கரிகால் வளவன்
|
|
காய்ந்து செலற் கனலி கல் பகத் தெறுதலின்,
|
|
ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை,
|
|
உளி முக வெம் பரல் அடி வருத்துறாலின்,
|
|
விளி முறை அறியா வேய் கரி கானம்,
|
5
|
வயக் களிற்று அன்ன காளையொடு என் மகள்
|
|
கழிந்ததற்கு அழிந்தன்றோஇலெனே! ஒழிந்து
யாம்
|
|
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அசைஇ,
|
|
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
|
|
கண்படை பெறேன், கனவ ஒண் படைக்
|
10
|
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
|
|
பொருது புண் நாணிய சேரலாதன்
|
|
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்தென,
|
|
இன்னா இன் உரை கேட்ட சான்றோர்
|
|
அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்,
|
15
|
பெரும்பிறிது ஆகியாங்கு பிரிந்து இவண்
|
|
காதல் வேண்டி, எற் துறந்து
|
|
போதல்செல்லா என் உயிரொடு புலந்தே.
|
புணர்ந்துடன் போன தலைமகட்கு
இரங்கிய தாய் தெருட்டும்
அயலிலாட்டியார்க்கு உரைத்தது. - மாமூலனார்
|
|
|
அரம் போழ் அவ் வளை தோள் நிலை நெகிழ,
|
|
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி
|
|
இரங் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை
|
|
ஆலி அன்ன வால் வீ தாஅய்,
|
5
|
வை வால் ஓதி மைஅணல் ஏய்ப்பத்
|
|
தாது உறு குவளைப்போது பிணி அவிழ,
|
|
படாஅப் பைங் கண் பா அடிக் கய வாய்க்
|
|
கடாஅம் மாறிய யானை போல,
|
|
பெய்து வறிது ஆகிய பொங்கு செலற் கொண்மூ
|
10
|
மை தோய் விசும்பின் மாதிரத்து உழிதர,
|
|
பனி அடூஉ நின்ற பானாட் கங்குல்
|
|
தனியோர் மதுகை தூக்காய், தண்ணென,
|
|
முனிய அலைத்தி, முரண் இல் காலை;
|
|
கைதொழு மரபின் கடவுள் சான்ற
|
15
|
செய்வினை மருங்கின் சென்றோர் வல் வரின்
|
|
விரிஉளைப் பொலிந்த பரியுடை நல் மான்
|
|
வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த
|
|
பெரு வளக் கரிகால் முன்னிலைச் செல்லார்,
|
|
சூடா வாகைப் பறந்தலை, ஆடு பெற
|
20
|
ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த
|
|
பீடு இல் மன்னர் போல,
|
|
ஓடுவை மன்னால் வாடை! நீ எமக்கே.
|
தலைமகன் வினை முற்றி
மீண்டமை உணர்ந்த தோழி தலைமகட்குச்
சொல்லியது. -பரணர்
|
|
|
அம்ம வாழி, தோழி! கைம்மிகக்
|
|
கனவும் கங்குல்தோறு இனிய; நனவும்
|
|
புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின;
|
|
நெஞ்சும் நனிபுகன்று உறையும்; எஞ்சாது
|
5
|
உலகு தொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி,
|
|
மழை கால்நீங்கிய மாக விசும்பில்
|
|
குறு முயல் மறு நிறம் கிளர, மதி நிறைந்து,
|
|
அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்;
|
|
மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி,
|
10
|
பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
|
|
விழவு உடன் அயர, வருகதில் அம்ம!
|
|
துவரப் புலர்ந்து தூ மலர் கஞலி,
|
|
தகரம் நாறும் தண் நறுங் கதுப்பின்
|
|
புது மண மகடூஉ அயினிய கடி நகர்ப்
|
15
|
பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ,
|
|
கூழைக் கூந்தற் குறுந் தொடி மகளிர்
|
|
பெருஞ் செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து,
|
|
பாசவல் இடிக்கும் இருங் காழ் உலக்கைக்
|
|
கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண் குருகு
|
20
|
தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது;
|
|
நெடுங் கால் மாஅத்துக் குறும் பறை பயிற்றும்
|
|
செல் குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிகால்
|
|
வெல் போர்ச் சோழன் இடையாற்று அன்ன
|
|
நல் இசை வெறுக்கை தருமார், பல் பொறிப்
|
25
|
புலிக் கேழ் உற்ற பூவிடைப் பெருஞ் சினை
|
|
நரந்த நறும் பூ நாள் மலர் உதிர,
|
|
கலை பாய்ந்து உகளும், கல் சேர் வேங்கை,
|
|
தேம் கமழ் நெடு வரைப் பிறங்கிய
|
|
வேங்கட வைப்பிற் சுரன் இறந்தோரே.
|
'பிரிவிடை ஆற்றாள்' எனக்
கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. -
நக்கீரர்
|
|
|
பிணர் மோட்டு நந்தின் பேழ் வாய் ஏற்றை
|
|
கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக,
|
|
நெடு நீர்ப் பொய்கைத் துணையொடு புணரும்
|
|
மலி நீர் அகல் வயல் யாணர் ஊர!
|
5
|
போது ஆர் கூந்தல் நீ வெய்யோளொடு
|
|
தாது ஆர் காஞ்சித் தண் பொழில் அகல் யாறு
|
|
ஆடினை என்ப, நெருநை; அலரே
|
|
காய் சின மொய்ம்பின் பெரும் பெயர்க்
கரிகால்
|
|
ஆர்கலி நறவின் வெண்ணிவாயில்,
|
10
|
சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின்
|
|
இமிழ் இசை முரசம் பொரு களத்து ஒழிய,
|
|
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய,
|
|
மொய் வலி அறுத்த ஞான்றை,
|
|
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே.
|
தோழி தலைமகற்கு வாயில்
மறுத்தது. - பரணர்
|
|
|
செல்லல், மகிழ்ந! நிற் செய் கடன்
உடையென்மன்
|
|
கல்லா யானை கடி புனல் கற்றென,
|
|
மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை,
|
|
ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை,
|
5
|
கலி கொள் சுற்றமொடு கரிகால் காண,
|
|
தண் பதம் கொண்டு, தவிர்ந்த இன் இசை
|
|
ஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள,
|
|
கருங் கச்சு யாத்த காண்பின் அவ் வயிற்று,
|
|
இரும் பொலம் பாண்டில், மணியொடு தெளிர்ப்ப,
|
10
|
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து,
|
|
காவிரி கொண்டு ஒளித்தாங்கும் அன்னோ!
|
|
நும்வயின் புலத்தல் செல்லேம்; எம்வயின்
|
|
பசந்தன்று, காண்டிசின் நுதலே; அசும்பின்
|
|
அம் தூம்பு வள்ளை அழற் கொடி மயக்கி,
|
15
|
வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய,
|
|
துய்த் தலை முடங்கு இறாத் தெறிக்கும்,
பொற்புடைக்
|
|
குரங்குஉளைப் புரவிக் குட்டுவன்
|
|
மரந்தை அன்ன, என் நலம் தந்து சென்மே!
|
காதற்பரத்தை புலந்து
சொல்லியது. - பரணர்
|
|
மேல் |