ஆதிமந்தி |
வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர் |
|
ஆடுகளப் பறையின், அரிப்பன ஒலிப்ப, |
|
கோடை நீடிய அகன் பெருங் குன்றத்து, |
|
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு, |
|
5 |
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும் |
காடு இறந்தனரே, காதலர். மாமை, |
|
அரி நுண் பசலை பாஅய், பீரத்து |
|
எழில் மலர் புரைதல்வேண்டும். அலரே, |
|
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன் |
|
10 |
தொல் நிலை முழுமுதல் துமியப் பண்ணி, |
புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர் |
|
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே. யானே, |
|
காதலற் கெடுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து, |
|
ஆதிமந்தி போல, பேதுற்று |
|
15 |
அலந்தனென் உழல்வென்கொல்லோ பொலந்தார், |
கடல் கால் கிளர்ந்த வென்றி நல் வேல், |
|
வானவரம்பன் அடல் முனைக் கலங்கிய |
|
உடை மதில் ஓர் அரண் போல, |
|
அஞ்சுவரு நோயொடு, துஞ்சாதேனே! |
|
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வெள்ளிவீதியார் | |
மண் கனை முழவொடு மகிழ் மிகத் தூங்க, |
|
தண் துறை ஊரன் எம் சேரி வந்தென |
|
இன் கடுங் கள்ளின் அஃதை களிற்றொடு |
|
நன் கலன் ஈயும் நாள் மகிழ் இருக்கை |
|
5 |
அவை புகு பொருநர் பறையின், ஆனாது, |
கழறுப என்ப, அவன் பெண்டிர்; 'அந்தில், |
|
கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன், |
|
வகை அமைப் பொலிந்த, வனப்பு அமை, தெரியல், |
|
சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ? என, |
|
10 |
ஆதிமந்தி பேதுற்று இனைய, |
சிறை பறைந்து உரைஇச் செங்குணக்கு ஒழுகும் |
|
அம் தண் காவிரி போல, |
|
கொண்டு கை வலித்தல் சூழ்ந்திசின், யானே. |
|
'தலைமகனை நயப்பித்துக் கொண்டாள்' என்று கழறக் கேட்ட பரத்தை,தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப, சொல்லியது. - பரணர் | |
திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க, |
|
புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்பப் |
|
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி, |
|
எழுது எழில் மழைக் கண் கலுழ, நோய் கூர்ந்து, |
|
5 |
ஆதிமந்தியின் அறிவு பிறிதுஆகி, |
பேதுற்றிசினே காதல்அம் தோழி! |
|
காய்கதிர் திருகலின் கனைந்து கால் கடுகி, |
|
ஆடுதளிர் இருப்பைக் கூடு குவி வான் பூ, |
|
கோடு கடை கழங்கின், அறைமிசைத் தாஅம் |
|
10 |
காடு இறந்தனரே, காதலர்; அடுபோர், |
வீயா விழுப் புகழ், விண் தோய் வியன் குடை, |
|
ஈர் எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த |
|
கழுவுள் காமூர் போலக் |
|
கலங்கின்றுமாது, அவர்த் தெளிந்த என் நெஞ்சே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றது. - பரணர் | |
வான் உற நிவந்த நீல் நிறப் பெரு மலைக் |
|
கான நாடன் உறீஇய நோய்க்கு, என் |
|
மேனி ஆய் நலம் தொலைதலின், மொழிவென்; |
|
முழவு முகம் புலராக் கலி கொள் ஆங்கண், |
|
5 |
கழாஅர்ப் பெருந் துறை விழவின் ஆடும், |
ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின், |
|
ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇ, |
|
தாழ் இருங் கதுப்பின் காவிரி வவ்வலின், |
|
மாதிரம் துழைஇ, மதி மருண்டு அலந்த |
|
10 |
ஆதிமந்தி காதலற் காட்டி, |
படு கடல் புக்க பாடல்சால் சிறப்பின் |
|
மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர், |
|
சென்மோ வாழி, தோழி! பல் நாள், |
|
உரவு உரும் ஏறொடு மயங்கி, |
|
15 |
இரவுப் பெயல் பொழிந்த ஈர்ந் தண் ஆறே. |
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லியது. - பரணர் | |
மணி மருள் மலர முள்ளி அமன்ற, |
|
துணி நீர், இலஞ்சிக் கொண்ட பெரு மீன் |
|
அரி நிறக் கொழுங் குறை வௌவினர் மாந்தி, |
|
வெண்ணெல் அரிநர் பெயர்நிலைப் பின்றை, |
|
5 |
இடை நிலம் நெரிதரு நெடுங் கதிர்ப் பல் சூட்டுப் |
பனி படு சாய்ப் புறம் பரிப்ப, கழனிக் |
|
கருங் கோட்டு மாஅத்து அலங்கு சினைப் புதுப் பூ |
|
மயங்கு மழைத் துவலையின் தாஅம் ஊரன் |
|
காமம் பெருமை அறியேன், நன்றும் |
|
10 |
உய்ந்தனென் வாழி, தோழி! அல்கல் |
அணி கிளர் சாந்தின் அம் பட்டு இமைப்ப, |
|
கொடுங் குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை |
|
அறியாமையின் அழிந்த நெஞ்சின், |
|
'ஏற்று இயல் எழில் நடைப் பொலிந்த மொய்ம்பின், |
|
15 |
தோட்டு இருஞ் சுரியல் மணந்த பித்தை, |
ஆட்டன் அத்தியைக் காணீரோ?' என |
|
நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின், |
|
'கடல் கொண்டன்று' என, 'புனல் ஒளித்தன்று' என, |
|
கலுழ்ந்த கண்ணள், காதலற் கெடுத்த |
|
20 |
ஆதிமந்தி போல, |
ஏதம் சொல்லி, பேது பெரிது உறலே. |
|
ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைமகன் நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - பரணர் | |
தொடுத்தேன், மகிழ்ந! செல்லல் கொடித் தேர்ப் |
|
பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்தென, |
|
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண், |
|
'அஞ்சல்' என்ற ஆஅய் எயினன் |
|
5 |
இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி, |
தன் உயிர் கொடுத்தனன், சொல்லியது அமையாது; |
|
தெறல் அருங் கடவுள் முன்னர்த் தேற்றி, |
|
மெல் இறை முன்கை பற்றிய சொல் இறந்து, |
|
ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப, நின் |
|
10 |
மார்பு தருகல்லாய்; பிறன் ஆயினையே; |
இனி யான் விடுக்குவென் அல்லென்; மந்தி, |
|
பனி வார் கண்ணள், பல புலந்து உறைய, |
|
அடுந் திறல் அத்தி ஆடு அணி நசைஇ, |
|
நெடு நீர்க் காவிரி கொண்டு ஒளித்தாங்கு, நின் |
|
15 |
மனையோள் வவ்வலும் அஞ்சுவல்; சினைஇ, |
ஆரியர் அலறத் தாக்கி, பேர் இசைத் |
|
தொன்று முதிர் வடவரை வணங்கு வில் பொறித்து, |
|
வெஞ் சின வேந்தரைப் பிணித்தோன் |
|
வஞ்சி அன்ன, என் நலம் தந்து சென்மே! |
|
காதற்பரத்தை தலைமகற்குச் சொல்லியது. - பரணர் | |
மேல் |