கணையன்
|
|
வந்து வினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும்
|
|
தம் திறை கொடுத்துத் தமர் ஆயினரே;
|
|
முரண் செறிந்திருந்த தானை இரண்டும்
|
|
ஒன்று என அறைந்தன பணையே; நின் தேர்
|
5
|
முன் இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது,
|
|
ஊர்க, பாக! ஒரு வினை, கழிய
|
|
நன்னன், ஏற்றை, நறும் பூண் அத்தி,
|
|
துன் அருங் கடுந் திறற் கங்கன், கட்டி,
|
|
பொன் அணி வல்வில் புன்றுறை, என்று ஆங்கு
|
10
|
அன்று அவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர்,
|
|
பருந்து படப் பண்ணி, பழையன் பட்டென,
|
|
கண்டது நோனானாகி, திண் தேர்க்
|
|
கணையன் அகப்பட, கழுமலம் தந்த
|
|
பிணைஅல்அம் கண்ணிப் பெரும் பூட் சென்னி
|
15
|
அழும்பில் அன்ன அறாஅ யாணர்,
|
|
பழம் பல் நெல்லின் பல் குடிப் பரவை,
|
|
பொங்கடி படிகயம் மண்டிய பசு மிளை,
|
|
தண் குடவாயில் அன்னோள்
|
|
பண்புடை ஆகத்து இன் துயில் பெறவே!
|
வினை முற்றி மீளும் தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது.- குடவாயிற்
கீரத்தனார்
|
|
|
பொய்கை நீர்நாய்ப் புலவு நாறு இரும் போத்து
|
|
வாளை நாள் இரை தேரும் ஊர!
|
|
நாணினென், பெரும! யானே பாணன்
|
|
மல் அடு மார்பின் வலி உற வருந்தி,
|
5
|
எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன்
|
|
நிறைத் திரள் முழவுத் தோள் கையகத்து
ஒழிந்த
|
|
திறன் வேறு கிடக்கை நோக்கி, நல் போர்க்
|
|
கணையன் நாணியாங்கு மறையினள்
|
|
மெல்ல வந்து, நல்ல கூறி,
|
10
|
'மை ஈர் ஓதி மடவோய்! யானும் நின்
|
|
சேரியேனே; அயல் இலாட்டியேன்;
|
|
நுங்கை ஆகுவென் நினக்கு' என, தன் கைத்
|
|
தொடு மணி மெல் விரல் தண்ணெனத் தைவர,
|
|
நுதலும் கூந்தலும் நீவி,
|
15
|
பகல் வந்து பெயர்ந்த வாணுதற் கண்டே.
|
தோழி வாயில் மறுத்தது;
தலைமகள் தகுதி சொல்லியதூஉம் ஆம். - பரணர்
|
|
மேல் |