குறும்பியன்
|
|
முதை படு பசுங் காட்டு அரில் பவர் மயக்கி,
|
|
பகடு பல பூண்ட உழவுறு செஞ் செய்,
|
|
இடு முறை நிரம்பி, ஆகு வினைக் கலித்து,
|
|
பாசிலை அமன்ற பயறு ஆ புக்கென,
|
5
|
வாய் மொழித் தந்தையைக் கண் களைந்து,
அருளாது,
|
|
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின்,
|
|
கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள்,
|
|
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்,
|
|
மறம் கெழு தானைக் கொற்றக் குறும்பியன்,
|
10
|
செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து, அவர்
|
|
இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய
|
|
அன்னிமிஞிலி போல, மெய்ம் மலிந்து,
|
|
ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து
|
|
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
|
15
|
நுண் பல துவலை புதல்மிசை நனைக்கும்
|
|
வண்டு படு நறவின் வண் மகிழ்ப் பேகன்
|
|
கொண்டல் மா மலை நாறி,
|
|
அம் தீம் கிளவி வந்தமாறே.
|
இரவுக்குறிக்கண் தலைமகளைப்
புணர்ந்து நீங்கும் தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
|
|
மேல் |