குட்டுவன்
|
|
விளங்குபகல் உதவிய பல் கதிர் ஞாயிறு
|
|
வளம் கெழு மா மலை பயம் கெடத் தெறுதலின்,
|
|
அருவி ஆன்ற பெரு வரை மருங்கில்
|
|
சூர்ச் சுனை துழைஇ நீர்ப்பயம் காணாது,
|
5
|
பாசி தின்ற பைங் கண் யானை
|
|
ஓய் பசிப் பிடியொடு ஒருதிறன் ஒடுங்க,
|
|
வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனந்தலை
|
|
அரும் பொருள் வேட்கையின் அகன்றனர்
ஆயினும்,
|
|
பெரும் பேர் அன்பினர் தோழி!-இருங் கேழ்
|
10
|
இரலை சேக்கும், பரல் உயர் பதுக்கைக்
|
|
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த
|
|
நெடுங் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்,
|
|
விசிபிணி முழவின் குட்டுவன் காப்ப,
|
|
பசி என அறியாப் பணை பயில் இருக்கை,
|
15
|
தட மருப்பு எருமை தாமரை முனையின்,
|
|
முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும்,
|
|
குடநாடு பெறினும் தவிரலர்
|
|
மடமான் நோக்கி! நின் மாண் நலம் மறந்தே.
|
பிரிவிடை மெலிந்த
தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார்
|
|
|
தா இல் நல் பொன் தைஇய பாவை
|
|
விண் தவழ் இள வெயிற் கொண்டு நின்றன்ன,
|
|
மிகு கவின் எய்திய, தொகுகுரல் ஐம்பால்,
|
|
கிளைஅரில் நாணற் கிழங்கு மணற்கு ஈன்ற
|
5
|
முளை ஓரன்ன முள் எயிற்றுத் துவர் வாய்,
|
|
நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ்
|
|
இசை ஓர்த்தன்ன இன் தீம் கிளவி,
|
|
அணங்கு சால் அரிவையை நசைஇ, பெருங் களிற்று
|
|
இனம் படி நீரின் கலங்கிய பொழுதில்,
|
10
|
பெறல் அருங் குரையள் என்னாய், வைகலும்,
|
|
இன்னா அருஞ் சுரம் நீந்தி, நீயே
|
|
என்னை இன்னற் படுத்தனை; மின்னு வசிபு
|
|
உரவுக் கார் கடுப்ப மறலி மைந்துற்று,
|
|
விரவு மொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇ,
|
15
|
படை நிலா இலங்கும் கடல் மருள் தானை
|
|
மட்டு அவிழ் தெரியல் மறப் போர்க்
குட்டுவன்
|
|
பொரு முரண் பெறாஅது விலங்கு சினம் சிறந்து,
|
|
செருச் செய் முன்பொடு முந்நீர் முற்றி,
|
|
ஓங்குதிரைப் பௌவம் நீங்க ஓட்டிய
|
20
|
நீர் மாண் எஃகம் நிறத்துச் சென்று அழுந்தக்
|
|
கூர் மதன் அழியரோ நெஞ்சே! ஆனாது
|
|
எளியள் அல்லோட் கருதி,
|
|
விளியா எவ்வம் தலைத் தந்தோயே.
|
அல்லகுறிப்பட்டு நீங்கும்
தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கிச்
சொல்லியது. -பரணர்
|
|
|
இருங் கழி மலர்ந்த வள் இதழ் நீலம்,
|
|
புலாஅல் மறுகின் சிறுகுடிப் பாக்கத்து
|
|
இன மீன் வேட்டுவர், ஞாழலொடு மிலையும்
|
|
மெல் அம் புலம்ப! நெகிழ்ந்தன, தோளே;
|
5
|
சேயிறாத் துழந்த நுரை பிதிர்ப் படு திரை
|
|
பராஅரைப் புன்னை வாங்கு சினைத் தோயும்
|
|
கானல்அம் பெருந் துறை நோக்கி, இவளே,
|
|
கொய் சுவற் புரவிக் கை வண் கோமான்
|
|
நல் தேர்க் குட்டுவன் கழுமலத்து அன்ன,
|
10
|
அம் மா மேனி தொல் நலம் தொலைய,
|
|
துஞ்சாக் கண்ணள் அலமரும்; நீயே,
|
|
கடவுள் மரத்த முள் மிடை குடம்பைச்
|
|
சேவலொடு புணராச் சிறு கரும் பேடை
|
|
இன்னாது உயங்கும் கங்குலும்,
|
15
|
நும் ஊர் உள்ளுவை; நோகோ, யானே.
|
பகற்குறிக்கண் வந்து
நீங்கும் தலைமகனைத் தோழி வரைவு கடாயது.
-சாகலாசனார்
|
|
|
குடுமிக் கொக்கின் பைங் காற் பேடை,
|
|
இருஞ் சேற்று அள்ளல் நாட் புலம் போகிய
|
|
கொழு மீன் வல்சிப் புன் தலைச் சிறாஅர்,
|
|
நுண் ஞாண் அவ் வலைச் சேவல் பட்டென,
|
5
|
அல்குறு பொழுதின் மெல்கு இரை மிசையாது,
|
|
பைதல் பிள்ளை தழீஇ, ஒய்யென,
|
|
அம் கண் பெண்ணை அன்புற நரலும்
|
|
சிறு பல் தொல் குடிப் பெரு நீர்ச்
சேர்ப்பன்,
|
|
கழி சேர் புன்னை அழி பூங் கானல்,
|
10
|
தணவா நெஞ்சமொடு தமியன் வந்து, நம்
|
|
மணவா முன்னும் எவனோ தோழி!
|
|
வெண் கோட்டு யானை விறற் போர்க் குட்டுவன்
|
|
தெண் திரைப் பரப்பின் தொண்டி முன்துறை,
|
|
சுரும்பு உண மலர்ந்த பெருந் தண் நெய்தல்
|
15
|
மணி ஏர் மாண் நலம் ஒரீஇ,
|
|
பொன் நேர் வண்ணம் கொண்ட என் கண்ணே?
|
இரவுக்குறிக்கண் தலைமகன்
சிறைப்புறத்தானாக, தோழிக்குச்
சொல்லுவாளாய்,தலைமகள் சொல்லியது. -
நக்கீரர்
|
|
|
செல்லல், மகிழ்ந! நிற் செய் கடன்
உடையென்மன்
|
|
கல்லா யானை கடி புனல் கற்றென,
|
|
மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை,
|
|
ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை,
|
5
|
கலி கொள் சுற்றமொடு கரிகால் காண,
|
|
தண் பதம் கொண்டு, தவிர்ந்த இன் இசை
|
|
ஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள,
|
|
கருங் கச்சு யாத்த காண்பின் அவ் வயிற்று,
|
|
இரும் பொலம் பாண்டில், மணியொடு தெளிர்ப்ப,
|
10
|
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து,
|
|
காவிரி கொண்டு ஒளித்தாங்கும் அன்னோ!
|
|
நும்வயின் புலத்தல் செல்லேம்; எம்வயின்
|
|
பசந்தன்று, காண்டிசின் நுதலே; அசும்பின்
|
|
அம் தூம்பு வள்ளை அழற் கொடி மயக்கி,
|
15
|
வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய,
|
|
துய்த் தலை முடங்கு இறாத் தெறிக்கும்,
பொற்புடைக்
|
|
குரங்குஉளைப் புரவிக் குட்டுவன்
|
|
மரந்தை அன்ன, என் நலம் தந்து சென்மே!
|
காதற்பரத்தை புலந்து
சொல்லியது. - பரணர்
|
|
மேல் |