அவியன் |
பொறி வரிப் புறவின் செங் காற் சேவல் |
|
சிறு புன் பெடையொடு சேண் புலம் போகி, |
|
அரி மணல் இயவில் பரல் தேர்ந்து உண்டு, |
|
வரி மரல் வாடிய வான் நீங்கு நனந்தலைக் |
|
5 |
குறும்பொறை மருங்கின் கோட் சுரம் நீந்தி, |
நெடுஞ் சேண் வந்த நீர் நசை வம்பலர் |
|
செல் உயிர் நிறுத்த சுவைக் காய் நெல்லிப் |
|
பல் காய் அம் சினை அகவும் அத்தம் |
|
சென்று, நீர் அவணிர் ஆகி, நின்று தரு |
|
10 |
நிலை அரும் பொருட் பிணி நினைந்தனிர்எனினே, |
வல்வதாக, நும் செய் வினை! இவட்கே, |
|
களி மலி கள்ளின் நல் தேர் அவியன் |
|
ஆடு இயல் இள மழை சூடித் தோன்றும் |
|
பழம் தூங்கு விடரகத்து எழுந்த காம்பின் |
|
15 |
கண் இடை புரையும் நெடு மென் பணைத் தோள், |
திருந்து கோல் ஆய் தொடி ஞெகிழின், |
|
மருந்தும் உண்டோ, பிரிந்து உறை நாட்டே? |
|
செலவு உணர்த்திய தோழி, தலைமகளது குறிப்பு அறிந்து, தலைமகனைச் செலவு அழுங்கச் சொல்லியது. - காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் | |
மேல் |