
|
தேம் கலந்து ஒழுக, யாறு நிறைந்தனவே; |
|
வெண் கோட்டு யானை பொருத புண் கூர்ந்து, |
|
பைங் கண் வல்லியம் கல் அளைச் செறிய, |
|
5 |
முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வயப் பிணவு |
கடி கொள, வழங்கார் ஆறே; ஆயிடை |
|
எல்லிற்று என்னான், வென் வேல் ஏந்தி, |
|
நசை தர வந்த நன்னராளன் |
|
நெஞ்சு பழுதாக, வறுவியன் பெயரின், |
|
10 |
இன்று இப்பொழுதும் யான் வாழலெனே; |
எவன்கொல்? வாழி, தோழி! நம் இடை முலைச் |
|
சுணங்கு அணி முற்றத்து ஆரம் போலவும், |
|
சிலம்பு நீடு சோலைச் சிதர் தூங்கு நளிப்பின் |
|
இலங்கு வெள் அருவி போலவும், |
|
15 |
நிலம் கொண்டனவால், திங்கள் அம் கதிரே! |
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. - வெள்ளிவீதியார் | |
உரை |
மேல் |