கான் அமர் செல்வி
|
|
'விசும்பு தளி பொழிந்து, வெம்மை நீங்கி,
|
|
தண் பதம் படுதல் செல்க!' எனப் பல் மாண்
|
|
நாம் செல விழைந்தனமாக, 'ஓங்கு புகழ்க்
|
|
கான் அமர் செல்வி அருளலின், வெண் கால்,
|
5
|
பல் படைப் புரவி எய்திய தொல் இசை
|
|
நுணங்கு நுண் பனுவற் புலவன் பாடிய
|
|
இன மழை தவழும் ஏழிற் குன்றத்து,
|
|
கருங் கால் வேங்கைச் செம் பூம் பிணையல்
|
|
ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும்
|
10
|
சில் நாள் கழிக!' என்று முன் நாள்
|
|
நம்மொடு பொய்த்தனர்ஆயினும், தம்மொடு
|
|
திருந்து வேல் இளையர் சுரும்பு உண மலைமார்,
|
|
மா முறி ஈன்று மரக் கொம்பு அகைப்ப,
|
|
உறை கழிந்து உலந்த பின்றை, பொறைய
|
15
|
சிறு வெள் அருவித் துவலையின் மலர்ந்த
|
|
கருங் கால் நுணவின் பெருஞ் சினை வான் பூச்
|
|
செம் மணற் சிறு நெறி கம்மென வரிப்ப,
|
|
காடு கவின் பெறுக தோழி! ஆடு வளிக்கு
|
|
ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ்
|
20
|
கல் கண் சீக்கும் அத்தம்,
|
|
அல்கு வெயில் நீழல் அசைந்தனர் செலவே!
|
தோழிக்குத் தலைமகள்
சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார்
|
|
மேல் |