எருமை
|
|
பகுவாய் வராஅற் பல் வரி இரும் போத்துக்
|
|
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி,
|
|
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக்
|
|
கூம்பு விடு பல் மலர் சிதையப் பாய்ந்து,
எழுந்து,
|
5
|
அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி,
|
|
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது,
|
|
கயிறு இடு கதச் சேப் போல, மதம் மிக்கு,
|
|
நாள், கயம் உழக்கும் பூக் கேழ் ஊர!
|
|
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை,
|
10
|
திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில்,
|
|
நறும் பல் கூந்தற் குறுந் தொடி மடந்தையொடு
|
|
வதுவை அயர்ந்தனை என்ப. அலரே,
|
|
கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச்
செழியன்
|
|
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப,
|
15
|
சேரல், செம்பியன், சினம் கெழு திதியன்,
|
|
போர் வல் யானைப் பொலம் பூண் எழினி,
|
|
நார் அரி நறவின் எருமையூரன்,
|
|
தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
|
|
இருங்கோ வேண்மான், இயல் தேர்ப் பொருநன்,
என்று
|
20
|
எழுவர் நல் வலம் அடங்க, ஒரு பகல்
|
|
முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரை செல,
|
|
கொன்று, களம்வேட்ட ஞான்றை,
|
|
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே!
|
தலைமகள் பரத்தையிற்
பிரிந்து வந்த தலைமகனொடு புலந்து
சொல்லியது. - மதுரை நக்கீரர்
|
|
|
அழியா விழவின், அஞ்சுவரு மூதூர்ப்
|
|
பழி இலர்ஆயினும், பலர் புறங்கூறும்
|
|
அம்பல் ஒழுக்கமும் ஆகியர்; வெஞ் சொல்
|
|
சேரிஅம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக;
|
5
|
நுண் பூண் எருமை குட நாட்டன்ன என்
|
|
ஆய்நலம் தொலையினும் தொலைக; என்றும்
|
|
நோய் இலராக, நம் காதலர் வாய் வாள்
|
|
எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்
|
|
கைதொழு மரபின் முன் பரித்து இடூஉப்
பழிச்சிய
|
10
|
வள் உயிர் வணர் மருப்பு அன்ன, ஒள் இணர்ச்
|
|
சுடர்ப் பூங் கொன்றை ஊழுறு விளைநெற்று
|
|
அறைமிசைத் தாஅம் அத்த நீளிடை,
|
|
பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை,
|
|
சினம் மிகு முன்பின், வாம் மான், அஞ்சி
|
15
|
இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை,
|
|
நன்னர் ஆய்கவின் தொலைய, சேய் நாட்டு,
|
|
நம் நீத்து உறையும் பொருட்பிணிக்
|
|
கூடாமையின், நீடியோரே.
|
பிரிவிடை வற்புறுக்கும்
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. -
மாமூலனார்
|
|
|
'வைகல்தோறும் பசலை பாய, என்
|
|
மெய்யும் பெரும்பிறிது ஆகின்று, ஒய்யென;
|
|
அன்னையும் அமரா முகத்தினள்; அலரே,
|
|
வாடாப் பூவின் கொங்கர் ஓட்டி,
|
5
|
நாடு பல தந்த பசும் பூட் பாண்டியன்
|
|
பொன் மலி நெடு நகர்க் கூடல் ஆடிய
|
|
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே; ஈங்கு யான்
|
|
சில நாள் உய்யலென் போன்ம்' எனப் பல
நினைந்து,
|
|
ஆழல் வாழி, தோழி! வடாஅது,
|
10
|
ஆர் இருள் நடு நாள் ஏர் ஆ உய்ய,
|
|
பகை முனை அறுத்துப் பல் இனம் சாஅய்,
|
|
கணம்சால் கோவலர் நெடு விளிப் பயிர்
அறிந்து,
|
|
இனம் தலைத் தரூஉம் துளங்கு இமில் நல் ஏற்றுத்
|
|
தழூஉப் பிணர் எருத்தம் தாழப் பூட்டிய
|
15
|
அம் தூம்பு அகல் அமைக் கமஞ்செலப் பெய்த
|
|
துறு காழ் வல்சியர் தொழு அறை வௌவி,
|
|
கன்றுடைப் பெரு நிரை மன்று நிறை தரூஉம்
|
|
நேரா வன் தோள் வடுகர் பெரு மகன்,
|
|
பேர் இசை எருமை நல் நாட்டு உள்ளதை
|
20
|
அயிரி யாறு இறந்தனர்ஆயினும், மயர் இறந்து
|
|
உள்ளுபதில்ல தாமே பணைத் தோள்,
|
|
குரும்பை மென் முலை, அரும்பிய சுணங்கின்,
|
|
நுசுப்பு அழித்து ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்,
|
|
மாக விசும்பின் திலகமொடு பதித்த
|
25
|
திங்கள் அன்ன நின் திரு முகத்து,
|
|
ஒண் சூட்டு அவிர் குழை மலைந்த நோக்கே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. -
நக்கீரர்
|
|
மேல் |