கபிலன்
|
|
'நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி,
|
|
இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின்,
|
|
வரி ஞிமிறு ஆர்க்கும், வாய் புகு, கடாத்து,
|
|
பொறி நுதற் பொலிந்த வயக் களிற்று
ஒருத்தல்
|
5
|
இரும் பிணர்த் தடக் கையின், ஏமுறத் தழுவ,
|
|
கடுஞ்சூல் மடப் பிடி நடுங்கும் சாரல்,
|
|
தேம் பிழி நறவின் குறவர் முன்றில்,
|
|
முந்தூழ் ஆய் மலர் உதிர, காந்தள்
|
|
நீடு இதழ் நெடுந் துடுப்பு ஒசிய, தண்ணென
|
10
|
வாடை தூக்கும் வருபனி அற்சிரம்,
|
|
நம் இல் புலம்பின், தம் ஊர்த் தமியர்
|
|
என் ஆகுவர்கொல் அளியர்தாம்?' என,
|
|
எம் விட்டு அகன்ற சில் நாள், சிறிதும்,
|
|
உள்ளியும் அறிதிரோ ஓங்குமலைநாட!
|
15
|
உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை
|
|
வாய்மொழிக் கபிலன் சூழ, சேய் நின்று
|
|
செழுஞ் செய்ந் நெல்லின் விளைகதிர்
கொண்டு,
|
|
தடந் தாள் ஆம்பல் மலரொடு கூட்டி,
|
|
யாண்டு பல கழிய, வேண்டுவயிற் பிழையாது,
|
20
|
ஆள் இடூஉக் கடந்து, வாள் அமர் உழக்கி,
|
|
ஏந்துகோட்டு யானை வேந்தர் ஓட்டிய,
|
|
கடும் பரிப் புரவிக் கை வண் பாரி
|
|
தீம் பெரும் பைஞ் சுனைப் பூத்த
|
|
தேம் கமழ் புது மலர் நாறும் இவள் நுதலே?
|
களவுக் காலத்துப் பிரிந்து
வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.- மதுரை
நக்கீரனார்
|
|
மேல் |