கொங்கர்
|
|
தோட் பதன் அமைத்த கருங் கை ஆடவர்
|
|
கனை பொறி பிறப்ப நூறி, வினைப் படர்ந்து,
|
|
கல்லுறுத்து இயற்றிய வல் உவர்ப் படுவில்,
|
|
பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய
|
5
|
வன் புலம் துமியப் போகி, கொங்கர்
|
|
படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும்
|
|
சேதா எடுத்த செந் நிலக் குரூஉத் துகள்
|
|
அகல் இரு விசும்பின் ஊன்றித் தோன்றும்
|
|
நனந்தலை அழுவம், நம்மொடு துணைப்ப,
|
10
|
'வல்லாங்கு வருதும்' என்னாது, அல்குவர
|
|
வருந்தினை வாழி, என் நெஞ்சே! இருஞ் சிறை
|
|
வளை வாய்ப் பருந்தின் வான் கட் பேடை,
|
|
ஆடுதொறு கனையும் அவ் வாய்க் கடுந் துடிக்
|
|
கொடு வில் எயினர் கோட் சுரம் படர,
|
15
|
நெடு விளி பயிற்றும் நிரம்பா நீள் இடை,
|
|
கல் பிறங்கு அத்தம் போகி,
|
|
நில்லாப் பொருட் பிணிப் பிரிந்த நீயே.
|
பொருள்வயிற் பிரிந்த
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார்
|
|
|
'வைகல்தோறும் பசலை பாய, என்
|
|
மெய்யும் பெரும்பிறிது ஆகின்று, ஒய்யென;
|
|
அன்னையும் அமரா முகத்தினள்; அலரே,
|
|
வாடாப் பூவின் கொங்கர் ஓட்டி,
|
5
|
நாடு பல தந்த பசும் பூட் பாண்டியன்
|
|
பொன் மலி நெடு நகர்க் கூடல் ஆடிய
|
|
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே; ஈங்கு யான்
|
|
சில நாள் உய்யலென் போன்ம்' எனப் பல
நினைந்து,
|
|
ஆழல் வாழி, தோழி! வடாஅது,
|
10
|
ஆர் இருள் நடு நாள் ஏர் ஆ உய்ய,
|
|
பகை முனை அறுத்துப் பல் இனம் சாஅய்,
|
|
கணம்சால் கோவலர் நெடு விளிப் பயிர்
அறிந்து,
|
|
இனம் தலைத் தரூஉம் துளங்கு இமில் நல் ஏற்றுத்
|
|
தழூஉப் பிணர் எருத்தம் தாழப் பூட்டிய
|
15
|
அம் தூம்பு அகல் அமைக் கமஞ்செலப் பெய்த
|
|
துறு காழ் வல்சியர் தொழு அறை வௌவி,
|
|
கன்றுடைப் பெரு நிரை மன்று நிறை தரூஉம்
|
|
நேரா வன் தோள் வடுகர் பெரு மகன்,
|
|
பேர் இசை எருமை நல் நாட்டு உள்ளதை
|
20
|
அயிரி யாறு இறந்தனர்ஆயினும், மயர் இறந்து
|
|
உள்ளுபதில்ல தாமே பணைத் தோள்,
|
|
குரும்பை மென் முலை, அரும்பிய சுணங்கின்,
|
|
நுசுப்பு அழித்து ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்,
|
|
மாக விசும்பின் திலகமொடு பதித்த
|
25
|
திங்கள் அன்ன நின் திரு முகத்து,
|
|
ஒண் சூட்டு அவிர் குழை மலைந்த நோக்கே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. -
நக்கீரர்
|
|
|
தொடுதோற் கானவன் சூடுறு வியன் புனம்,
|
|
கரி புறம் கழீஇய பெரும் பாட்டு ஈரத்து,
|
|
தோடு வளர் பைந் தினை நீடு குரல் காக்கும்
|
|
ஒண் தொடி மகளிர்க்கு ஊசலாக
|
5
|
ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய
|
|
குறும்பொறை அயலது நெடுந் தாள் வேங்கை,
|
|
மட மயிற் குடுமியின், தோன்றும் நாடன்
|
|
உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலைக்
|
|
குரங்கு அறிவாரா மரம் பயில் இறும்பில்,
|
10
|
கடி சுனைத் தெளிந்த மணி மருள் தீம் நீர்
|
|
பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடி,
|
|
பல் நாள் உம்பர்ப் பெயர்ந்து, சில் நாள்
|
|
கழியாமையே வழிவழிப் பெருகி,
|
|
அம் பணை விளைந்த தேக் கட் தேறல்
|
15
|
வண்டு படு கண்ணியர் மகிழும் சீறூர்,
|
|
எவன்கொல் வாழி, தோழி! கொங்கர்
|
|
மணி அரை யாத்து மறுகின் ஆடும்
|
|
உள்ளி விழவின் அன்ன,
|
|
அலர் ஆகின்று, அது பலர் வாய்ப் பட்டே?
|
பகலே சிறைப்புறமாகத்
தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி
சொல்லியது. -மதுரை மருதன் இளநாகனார்
|
|
மேல் |