அஞ்சி |
அழியா விழவின், அஞ்சுவரு மூதூர்ப் |
|
பழி இலர்ஆயினும், பலர் புறங்கூறும் |
|
அம்பல் ஒழுக்கமும் ஆகியர்; வெஞ் சொல் |
|
சேரிஅம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக; |
|
5 |
நுண் பூண் எருமை குட நாட்டன்ன என் |
ஆய்நலம் தொலையினும் தொலைக; என்றும் |
|
நோய் இலராக, நம் காதலர் வாய் வாள் |
|
எவ்வி வீழ்ந்த செருவில் பாணர் |
|
கைதொழு மரபின் முன் பரித்து இடூஉப் பழிச்சிய |
|
10 |
வள் உயிர் வணர் மருப்பு அன்ன, ஒள் இணர்ச் |
சுடர்ப் பூங் கொன்றை ஊழுறு விளைநெற்று |
|
அறைமிசைத் தாஅம் அத்த நீளிடை, |
|
பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை, |
|
சினம் மிகு முன்பின், வாம் மான், அஞ்சி |
|
15 |
இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை, |
நன்னர் ஆய்கவின் தொலைய, சேய் நாட்டு, |
|
நம் நீத்து உறையும் பொருட்பிணிக் |
|
கூடாமையின், நீடியோரே. |
பிரிவிடை வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார் | |
'முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம் |
|
பல் கிளைத் தலைவன் கல்லாக் கடுவன், |
|
பாடு இமிழ் அருவிப் பாறை மருங்கின், |
|
ஆடு மயில் முன்னது ஆக, கோடியர் |
|
5 |
விழவு கொள் மூதூர் விறலி பின்றை |
முழவன் போல அகப்படத் தழீஇ, |
|
இன் துணைப் பயிரும் குன்ற நாடன் |
|
குடி நன்கு உடையன்; கூடுநர்ப் பிரியலன்; |
|
கெடு நா மொழியலன்; அன்பினன்' என, நீ |
|
10 |
வல்ல கூறி, வாய்வதின் புணர்த்தோய்; |
நல்லை; காண், இனி காதல் அம் தோழீஇ! |
|
கடும் பரிப் புரவி நெடுந் தேர் அஞ்சி, |
|
நல் இசை நிறுத்த நயம் வரு பனுவல், |
|
தொல் இசை நிறீஇய உரை சால் பாண்மகன் |
|
15 |
எண்ணு முறை நிறுத்த பண்ணினுள்ளும், |
புதுவது புனைந்த திறத்தினும், |
|
வதுவை நாளினும், இனியனால் எமக்கே. |
வரைந்து எய்திய பின்றை மண மனக்கண் சென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது; வரைவு மலிந்து சொல்லிய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - அஞ்சியத்தை மகள் நாகையார் | |
அருந் தெறல் மரபின் கடவுள் காப்ப, |
|
பெருந் தேன் தூங்கும் நாடு காண் நனந்தலை, |
|
அணங்குடை வரைப்பின், பாழி ஆங்கண், |
|
வேள் முது மாக்கள் வியல் நகர்க் கரந்த |
|
5 |
அருங் கல வெறுக்கையின் அரியோள் பண்பு நினைந்து, |
வருந்தினம்மாதோ எனினும், அஃது ஒல்லாய், |
|
இரும் பணைத் தொடுத்த பலர் ஆடு ஊசல், |
|
ஊர்ந்து இழி கயிற்றின், செல வர வருந்தி, |
|
நெடு நெறிக் குதிரைக் கூர் வேல் அஞ்சி |
|
10 |
கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர் |
ஆடு கொள் பூசலின் பாடு சிறந்து எறியும், |
|
பெருந் துடி வள்பின் வீங்குபு நெகிழா, |
|
மேய் மணி இழந்த பாம்பின், நீ நனி |
|
தேம்பினை வாழி, என் நெஞ்சே! வேந்தர் |
|
15 |
கோண் தணி எயிலின் காப்புச் சிறந்து, |
ஈண்டு அருங்குரையள், நம் அணங்கியோளே. |
|
அல்லகுறிப்பட்டுப் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
மேல் |