ஐயை
|
|
அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை,
|
|
அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன்கை,
|
|
இழை அணி பணைத் தோள், ஐயை தந்தை,
|
|
மழை வளம் தரூஉம் மா வண் தித்தன்,
|
5
|
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண்
|
|
கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம்,
|
|
குழை மாண் ஒள் இழை நீ வெய்யோளொடு,
|
|
வேழ வெண் புணை தழீஇ, பூழியர்
|
|
கயம் நாடு யானையின் முகன் அமர்ந்தாஅங்கு,
|
10
|
ஏந்து எழில் ஆகத்துப் பூந் தார் குழைய,
|
|
நெருநல் ஆடினை, புனலே; இன்று வந்து,
|
|
'ஆக வன முலை அரும்பிய சுணங்கின்,
|
|
மாசு இல் கற்பின், புதல்வன் தாய்!' என,
|
|
மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி, எம்
|
15
|
முதுமை எள்ளல்; அஃது அமைகும் தில்ல!
|
|
சுடர்ப் பூந் தாமரை நீர் முதிர் பழனத்து,
|
|
அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி,
|
|
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய்,
|
|
முள் அரைப் பிரம்பின் மூதரில் செறியும்,
|
20
|
பல் வேல் மத்தி, கழாஅர் அன்ன எம்
|
|
இளமை சென்று தவத் தொல்லஃதே;
|
|
இனிமை எவன் செய்வது, பொய்ம்மொழி,
எமக்கே?
|
பரத்தையிற் பிரிந்து வந்த
தலைமகற்குக் கிழத்தி கூறியது. - பரணர்
|
|
மேல் |