காரி
|
|
ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள்,
|
|
வான் தோய் இஞ்சி நல் நகர் புலம்ப
|
|
தனி மணி இரட்டும் தாளுடைக் கடிகை,
|
|
நுழை நுதி நெடு வேல், குறும் படை, மழவர்
|
5
|
முனை ஆத் தந்து, முரம்பின் வீழ்த்த
|
|
வில் ஏர் வாழ்க்கை விழுத் தொடை மறவர்
|
|
வல் ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார்,
|
|
நடுகல் பீலி சூட்டி, துடிப்படுத்து,
|
|
தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும்
|
10
|
போக்கு அருங் கவலைய புலவு நாறு அருஞ் சுரம்
|
|
துணிந்து, பிறள் ஆயினள்ஆயினும், அணிந்து
அணிந்து,
|
|
ஆர்வ நெஞ்சமொடு ஆய் நலன் அளைஇ, தன்
|
|
மார்பு துணையாகத் துயிற்றுகதில்ல
|
|
துஞ்சா முழவின் கோவற் கோமான்
|
15
|
நெடுந் தேர்க் காரி கொடுங்கால் முன்துறை,
|
|
பெண்ணை அம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும்
|
|
நெறி இருங் கதுப்பின் என் பேதைக்கு,
|
|
அறியாத் தேஎத்து ஆற்றிய துணையே!
|
மகட்போக்கிய நற்றாய்
தெய்வத்திற்குப் பராஅயது.-குடவாயிற்
கீரத்தனார்
|
|
|
'தோளும் தொல் கவின் தொலைந்தன; நாளும்
|
|
அன்னையும் அருந் துயர் உற்றனள்; அலரே,
|
|
பொன் அணி நெடுந் தேர்த் தென்னர் கோமான்,
|
|
எழு உறழ் திணி தோள் இயல் தேர்ச் செழியன்,
|
5
|
நேரா எழுவர் அடிப்படக் கடந்த
|
|
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது' என,
|
|
ஆழல் வாழி, தோழி! அவரே,
|
|
மாஅல் யானை மறப் போர்ப் புல்லி
|
|
காம்புடை நெடு வரை வேங்கடத்து உம்பர்
|
10
|
அறை இறந்து அகன்றனர் ஆயினும், நிறை இறந்து
|
|
உள்ளார்ஆதலோ அரிதே செவ் வேல்
|
|
முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
|
|
செல்லா நல் இசை நிறுத்த வல் வில்
|
|
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த
|
15
|
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லி,
|
|
நிலை பெறு கடவுள் ஆக்கிய,
|
|
பலர் புகழ் பாவை அன்ன நின் நலனே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகளைத் தோழி வற்புறீஇயது. - கல்லாடனார்
|
|
மேல் |