ஆரியர்
|
|
நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த
|
|
வாளை வெண் போத்து உணீஇய, நாரை தன்
|
|
அடி அறிவுறுதல் அஞ்சி, பைபயக்
|
|
கடி இலம் புகூஉம் கள்வன் போல,
|
5
|
சாஅய் ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடு
|
|
ஆவது ஆக! இனி நாண் உண்டோ?
|
|
வருகதில் அம்ம, எம் சேரி சேர!
|
|
அரி வேய் உண்கண் அவன் பெண்டிர் காண,
|
|
தாரும் தானையும் பற்றி, ஆரியர்
|
10
|
பிடி பயின்று தரூஉம் பெருங் களிறு போல,
|
|
தோள் கந்தாகக் கூந்தலின் பிணித்து, அவன்
|
|
மார்பு கடி கொள்ளேன்ஆயின், ஆர்வுற்று
|
|
இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன்
பொருள்போல்,
|
|
பரந்து வெளிப்படாது ஆகி,
|
15
|
வருந்துகதில்ல, யாய் ஓம்பிய நலனே!
|
தலைமகட்குப் பாங்காயினார்
கேட்பப் பரத்தை சொல்லியது. - பரணர்
|
|
|
குழற் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலைப்
|
|
பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த
|
|
உண்ணாப் பிணவின் உயக்கம் சொலிய,
|
|
நாள் இரை தரீஇய எழுந்த நீர் நாய்
|
5
|
வாளையொடு உழப்ப, துறை கலுழ்ந்தமையின்,
|
|
தெண் கட் தேறல் மாந்தி, மகளிர்
|
|
நுண் செயல் அம் குடம் இரீஇ, பண்பின்
|
|
மகிழ்நன் பரத்தைமை பாடி, அவிழ் இணர்க்
|
|
காஞ்சி நீழல் குரவை அயரும்
|
10
|
தீம் பெரும் பொய்கைத் துறை கேழ் ஊரன்
|
|
தேர் தர வந்த நேர் இழை மகளிர்
|
|
ஏசுப என்ப, என் நலனே; அதுவே
|
|
பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சினக்
|
|
கொல் களிற்று யானை நல்கல்மாறே;
|
15
|
தாமும் பிறரும் உளர்போல் சேறல்
|
|
முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின்,
|
|
யான் அவண் வாராமாறே; வரினே, வானிடைச்
|
|
சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல,
|
|
என்னொடு திரியானாயின், வென் வேல்
|
20
|
மாரி அம்பின் மழைத் தோற் சோழர்
|
|
வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை,
|
|
ஆரியர் படையின் உடைக, என்
|
|
நேர் இறை முன்கை வீங்கிய வளையே!
|
நயப் புப்பரத்தை இற்
பரத்தைக்குப் பாங்காயினார் கேட்பச்
சொல்லியது. - பாவைக் கொட்டிலார்
|
|
|
பொய்கை நீர்நாய்ப் புலவு நாறு இரும் போத்து
|
|
வாளை நாள் இரை தேரும் ஊர!
|
|
நாணினென், பெரும! யானே பாணன்
|
|
மல் அடு மார்பின் வலி உற வருந்தி,
|
5
|
எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன்
|
|
நிறைத் திரள் முழவுத் தோள் கையகத்து
ஒழிந்த
|
|
திறன் வேறு கிடக்கை நோக்கி, நல் போர்க்
|
|
கணையன் நாணியாங்கு மறையினள்
|
|
மெல்ல வந்து, நல்ல கூறி,
|
10
|
'மை ஈர் ஓதி மடவோய்! யானும் நின்
|
|
சேரியேனே; அயல் இலாட்டியேன்;
|
|
நுங்கை ஆகுவென் நினக்கு' என, தன் கைத்
|
|
தொடு மணி மெல் விரல் தண்ணெனத் தைவர,
|
|
நுதலும் கூந்தலும் நீவி,
|
15
|
பகல் வந்து பெயர்ந்த வாணுதற் கண்டே.
|
தோழி வாயில் மறுத்தது;
தலைமகள் தகுதி சொல்லியதூஉம் ஆம். - பரணர்
|
|
|
தொடுத்தேன், மகிழ்ந! செல்லல் கொடித்
தேர்ப்
|
|
பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்தென,
|
|
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண்,
|
|
'அஞ்சல்' என்ற ஆஅய் எயினன்
|
5
|
இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி,
|
|
தன் உயிர் கொடுத்தனன், சொல்லியது அமையாது;
|
|
தெறல் அருங் கடவுள் முன்னர்த் தேற்றி,
|
|
மெல் இறை முன்கை பற்றிய சொல் இறந்து,
|
|
ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப, நின்
|
10
|
மார்பு தருகல்லாய்; பிறன் ஆயினையே;
|
|
இனி யான் விடுக்குவென் அல்லென்; மந்தி,
|
|
பனி வார் கண்ணள், பல புலந்து உறைய,
|
|
அடுந் திறல் அத்தி ஆடு அணி நசைஇ,
|
|
நெடு நீர்க் காவிரி கொண்டு ஒளித்தாங்கு,
நின்
|
15
|
மனையோள் வவ்வலும் அஞ்சுவல்; சினைஇ,
|
|
ஆரியர் அலறத் தாக்கி, பேர் இசைத்
|
தொன்று முதிர் வடவரை வணங்கு வில் பொறித்து,
|
|
|
வெஞ் சின வேந்தரைப் பிணித்தோன்
|
|
வஞ்சி அன்ன, என் நலம் தந்து சென்மே!
|
காதற்பரத்தை தலைமகற்குச்
சொல்லியது. - பரணர்
|
|
|
'இழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூர,
|
|
படர் மலி வருத்தமொடு பல புலந்து அசைஇ,
|
|
மென் தோள் நெகிழச் சாஅய், கொன்றை
|
|
ஊழுறு மலரின் பாழ் பட முற்றிய
|
5
|
பசலை மேனி நோக்கி, நுதல் பசந்து,
|
|
இன்னேம் ஆகிய எம் இவண் அருளான்,
|
|
நும்மோன் செய்த கொடுமைக்கு, இம்மென்று,
|
|
அலமரல் மழைக் கண் தெண் பனி மல்க,
|
|
நன்று புறமாறி அகறல், யாழ நின்
|
10
|
குன்று கெழு நாடற்கு என் எனப்படுமோ?
|
|
கரை பொரு நீத்தம்! உரை' எனக் கழறி,
|
|
நின்னொடு புலத்தல் அஞ்சி, அவர் மலைப்
|
|
பல் மலர் போர்த்து, நாணு மிக ஒடுங்கி,
|
|
மறைந்தனை கழியும் நிற் தந்து செலுத்தி,
|
15
|
நயன் அறத் துறத்தல் வல்லியோரே,
|
|
நொதுமலாளர்; அது கண்ணோடாது,
|
|
அழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ,
|
|
மாரி புறந்தர நந்தி, ஆரியர்
|
|
பொன் படு நெடு வரை புரையும் எந்தை
|
20
|
பல் பூங் கானத்து அல்கி, இன்று, இவண்
|
|
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ?
|
|
குய வரி இரும் போத்துப் பொருத புண் கூர்ந்து,
|
|
உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை
|
|
வாங்கு அமைக் கழையின் நரலும், அவர்
|
25
|
ஓங்கு மலை நாட்டின் வரூஉவோயே!
|
காமம் மிக்க கழி படர்
கிளவியால், வரைவிடத்துக்கண், தலைமகள்
தலைமகன் வரையினின்றும் போந்த ஆற்றொடு
புலந்து, சொல்லியது. -இம்மென்கீரனார்
|
|
மேல் |