கொடுமுடி
|
|
தெண் கழி விளைந்த வெண் கல் உப்பின்
|
|
கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை
|
|
உரனுடைச் சுவல பகடு பல பரப்பி
|
|
உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின்,
|
5
|
வடி உறு பகழிக் கொடு வில் ஆடவர்
|
|
அணங்குடை நோன் சிலை வணங்க வாங்கி,
|
|
பல் ஆன் நெடு நிரை தழீஇ, கல்லென
|
|
அரு முனை அலைத்த பெரும் புகல் வலத்தர்,
|
|
கனை குரற் கடுந் துடிப் பாணி தூங்கி,
|
10
|
உவலைக் கண்ணியர், ஊன் புழுக்கு அயரும்
|
|
கவலை, 'காதலர் இறந்தனர்' என, நனி
|
|
அவலம் கொள்ளல்மா, காதல் அம் தோழி!
|
|
விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேண் சிமை
|
|
நறும் பூஞ் சாரற் குறும் பொறைக் குணாஅது
|
15
|
வில் கெழு தடக் கை வெல் போர் வானவன்
|
|
மிஞிறு மூசு கவுள சிறு கண் யானைத்
|
|
தொடியுடைத் தட மருப்பு ஒடிய நூறி,
|
|
கொடுமுடி காக்கும் குரூஉகண் நெடு மதில்
|
|
சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும்,
|
20
|
ஆண்டு அமைந்து உறையுநர்அல்லர், நின்
|
|
பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்தே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - ஆமூர்க்
கவுதமன் சாதேவனார்
|
|
மேல் |