உதியஞ் சேரல்
|
|
உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும்
|
|
அன்னை சொல்லும் உய்கம்; என்னதூஉம்
|
|
ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழிச்
|
|
சேரிஅம் பெண்டிர் கௌவையும் ஒழிகம்;
|
5
|
நாடு கண் அகற்றிய உதியஞ்சேரற்
|
|
பாடிச் சென்ற பரிசிலர் போல
|
|
உவ இனி வாழி, தோழி! அவரே,
|
|
பொம்மல் ஓதி! நம்மொடு ஒராங்குச்
|
|
செலவு அயர்ந்தனரால் இன்றே மலைதொறும்
|
10
|
மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி,
|
|
மீன் கொள் பரதவர் கொடுந் திமில் நளி
சுடர்
|
|
வான் தோய் புணரிமிசைக் கண்டாங்கு,
|
|
மேவரத் தோன்றும் யாஅ உயர் நனந்தலை
|
|
உயவல் யானை வெரிநுச் சென்றன்ன
|
15
|
கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி,
|
|
காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல்
|
|
ஆறு கடிகொள்ளும் அருஞ் சுரம்; 'பணைத் தோள்,
|
|
நாறு ஐங் கூந்தல், கொம்மை வரி முலை,
|
|
நிரை இதழ் உண்கண், மகளிர்க்கு
|
20
|
அரியவால்' என அழுங்கிய செலவே!
|
வேறுப்பட்ட தலைமகட்குத்
தலைமகன் உடன்போக்கு வலித்தமை தோழி
சொல்லியது. - மாமூலனார்
|
|
|
யாமம் நும்மொடு கழிப்பி, நோய் மிக,
|
|
பனி வார் கண்ணேம் வைகுதும்; இனியே;
|
|
ஆன்றல் வேண்டும் வான் தோய் வெற்ப!
|
|
பல் ஆன் குன்றில் படு நிழல் சேர்ந்த
|
5
|
நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண்
|
|
கொடைக் கடன் ஏன்ற கோடா நெஞ்சின்
|
|
உதியன் அட்டில் போல ஒலி எழுந்து,
|
|
அருவி ஆர்க்கும் பெரு வரைச் சிலம்பின்;
|
|
ஈன்றணி இரும் பிடி தழீஇ, களிறு தன்
|
10
|
தூங்குநடைக் குழவி துயில் புறங்காப்ப,
|
|
ஒடுங்கு அளை புலம்பப் போகி, கடுங் கண்
|
|
வாள் வரி வயப் புலி கல் முழை உரற,
|
|
கானவர் மடிந்த கங்குல்;
|
|
மான் அதர்ச் சிறு நெறி வருதல், நீயே?
|
இரவுக்குறி வந்த தலைமகனை
இரவுக்குறி விலக்கி, வரைவு கடாயது.
-கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
|
|
|
அலமரல் மழைக் கண் மல்கு பனி வார, நின்
|
|
அலர் முலை நனைய, அழாஅல் தோழி!
|
|
எரி கவர்பு உண்ட கரி புறப் பெரு நிலம்
|
|
பீடு கெழு மருங்கின் ஓடு மழை துறந்தென,
|
5
|
ஊன் இல் யானை உயங்கும் வேனில்,
|
|
மறப் படைக் குதிரை, மாறா மைந்தின்,
|
|
துறக்கம் எய்திய தொய்யா நல் இசை
|
|
முதியர்ப் பேணிய, உதியஞ் சேரல்
|
|
பெருஞ் சோறு கொடுத்த ஞான்றை, இரும் பல்
|
10
|
கூளிச் சுற்றம் குழீஇ இருந்தாங்கு,
|
|
குறியவும் நெடியவும் குன்று தலைமணந்த
|
|
சுரன் இறந்து அகன்றனர்ஆயினும், மிக நனி
|
|
மடங்கா உள்ளமொடு மதி மயக்குறாஅ,
|
|
பொருள்வயின் நீடலோஇலர் நின்
|
15
|
இருள் ஐங் கூந்தல் இன் துயில் மறந்தே.
|
பிரிவின்கண் வேறுபட்ட
தலைமகட்குத் தோழி சொல்லியது. -மாமூலனார்
|
|
|
நன்னன் உதியன் அருங் கடிப் பாழி,
|
|
தொல் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த
|
|
பொன்னினும் அருமை நன்கு அறிந்தும்,
அன்னோட்
|
|
துன்னலம்மாதோ எனினும், அஃது ஒல்லாய்
|
5
|
தண் மழை தவழும் தாழ் நீர் நனந்தலைக்
|
|
கடுங் காற்று எடுக்கும் நெடும் பெருங் குன்றத்து
|
|
மாய இருள் அளை மாய் கல் போல,
|
|
மாய்கதில் வாழிய, நெஞ்சே! நாளும்,
|
|
மெல் இயற் குறுமகள் நல் அகம் நசைஇ,
|
10
|
அரவு இரை தேரும் அஞ்சுவரு சிறு நெறி,
|
|
இரவின் எய்தியும் பெறாஅய், அருள் வரப்
|
|
புல்லென் கண்ணை புலம்பு கொண்டு, உலகத்து
|
|
உள்ளோர்க்கு எல்லாம் பெரு நகையாக,
|
|
காமம் கைம்மிக உறுதர,
|
15
|
ஆனா அரு படர் தலைத்தந்தோயே!
|
அல்லகுறிப்பட்டுப்
பதிப்பெயர்ந்த தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. -பரணர்
|
|
மேல் |