ஆஅய் அண்டிரன் |
ஆய்நலம் தொலைந்த மேனியும், மா மலர்த் |
|
தகை வனப்பு இழந்த கண்ணும், வகை இல |
|
வண்ணம் வாடிய வரியும், நோக்கி, |
|
ஆழல் ஆன்றிசின் நீயே. உரிதினின் |
|
5 |
ஈதல் இன்பம் வெஃகி, மேவரச் |
செய் பொருள் திறவர் ஆகி, புல் இலைப் |
|
பராரை நெல்லி அம் புளித் திரள் காய் |
|
கான மட மரைக் கணநிரை கவரும் |
|
வேனில் அத்தம் என்னாது, ஏமுற்று, |
|
10 |
விண் பொரு நெடுங் குடை இயல் தேர் மோரியர் |
பொன் புனை திகிரி திரிதரக் குறைத்த |
|
அறை இறந்து அகன்றனர்ஆயினும், எனையதூஉம் |
|
நீடலர் வாழி, தோழி! ஆடு இயல் |
|
மட மயில் ஒழித்த பீலி வார்ந்து, தம் |
|
15 |
சிலை மாண் வல் வில் சுற்றி, பல மாண் |
அம்புடைக் கையர் அரண் பல நூறி, |
|
நன்கலம் தரூஉம் வயவர் பெருமகன் |
|
சுடர் மணிப் பெரும் பூண் ஆஅய் கானத்துத் |
|
தலை நாள் அலரின் நாறும் நின் |
|
20 |
அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே. |
'பொருள்வயிற் பிரிந்து நீட்டித்தான், தலைமகன்' எனக் கவன்ற தலைமகட்கு, 'வருவர்' என்பது படச் சொல்லித் தோழி ஆற்றுவித்தது.- உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் | |
உரை |
நெஞ்சு நடுங்கு அரும் படர் தீர வந்து, |
|
குன்றுழை நண்ணிய சீறூர் ஆங்கண் |
|
செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால் |
|
நுண் கோல் அகவுநர்ப் புரந்த பேர் இசை, |
|
5 |
சினம் கெழு தானை, தித்தன் வெளியன், |
இரங்குநீர்ப் பரப்பின் கானல்அம் பெருந் துறை, |
|
தனம் தரு நன் கலம் சிதையத் தாக்கும் |
|
சிறு வெள் இறவின் குப்பை அன்ன |
|
உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன் |
|
10 |
முனை முரண் உடையக் கடந்த வென் வேல், |
இசை நல் ஈகைக் களிறு வீசு வண் மகிழ், |
|
பாரத்துத் தலைவன், ஆர நன்னன்; |
|
ஏழில் நெடு வரைப் பாழிச் சிலம்பில் |
|
களி மயிற் கலாவத்தன்ன. தோளே |
|
15 |
வல் வில் இளையர் பெருமகன்; நள்ளி |
சோலை அடுக்கத்துச் சுரும்பு உண விரிந்த |
|
கடவுட் காந்தளுள்ளும், பல உடன் |
|
இறும்பூது கஞலிய ஆய்மலர் நாறி, |
|
வல்லினும், வல்லார்ஆயினும், சென்றோர்க்குச் |
|
20 |
சால் அவிழ் நெடுங் குழி நிறைய வீசும், |
மாஅல் யானை ஆஅய் கானத்துத் |
|
தலையாற்று நிலைஇய சேயுயர் பிறங்கல் |
|
வேய் அமைக் கண் இடை புரைஇ, |
|
சேய ஆயினும், நடுங்கு துயர் தருமே. |
|
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-பரணர் | |
உரை |
'கூறுவம்கொல்லோ? கூறலம்கொல்?' எனக் |
|
கரந்த காமம் கைந்நிறுக்கல்லாது, |
|
நயந்து நாம் விட்ட நல் மொழி நம்பி, |
|
அரை நாள் யாமத்து விழு மழை கரந்து; |
|
5 |
கார் விரை கமழும் கூந்தல், தூ வினை |
நுண் நூல் ஆகம் பொருந்தினள், வெற்பின் |
|
இள மழை சூழ்ந்த மட மயில் போல, |
|
வண்டு வழிப் படர, தண் மலர் வேய்ந்து, |
|
வில் வகுப்புற்ற நல் வாங்கு குடைச் சூல் |
|
10 |
அம் சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து, |
துஞ்சு ஊர் யாமத்து முயங்கினள், பெயர்வோள், |
|
ஆன்ற கற்பின் சான்ற பெரியள், |
|
அம் மா அரிவையோ அல்லள்; தெனாஅது |
|
ஆஅய் நல் நாட்டு அணங்குடைச் சிலம்பில், |
|
15 |
கவிரம் பெயரிய உரு கெழு கவாஅன், |
ஏர் மலர் நிறை சுனை உறையும் |
|
சூர்மகள்மாதோ என்னும் என் நெஞ்சே! |
|
புணர்ந்து நீங்கிய தலைமகளது போக்கு நோக்கிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
மேல் |