இராமன்
|
|
கொடுந் திமிற் பரதவர் வேட்டம்
வாய்த்தென,
|
|
இரும் புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்
|
|
குறுங் கண் அவ் வலைப் பயம் பாராட்டி,
|
|
கொழுங் கண் அயிலை பகுக்கும் துறைவன்
|
5
|
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே
|
|
அலர் வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்ற,
|
|
பலரும் ஆங்கு அறிந்தனர்மன்னே; இனியே
|
|
வதுவை கூடிய பின்றை, புதுவது
|
|
பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்
|
10
|
கானல் அம் பெருந் துறைக் கவினி மா நீர்ப்
|
|
பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
|
|
விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும்
|
|
வென் வேற் கவுரியர் தொல் முது கோடி
|
|
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை,
|
15
|
வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த
|
|
பல் வீழ் ஆலம் போல,
|
|
ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.
|
தலைமகன் வரைவு மலிந்தமை
தோழி தலைமகட்குச் சொல்லியது.- மதுரைத்
தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார்
|
|
மேல் |