கழுவுள்
|
|
திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க,
|
|
புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்பப்
|
|
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி,
|
|
எழுது எழில் மழைக் கண் கலுழ, நோய் கூர்ந்து,
|
5
|
ஆதிமந்தியின் அறிவு பிறிதுஆகி,
|
|
பேதுற்றிசினே காதல்அம் தோழி!
|
|
காய்கதிர் திருகலின் கனைந்து கால் கடுகி,
|
|
ஆடுதளிர் இருப்பைக் கூடு குவி வான் பூ,
|
|
கோடு கடை கழங்கின், அறைமிசைத் தாஅம்
|
10
|
காடு இறந்தனரே, காதலர்; அடுபோர்,
|
|
வீயா விழுப் புகழ், விண் தோய் வியன் குடை,
|
|
ஈர் எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த
|
|
கழுவுள் காமூர் போலக்
|
|
கலங்கின்றுமாது, அவர்த் தெளிந்த என்
நெஞ்சே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றது. -
பரணர்
|
|
|
அகல் வாய் வானம் மால் இருள் பரப்ப,
|
|
பகல் ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடு
|
|
சினவல் போகிய புன்கண் மாலை,
|
|
அத்த நடுகல் ஆள் என உதைத்த
|
5
|
கான யானைக் கதுவாய் வள் உகிர்,
|
|
இரும் பனை இதக்கையின், ஒடியும் ஆங்கண்,
|
|
கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை,
|
|
வருநர் இன்மையின் களையுநர்க் காணா
|
|
என்றூழ் வெஞ் சுரம் தந்த நீயே
|
10
|
துயர் செய்து ஆற்றாயாகி, பெயர்பு, ஆங்கு
|
|
உள்ளினை வாழிய, நெஞ்சே! வென் வேல்
|
|
மா வண் கழுவுள் காமூர் ஆங்கண்,
|
|
பூதம் தந்த பொரி அரை வேங்கைத்
|
|
தண் கமழ் புது மலர் நாறும்
|
15
|
அம் சில் ஓதி ஆய் மடத் தகையே.
|
தலைமகன் இடைச் சுரத்து நின்று
சொல்லியது.-மதுரை மருதன் இளநாகனார்
|
|
மேல் |