எவ்வி
|
|
அழியா விழவின், அஞ்சுவரு மூதூர்ப்
|
|
பழி இலர்ஆயினும், பலர் புறங்கூறும்
|
|
அம்பல் ஒழுக்கமும் ஆகியர்; வெஞ் சொல்
|
|
சேரிஅம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக;
|
5
|
நுண் பூண் எருமை குட நாட்டன்ன என்
|
|
ஆய்நலம் தொலையினும் தொலைக; என்றும்
|
|
நோய் இலராக, நம் காதலர் வாய் வாள்
|
|
எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்
|
|
கைதொழு மரபின் முன் பரித்து இடூஉப்
பழிச்சிய
|
10
|
வள் உயிர் வணர் மருப்பு அன்ன, ஒள் இணர்ச்
|
|
சுடர்ப் பூங் கொன்றை ஊழுறு விளைநெற்று
|
|
அறைமிசைத் தாஅம் அத்த நீளிடை,
|
|
பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை,
|
|
சினம் மிகு முன்பின், வாம் மான், அஞ்சி
|
15
|
இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை,
|
|
நன்னர் ஆய்கவின் தொலைய, சேய் நாட்டு,
|
|
நம் நீத்து உறையும் பொருட்பிணிக்
|
|
கூடாமையின், நீடியோரே.
|
பிரிவிடை வற்புறுக்கும்
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. -
மாமூலனார்
|
|
|
நின் வாய் செத்து நீ பல உள்ளி,
|
|
பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும்,
|
|
மலைமிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம்
|
|
தலை நாள் மா மலர் தண் துறைத் தயங்கக்
|
5
|
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று
|
|
அறல் வார் நெடுங் கயத்து அரு நிலை கலங்க,
|
|
மால் இருள் நடுநாட் போகி, தன் ஐயர்
|
|
காலைத் தந்த கணைக் கோட்டு வாளைக்கு,
|
|
அவ் வாங்கு உந்தி, அம் சொல், பாண்மகள்,
|
10
|
நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில்
|
|
பழஞ் செந் நெல்லின் முகவை கொள்ளாள்,
|
|
கழங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்
|
|
பயம் கெழு வைப்பிற் பல் வேல் எவ்வி
|
|
நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான்,
|
15
|
பொன் இணர் நறு மலர்ப் புன்னை வெஃகி,
|
|
திதியனொடு பொருத அன்னி போல
|
|
விளிகுவைகொல்லோ, நீயே கிளி எனச்
|
|
சிறிய மிழற்றும் செவ் வாய், பெரிய
|
|
கயல் என அமர்த்த உண்கண், புயல் எனப்
|
20
|
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால்,
|
|
மின் நேர் மருங்குல், குறுமகள்
|
|
பின்னிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே?
|
உணர்ப்புவயின் வாரா
ஊடற்கண், தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது; அல்ல குறிப்பிட்டு அழிந்ததூஉம்
ஆம்; தோழியைப் பின்னின்ற தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். -
நக்கீரர்
|
|
|
கோடுற நிவந்த நீடு இரும் பரப்பின்
|
|
அந்திப் பராஅய புதுப் புனல், நெருநை,
|
|
மைந்து மலி களிற்றின் தலைப் புணை தழீஇ,
|
|
நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல்
|
5
|
இளந் துணை மகளிரொடு ஈர் அணிக் கலைஇ,
|
|
நீர் பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழைக் கண்
|
|
நோக்குதொறும் நோக்குதொறும்
தவிர்விலையாகி,
|
|
காமம் கைம்மிகச் சிறத்தலின், நாண் இழந்து,
|
|
ஆடினை என்ப மகிழ்ந! அதுவே
|
10
|
யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன்
|
|
வாய் வாள் எவ்வி ஏவல் மேவார்
|
|
நெடு மிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர்
|
|
அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண்,
|
|
கள்ளுடைப் பெருஞ் சோற்று எல் இமிழ் அன்ன,
|
15
|
கவ்வை ஆகின்றால் பெரிதே; இனி அஃது
|
|
அவலம் அன்றுமன், எமக்கே; அயல
|
|
கழனி உழவர் கலி சிறந்து எடுத்த
|
|
கறங்கு இசை வெரீஇப் பறந்த தோகை
|
|
அணங்குடை வரைப்பகம் பொலிய வந்து இறுக்கும்
|
20
|
திரு மணி விளக்கின் அலைவாய்ச்
|
|
செரு மிகு சேஎயொடு உற்ற சூளே!
|
பரத்தையிற் பிரிந்து வந்து
கூடிய தலைமகற்குத் தலைமகள் சொல்லியது.
-பரணர்
|
|
|
தாழ் சினை மருதம் தகை பெறக் கவினிய
|
|
நீர் சூழ் வியன் களம் பொலிய, போர்பு
அழித்து,
|
|
கள் ஆர் களமர் பகடு தலை மாற்றி,
|
|
கடுங் காற்று எறிய, போகிய துரும்பு உடன்
|
5
|
காயல் சிறு தடிக் கண் கெடப் பாய்தலின்,
|
|
இரு நீர்ப் பரப்பின் பனித் துறைப் பரதவர்
|
|
தீம் பொழி வெள் உப்புச் சிதைதலின்,
சினைஇ,
|
|
கழனி உழவரொடு மாறு எதிர்ந்து, மயங்கி,
|
|
இருஞ் சேற்று அள்ளல் எறி செருக் கண்டு,
|
10
|
நரை மூதாளர் கை பிணி விடுத்து,
|
|
நனை முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும்
|
|
பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன,
|
|
நலம் பெறு பணைத் தோள், நல் நுதல்
அரிவையொடு,
|
|
மணம் கமழ் தண் பொழில் அல்கி, நெருநை
|
15
|
நீ தற் பிழைத்தமை அறிந்து,
|
|
கலுழ்ந்த கண்ணள், எம் அணங்கு அன்னாளே.
|
பரத்தையிற் பிரிந்து வந்த
தலைமகன் வாயில் வேண்டிய இடத்து,தோழி
சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார்
|
|
மேல் |