அன்னி |
வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர் |
|
ஆடுகளப் பறையின், அரிப்பன ஒலிப்ப, |
|
கோடை நீடிய அகன் பெருங் குன்றத்து, |
|
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு, |
|
5 |
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும் |
காடு இறந்தனரே, காதலர். மாமை, |
|
அரி நுண் பசலை பாஅய், பீரத்து |
|
எழில் மலர் புரைதல்வேண்டும். அலரே, |
|
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன் |
|
10 |
தொல் நிலை முழுமுதல் துமியப் பண்ணி, |
புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர் |
|
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே. யானே, |
|
காதலற் கெடுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து, |
|
ஆதிமந்தி போல, பேதுற்று |
|
15 |
அலந்தனென் உழல்வென்கொல்லோ பொலந்தார், |
கடல் கால் கிளர்ந்த வென்றி நல் வேல், |
|
வானவரம்பன் அடல் முனைக் கலங்கிய |
|
உடை மதில் ஓர் அரண் போல, |
|
அஞ்சுவரு நோயொடு, துஞ்சாதேனே! |
|
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வெள்ளிவீதியார் | |
நின் வாய் செத்து நீ பல உள்ளி, |
|
பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும், |
|
மலைமிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம் |
|
தலை நாள் மா மலர் தண் துறைத் தயங்கக் |
|
5 |
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று |
அறல் வார் நெடுங் கயத்து அரு நிலை கலங்க, |
|
மால் இருள் நடுநாட் போகி, தன் ஐயர் |
|
காலைத் தந்த கணைக் கோட்டு வாளைக்கு, |
|
அவ் வாங்கு உந்தி, அம் சொல், பாண்மகள், |
|
10 |
நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில் |
பழஞ் செந் நெல்லின் முகவை கொள்ளாள், |
|
கழங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம் |
|
பயம் கெழு வைப்பிற் பல் வேல் எவ்வி |
|
நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான், |
|
15 |
பொன் இணர் நறு மலர்ப் புன்னை வெஃகி, |
திதியனொடு பொருத அன்னி போல |
|
விளிகுவைகொல்லோ, நீயே கிளி எனச் |
|
சிறிய மிழற்றும் செவ் வாய், பெரிய |
|
கயல் என அமர்த்த உண்கண், புயல் எனப் |
|
20 |
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால், |
மின் நேர் மருங்குல், குறுமகள் |
|
பின்னிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே? |
|
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண், தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; அல்ல குறிப்பிட்டு அழிந்ததூஉம் ஆம்; தோழியைப் பின்னின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - நக்கீரர் | |
வேர் முழுது உலறி நின்ற புழற்கால், |
|
தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும், |
|
வற்றல் மரத்த பொற் தலை ஓதி |
|
வெயிற் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள, |
|
5 |
நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு |
ஆள் இல் அத்தத்து, அளியள் அவனொடு |
|
வாள்வரி பொருத புண் கூர் யானை |
|
புகர் சிதை முகத்த குருதி வார, |
|
உயர் சிமை நெடுங் கோட்டு உரும் என முழங்கும் |
|
10 |
'அருஞ் சுரம் இறந்தனள்' என்ப பெருஞ் சீர் |
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன் |
|
தொல் நிலை முழு முதல் துமியப் பண்ணிய |
|
நன்னர் மெல் இணர்ப் புன்னை போல, |
|
கடு நவைப் படீஇயர்மாதோ களி மயில் |
|
15 |
குஞ்சரக் குரல குருகோடு ஆலும், |
துஞ்சா முழவின், துய்த்து இயல் வாழ்க்கை, |
|
கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின், |
|
ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம் பாற் |
|
சிறு பல் கூந்தற் போது பிடித்து அருளாது, |
|
20 |
எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம், |
'எனக்கு உரித்து' என்னாள், நின்ற என் |
|
அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே! |
|
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார் | |
மேல் |