அண்டர் மகளிர் |
தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்ப் |
|
பெருந் தகை இழந்த கண்ணினை, பெரிதும் |
|
வருந்தினை, வாழியர், நீயே! வடாஅது |
|
வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை, |
|
5 |
அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் |
மரம் செல மிதித்த மாஅல் போல, |
|
புன் தலை மடப் பிடி உணீஇயர், அம் குழை, |
|
நெடு நிலை யாஅம் ஒற்றி, நனை கவுள் |
|
படி ஞிமிறு கடியும் களிறே தோழி! |
|
10 |
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல், |
சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து, |
|
அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை, |
|
இன் தீம் பைஞ் சுனை ஈரணிப் பொலிந்த |
|
தண் நறுங் கழுநீர்ச் செண் இயற் சிறுபுறம் |
|
15 |
தாம் பாராட்டிய காலையும் உள்ளார் |
வீங்கு இறைப் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டு |
|
அருஞ் செயற் பொருட்பிணி முன்னி, நப் |
|
பிரிந்து, சேண் உறைநர் சென்ற ஆறே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது.- மதுரை மருதன் இளநாகன் | |
மேல் |