ஓரி
|
|
யாம இரவின் நெடுங் கடை நின்று,
|
|
தேம் முதிர் சிமையக் குன்றம் பாடும்
|
|
நுண் கோல் அகவுநர் வேண்டின், வெண் கோட்டு
|
|
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ்
|
5
|
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்,
|
|
அளி இயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை,
|
|
இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு
|
|
நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து,
|
|
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்தென, 'புள்
ஒருங்கு
|
10
|
அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று
|
|
ஒண் கதிர் தெறாமை, சிறகரின் கோலி,
|
|
நிழல் செய்து உழறல் காணேன், யான்' எனப்
|
|
படுகளம் காண்டல்செல்லான், சினம் சிறந்து,
|
|
உரு வினை நன்னன், அருளான், கரப்ப,
|
15
|
பெரு விதுப்புற்ற பல் வேள் மகளிர்
|
|
குரூஉப் பூம் பைந் தார் அருக்கிய பூசல்,
|
|
வசை விடக் கடக்கும் வயங்கு பெருந் தானை
|
|
அகுதை கிளைதந்தாங்கு, மிகு பெயல்
|
|
உப்புச் சிறை நில்லா வெள்ளம் போல,
|
20
|
நாணு வரை நில்லாக் காமம் நண்ணி,
|
|
நல்கினள், வாழியர், வந்தே ஓரி
|
|
பல் பழப் பலவின் பயம் கெழு கொல்லிக்
|
|
கார் மலர் கடுப்ப நாறும்,
|
|
ஏர் நுண், ஓதி மாஅயோளே!
|
புணர்ந்து நீங்கும் தலைமகன்
தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
|
|
|
'தோளும் தொல் கவின் தொலைந்தன; நாளும்
|
|
அன்னையும் அருந் துயர் உற்றனள்; அலரே,
|
|
பொன் அணி நெடுந் தேர்த் தென்னர் கோமான்,
|
|
எழு உறழ் திணி தோள் இயல் தேர்ச் செழியன்,
|
5
|
நேரா எழுவர் அடிப்படக் கடந்த
|
|
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது' என,
|
|
ஆழல் வாழி, தோழி! அவரே,
|
|
மாஅல் யானை மறப் போர்ப் புல்லி
|
|
காம்புடை நெடு வரை வேங்கடத்து உம்பர்
|
10
|
அறை இறந்து அகன்றனர் ஆயினும், நிறை இறந்து
|
|
உள்ளார்ஆதலோ அரிதே செவ் வேல்
|
|
முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
|
|
செல்லா நல் இசை நிறுத்த வல் வில்
|
|
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த
|
15
|
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லி,
|
|
நிலை பெறு கடவுள் ஆக்கிய,
|
|
பலர் புகழ் பாவை அன்ன நின் நலனே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகளைத் தோழி வற்புறீஇயது. - கல்லாடனார்
|
|
மேல் |