கண்ணன் எழினி
|
|
மா மலர் வண்ணம் இழந்த கண்ணும்,
|
|
பூ நெகிழ் அணையின் சாஅய தோளும்,
|
|
நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த
|
|
தொல் நலம் இழந்த துயரமொடு, என்னதூஉம்
|
5
|
இனையல் வாழி, தோழி! முனை எழ
|
|
முன்னுவர் ஓட்டிய முரண் மிகு திருவின்,
|
|
மறம் மிகு தானை, கண்ணன் எழினி
|
|
தேம் முது குன்றம் இறந்தனர் ஆயினும்,
|
|
நீடலர் யாழ, நின் நிரை வளை நெகிழ
|
10
|
தோள் தாழ்பு இருளிய குவை இருங் கூந்தல்
|
|
மடவோள் தழீஇய விறலோன் மார்பில்
|
|
புன் தலைப் புதல்வன் ஊர்பு இழிந்தாங்கு,
|
|
கடுஞ்சூல் மடப் பிடி தழீஇய வெண் கோட்டு
|
|
இனம்சால் வேழம், கன்று ஊர்பு இழிதர,
|
15
|
பள்ளி கொள்ளும் பனிச் சுரம் நீந்தி,
|
|
ஒள் இணர்க் கொன்றை ஓங்கு மலை அத்தம்
|
|
வினை வலியுறூஉம் நெஞ்சமொடு
|
|
இனையர் ஆகி, நப் பிரிந்திசினோரே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -மாமூலனார்
|
|
மேல் |