இளம் பெருஞ் சென்னி
|
|
'சென்று நீடுநர்அல்லர்; அவர்வயின்
|
|
இனைதல் ஆனாய்' என்றிசின் இகுளை!
|
|
அம்பு தொடை அமைதி காண்மார், வம்பலர்
|
|
கலன் இலர் ஆயினும் கொன்று, புள் ஊட்டும்
|
5
|
கல்லா இளையர் கலித்த கவலை,
|
|
கண நரி இனனொடு குழீஇ, நிணன் அருந்தும்
|
|
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல்,
|
|
அத்த எருவைச் சேவல் சேர்ந்த
|
|
அரை சேர் யாத்த வெண் திரள், வினை விறல்,
|
10
|
எழூஉத் திணி தோள், சோழர் பெரு மகன்
|
|
விளங்கு புகழ் நிறுத்த இளம் பெருஞ் சென்னி
|
|
குடிக் கடன் ஆகலின், குறைவினை முடிமார்,
|
|
செம்பு உறழ் புரிசைப் பாழி நூறி,
|
|
வம்ப வடுகர் பைந் தலை சவட்டி,
|
15
|
கொன்ற யானைக் கோட்டின் தோன்றும்,
|
|
அஞ்சுவரு மரபின் வெஞ் சுரம் இறந்தோர்
|
|
நோய் இலர் பெயர்தல் அறியின்,
|
|
ஆழலமன்னோ, தோழி! என் கண்ணே.
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகன்
தோழிக்குச் சொல்லியது. - இடையன் சேந்தங்
கொற்றனார்
|
|
மேல் |