கட்டி
|
|
வந்து வினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும்
|
|
தம் திறை கொடுத்துத் தமர் ஆயினரே;
|
|
முரண் செறிந்திருந்த தானை இரண்டும்
|
|
ஒன்று என அறைந்தன பணையே; நின் தேர்
|
5
|
முன் இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது,
|
|
ஊர்க, பாக! ஒரு வினை, கழிய
|
|
நன்னன், ஏற்றை, நறும் பூண் அத்தி,
|
|
துன் அருங் கடுந் திறற் கங்கன், கட்டி,
|
|
பொன் அணி வல்வில் புன்றுறை, என்று ஆங்கு
|
10
|
அன்று அவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர்,
|
|
பருந்து படப் பண்ணி, பழையன் பட்டென,
|
|
கண்டது நோனானாகி, திண் தேர்க்
|
|
கணையன் அகப்பட, கழுமலம் தந்த
|
|
பிணைஅல்அம் கண்ணிப் பெரும் பூட் சென்னி
|
15
|
அழும்பில் அன்ன அறாஅ யாணர்,
|
|
பழம் பல் நெல்லின் பல் குடிப் பரவை,
|
|
பொங்கடி படிகயம் மண்டிய பசு மிளை,
|
|
தண் குடவாயில் அன்னோள்
|
|
பண்புடை ஆகத்து இன் துயில் பெறவே!
|
வினை முற்றி மீளும் தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது.- குடவாயிற்
கீரத்தனார்
|
|
|
உணர்குவென்அல்லென்; உரையல் நின் மாயம்;
|
|
நாண் இலை மன்ற யாணர் ஊர!
|
|
அகலுள் ஆங்கண், அம் பகை மடிவை,
|
|
குறுந் தொடி, மகளிர் குரூஉப் புனல் முனையின்,
|
5
|
பழனப் பைஞ் சாய் கொழுதி, கழனிக்
|
|
கரந்தை அம் செறுவின் வெண் குருகு ஓப்பும்,
|
|
வல் வில் எறுழ்த் தோள், பரதவர் கோமான்,
|
|
பல் வேல் மத்தி, கழாஅர் முன்துறை,
|
|
நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய,
|
10
|
விடியல் வந்த பெரு நீர்க் காவிரி,
|
|
தொடி அணி முன்கை நீ வெய்யோளொடு
|
|
முன் நாள் ஆடிய கவ்வை, இந் நாள்,
|
|
வலி மிகும் முன்பின் பாணனொடு, மலி தார்த்
|
|
தித்தன் வெளியன் உறந்தை நாள் அவைப்
|
15
|
பாடு இன் தெண் கிணைப் பாடு கேட்டு அஞ்சி,
|
|
போர் அடு தானைக் கட்டி
|
|
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே.
|
தலைமகற்குத் தோழி வாயில்
மறுத்தது. - பரணர்
|
|
மேல் |