அதிகன் |
இலமலர் அன்ன அம் செந் நாவின் |
|
புலம் மீக்கூறும் புரையோர் ஏத்த, |
|
பலர் மேந் தோன்றிய கவி கை வள்ளல் |
|
நிறைஅருந் தானை வெல்போர் மாந்தரம் |
|
5 |
பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற |
குறையோர் கொள்கலம் போல, நன்றும் |
|
உவ இனி வாழிய, நெஞ்சே! காதலி |
|
முறையின் வழாஅது ஆற்றிப் பெற்ற |
|
கறை அடி யானை நன்னன் பாழி, |
|
10 |
ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய்க் |
கூட்டு எதிர்கொண்ட வாய் மொழி மிஞிலி |
|
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர் |
|
வெள்ளத் தானை அதிகற் கொன்று, உவந்து |
|
ஒள் வாள் அமலை ஆடிய ஞாட்பின், |
|
15 |
பலர் அறிவுறுதல் அஞ்சி, பைப்பய, |
நீர்த் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளிச் |
|
சூர்ப்புறு கோல் வளை செறித்த முன்கை |
|
குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல், |
|
இடன் இல் சிறு புறத்து இழையொடு துயல்வர, |
|
20 |
கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து, |
உருவு கிளர் ஓவினைப் பொலிந்த பாவை |
|
இயல் கற்றன்ன ஒதுக்கினள் வந்து, |
|
பெயல் அலைக் கலங்கிய மலைப் பூங் கோதை |
|
இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்ப, |
|
25 |
தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்; |
வடிப்பு உறு நரம்பின் தீவிய மொழிந்தே. |
|
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
கொளக் குறைபடாஅக் கோடு வளர் குட்டத்து |
|
அளப்பு அரிது ஆகிய குவை இருந் தோன்றல, |
|
கடல் கண்டன்ன மாக விசும்பின் |
|
அழற்கொடி அன்ன மின்னு வசிபு நுடங்க, |
|
5 |
கடிதுஇடி உருமொடு கதழ்உறை சிதறி, |
விளிவு இடன் அறியா வான் உமிழ் நடு நாள், |
|
அருங் கடிக் காவலர் இகழ்பதம் நோக்கி, |
|
பனி மயங்கு அசைவளி அலைப்ப, தந்தை |
|
நெடு நகர் ஒரு சிறை நின்றனென்ஆக; |
|
10 |
அறல் என அவிர்வரும் கூந்தல், மலர் என |
வாள் முகத்து அலமரும் மா இதழ் மழைக் கண், |
|
முகை நிரைத்தன்ன மா வீழ் வெண் பல், |
|
நகை மாண்டு இலங்கும் நலம் கெழு துவர் வாய், |
|
கோல் அமை விழுத் தொடி விளங்க வீசி, |
|
15 |
கால் உறு தளிரின் நடுங்கி, ஆனாது, |
நோய் அசா வீட முயங்கினள் வாய்மொழி |
|
நல் இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய |
|
நசை பிழைப்பு அறியாக் கழல்தொடி அதிகன் |
|
கோள் அறவு அறியாப் பயம் கெழு பலவின் |
|
20 |
வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய, |
வில் கெழு தானைப் பசும் பூண் பாண்டியன் |
|
களிறு அணி வெல் கொடி கடுப்ப, காண்வர |
|
ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்று அருவி, |
|
நேர் கொள் நெடு வரைக் கவாஅன் |
|
25 |
சூரரமகளிரின் பெறற்கு அரியோளே. |
இரவுக் குறிக்கண் தலைமகளைத் கண்ணுற்று நீங்கிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
அம்ம! வாழி, தோழி! காதலர், |
|
'வெண் மணல் நிவந்த பொலங் கடை நெடு நகர், |
|
நளி இருங் கங்குல் புணர் குறி வாய்த்த |
|
களவும் கைம்மிக அலர்ந்தன்று; அன்னையும் |
|
5 |
உட்கொண்டு ஓவாள் காக்கும்; பின் பெரிது |
இவண் உறைபு எவனோ? அளியள்!' என்று அருளி, |
|
'ஆடு நடைப் பொலிந்த புகற்சியின், நாடு கோள் |
|
அள்ளனைப் பணித்த அதியன் பின்றை, |
|
வள் உயிர் மாக் கிணை கண் அவிந்தாங்கு, |
|
10 |
மலை கவின் அழிந்த கனை கடற்று அருஞ் சுரம் |
வெய்யமன்ற; நின் வை எயிறு உணீஇய, |
|
தண் மழை ஒரு நாள் தலையுக! ஒள் நுதல், |
|
ஒல்கு இயல், அரிவை! நின்னொடு செல்கம்; |
|
சில் நாள் ஆன்றனைஆக' என, பல் நாள், |
|
15 |
உலைவு இல் உள்ளமொடு வினை வலி உறீஇ, |
எல்லாம் பெரும் பிறிதாக, வடாஅது, |
|
நல் வேற் பாணன் நல் நாட்டு உள்ளதை, |
|
வாள் கண் வானத்து என்றூழ் நீள் இடை, |
|
ஆள் கொல் யானை அதர் பார்த்து அல்கும் |
|
20 |
சோலை அத்தம் மாலைப் போகி, |
ஒழியச் சென்றோர்மன்ற; |
|
பழி எவன் ஆம்கொல், நோய் தரு பாலே? |
|
கொண்டு நீங்கக் கருதி ஒழிந்த தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மாமூலனார் | |
மேல் |