ஆஅய் எயினன் |
பனைத் திரள் அன்ன பரு ஏர் எறுழ்த் தடக் கை, |
|
கொலைச் சினம் தவிரா மதனுடை முன்பின், |
|
வண்டு படு கடாஅத்து, உயர் மருப்பு, யானை |
|
தண் கமழ் சிலம்பின் மரம் படத் தொலைச்சி; |
|
5 |
உறு புலி உரறக் குத்தி; விறல் கடிந்து; |
சிறு தினைப் பெரும் புனம் வவ்வும் நாட! |
|
கடும் பரிக் குதிரை ஆஅய் எயினன் |
|
நெடுந் தேர் ஞிமிலியொடு பொருது, களம் பட்டென, |
|
காணிய செல்லாக் கூகை நாணி, |
|
10 |
கடும் பகல் வழங்காதாஅங்கு, இடும்பை |
பெரிதால் அம்ம இவட்கே; அதனால் |
|
மாலை, வருதல் வேண்டும் சோலை |
|
முளை மேய் பெருங் களிறு வழங்கும் |
|
மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே. |
|
பகல் வருவானை 'இரவு வருக' என்றது. - பரணர் | |
துன் அருங் கானமும் துணிதல் ஆற்றாய், |
|
பின் நின்று பெயரச் சூழ்ந்தனைஆயின், |
|
என் நிலை உரைமோ நெஞ்சே! ஒன்னார் |
|
ஓம்பு அரண் கடந்த வீங்கு பெருந் தானை |
|
5 |
அடு போர் மிஞிலி செரு வேல் கடைஇ, |
முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப, |
|
ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்று |
|
ஒண் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு |
|
வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந் தோடு |
|
10 |
விசும்பிடை தூர ஆடி, மொசிந்து உடன், |
பூ விரி அகன் துறைக் கணை விசைக் கடு நீர்க் |
|
காவிரிப் பேர் யாற்று அயிர் கொண்டு ஈண்டி, |
|
எக்கர் இட்ட குப்பை வெண் மணல் |
|
வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர் |
|
15 |
ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை, |
நான் மறை முது நூல் முக்கட் செல்வன், |
|
ஆலமுற்றம் கவின் பெறத் தைஇய |
|
பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர் |
|
கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும் |
|
20 |
மகர நெற்றி வான் தோய் புரிசைச் |
சிகரம் தோன்றாச் சேண் உயர் நல் இல் |
|
புகாஅர் நல் நாட்டதுவே பகாஅர் |
|
பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால், |
|
பணைத் தகைத் தடைஇய காண்பு இன் மென் தோள், |
|
25 |
அணங்குசால், அரிவை இருந்த |
மணம் கமழ் மறுகின் மணற் பெருங் குன்றே. |
|
இடைச் சுரத்து ஒழியக் கருதிய நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
யாம இரவின் நெடுங் கடை நின்று, |
|
தேம் முதிர் சிமையக் குன்றம் பாடும் |
|
நுண் கோல் அகவுநர் வேண்டின், வெண் கோட்டு |
|
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ் |
|
5 |
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன், |
அளி இயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை, |
|
இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு |
|
நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து, |
|
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்தென, 'புள் ஒருங்கு |
|
10 |
அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று |
ஒண் கதிர் தெறாமை, சிறகரின் கோலி, |
|
நிழல் செய்து உழறல் காணேன், யான்' எனப் |
|
படுகளம் காண்டல்செல்லான், சினம் சிறந்து, |
|
உரு வினை நன்னன், அருளான், கரப்ப, |
|
15 |
பெரு விதுப்புற்ற பல் வேள் மகளிர் |
குரூஉப் பூம் பைந் தார் அருக்கிய பூசல், |
|
வசை விடக் கடக்கும் வயங்கு பெருந் தானை |
|
அகுதை கிளைதந்தாங்கு, மிகு பெயல் |
|
உப்புச் சிறை நில்லா வெள்ளம் போல, |
|
20 |
நாணு வரை நில்லாக் காமம் நண்ணி, |
நல்கினள், வாழியர், வந்தே ஓரி |
|
பல் பழப் பலவின் பயம் கெழு கொல்லிக் |
|
கார் மலர் கடுப்ப நாறும், |
|
ஏர் நுண், ஓதி மாஅயோளே! |
|
புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
தொடுத்தேன், மகிழ்ந! செல்லல் கொடித் தேர்ப் |
|
பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்தென, |
|
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண், |
|
'அஞ்சல்' என்ற ஆஅய் எயினன் |
|
5 |
இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி, |
தன் உயிர் கொடுத்தனன், சொல்லியது அமையாது; |
|
தெறல் அருங் கடவுள் முன்னர்த் தேற்றி, |
|
மெல் இறை முன்கை பற்றிய சொல் இறந்து, |
|
ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப, நின் |
|
10 |
மார்பு தருகல்லாய்; பிறன் ஆயினையே; |
இனி யான் விடுக்குவென் அல்லென்; மந்தி, |
|
பனி வார் கண்ணள், பல புலந்து உறைய, |
|
அடுந் திறல் அத்தி ஆடு அணி நசைஇ, |
|
நெடு நீர்க் காவிரி கொண்டு ஒளித்தாங்கு, நின் |
|
15 |
மனையோள் வவ்வலும் அஞ்சுவல்; சினைஇ, |
ஆரியர் அலறத் தாக்கி, பேர் இசைத் |
|
தொன்று முதிர் வடவரை வணங்கு வில் பொறித்து, |
|
வெஞ் சின வேந்தரைப் பிணித்தோன் |
|
வஞ்சி அன்ன, என் நலம் தந்து சென்மே! |
|
காதற்பரத்தை தலைமகற்குச் சொல்லியது. - பரணர் | |
மேல் |