கிள்ளி வளவன்
|
|
நகை நன்று அம்ம தானே இறை மிசை
|
|
மாரிச் சுதையின் ஈர்ம் புறத்து அன்ன
|
|
கூரல் கொக்கின் குறும் பறைச் சேவல்,
|
|
வெள்ளி வெண் தோடு அன்ன, கயல் குறித்து,
|
5
|
கள் ஆர் உவகைக் கலி மகிழ் உழவர்
|
|
காஞ்சி அம் குறுந் தறி குத்தி, தீம் சுவை
|
|
மென் கழைக் கரும்பின் நன் பல மிடைந்து,
|
|
பெருஞ் செய் நெல்லின் பாசு அவல் பொத்தி,
|
|
வருத்திக் கொண்ட வல் வாய்க் கொடுஞ் சிறை
|
10
|
மீது அழி கடு நீர் நோக்கி, பைப்பயப்
|
|
பார்வல் இருக்கும் பயம் கேழ் ஊர!
|
|
யாம் அது பேணின்றோ இலமே நீ நின்
|
|
பண் அமை நல் யாழ்ப் பாணனொடு, விசி பிணி,
|
|
மண் ஆர், முழவின் கண் அதிர்ந்து இயம்ப,
|
15
|
மகிழ் துணைச் சுற்றமொடு மட்டு மாந்தி,
|
|
எம் மனை வாராயாகி, முன் நாள்,
|
|
நும் மனைச் சேர்ந்த ஞான்றை, அம் மனைக்
|
|
குறுந் தொடி மடந்தை உவந்தனள் நெடுந் தேர்,
|
|
இழை அணி யானைப் பழையன் மாறன்,
|
20
|
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண்,
|
|
வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த
|
|
கிள்ளி வளவன் நல் அமர் சாஅய்,
|
|
கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி,
|
|
ஏதில் மன்னர் ஊர் கொள,
|
25
|
கோதை மார்பன் உவகையின் பெரிதே.
|
தோழி தலைமகற்கு வாயில்
மறுத்தது. - நக்கீரர்
|
|
மேல் |