கோசர்
|
|
எம் வெங் காமம் இயைவது ஆயின்,
|
|
மெய்ம் மலி பெரும் பூண், செம்மற் கோசர்
|
|
கொம்மைஅம் பசுங் காய்க் குடுமி விளைந்த
|
|
பாகல் ஆர்கைப் பறைக் கட் பீலித்
|
5
|
தோகைக் காவின் துளுநாட்டு அன்ன,
|
|
வறுங் கை வம்பலர்த் தாங்கும் பண்பின்
|
|
செறிந்த சேரிச் செம்மல் மூதூர்,
|
|
அறிந்த மாக்கட்டு ஆகுகதில்ல
|
|
தோழிமாரும் யானும் புலம்ப,
|
10
|
சூழி யானைச் சுடர்ப் பூண் நன்னன்
|
|
பாழி அன்ன கடியுடை வியல் நகர்ச்
|
|
செறிந்த காப்பு இகந்து, அவனொடு போகி,
|
|
அத்த இருப்பை ஆர் கழல் புதுப் பூத்
|
|
துய்த்த வாய, துகள் நிலம் பரக்க,
|
15
|
கொன்றை அம் சினைக் குழற்பழம் கொழுதி,
|
|
வன் கை எண்கின் வய நிரை பரக்கும்
|
|
இன் துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்கு
|
|
குன்ற வேயின் திரண்ட என்
|
|
மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே!
|
மகட்போக்கிய
தாய்சொல்லியது. - மாமூலனார்
|
|
|
மூத்தோர் அன்ன வெண் தலைப் புணரி
|
|
இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும்
|
|
தளை அவிழ் தாழைக் கானல் அம் பெருந் துறை,
|
|
சில் செவித்து ஆகிய புணர்ச்சி அலர் எழ,
|
5
|
இல்வயிற் செறித்தமை அறியாய்; பல் நாள்
|
|
வரு முலை வருத்தா, அம் பகட்டு மார்பின்,
|
|
தெருமரல் உள்ளமொடு வருந்தும், நின்வயின்,
|
|
'நீங்குக' என்று, யான் யாங்ஙனம் மொழிகோ?
|
|
அருந் திறற் கடவுட் செல்லூர்க் குணாஅது
|
10
|
பெருங் கடல் முழக்கிற்று ஆகி, யாணர்,
|
|
இரும்பு இடம் படுத்த வடுவுடை முகத்தர்,
|
|
கருங் கட் கோசர் நியமம் ஆயினும்,
|
|
'உறும்' எனக் கொள்குநர்அல்லர்
|
|
நறு நுதல் அரிவை பாசிழை விலையே.
|
பகற்குறி வந்து கண்ணுற்று
நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு
நின்று, இற்செறிப்பு அறிவுறீஇயது. - மதுரை
மருதன் இளநாகனார்
|
|
|
நன்று அல் காலையும் நட்பின் கோடார்,
|
|
சென்று வழிப்படூஉம் திரிபு இல்
சூழ்ச்சியின்,
|
|
புன் தலை மடப் பிடி அகவுநர் பெருமகன்
|
|
மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி,
|
5
|
காப்புக் கைந்நிறுத்த பல் வேல் கோசர்
|
|
இளங் கள் கமழும் நெய்தல்அம் செறுவின்
|
|
வளம் கெழு நல் நாடு அன்ன என் தோள் மணந்து,
|
|
அழுங்கல் மூதூர் அலர் எடுத்து அரற்ற,
|
|
நல்காது துறந்த காதலர், 'என்றும்
|
10
|
கல் பொரூஉ மெலியாப் பரட்டின் நோன் அடி
|
|
அகல்சூல் அம் சுரைப் பெய்த வல்சியர்
|
|
இகந்தனர்ஆயினும், இடம் பார்த்துப் பகைவர்
|
|
ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில்
|
|
குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும்
|
15
|
கனை இருஞ் சுருணைக் கனி காழ் நெடு வேல்
|
|
விழவு அயர்ந்தன்ன கொழும் பல் திற்றி
|
|
எழாஅப் பாணன் நல் நாட்டு உம்பர்,
|
|
நெறி செல் வம்பலர்க் கொன்ற தெவ்வர்
|
|
எறிபடை கழீஇய சேயரிச் சில் நீர்
|
20
|
அறுதுறை அயிர் மணற் படுகரைப் போகி,
|
|
சேயர்' என்றலின், சிறுமை உற்ற என்
|
|
கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க,
|
|
அழாஅம் உறைதலும் உரியம் பராரை
|
|
அலங்கல் அம் சினைக் குடம்பை புல்லெனப்
|
25
|
புலம் பெயர் மருங்கில் புள் எழுந்தாங்கு,
|
|
மெய் இவண் ஒழியப் போகி, அவர்
|
|
செய்வினை மருங்கில் செலீஇயர், என் உயிரே!
|
தலைமகன் பிரிவின்கண்
தலைமகள் தோழிக்குச் சொல்லியது. -
கல்லாடனார்
|
|
|
நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி பாக்கத்து,
|
|
நாள் துறைப்பட்ட மோட்டு இரு வராஅல்
|
|
துடிக்கண் கொழுங் குறை நொடுத்து, உண்டு ஆடி,
|
|
வேட்டம் மறந்து, துஞ்சும் கொழுநர்க்குப்
பாட்டி
|
5
|
ஆம்பல் அகல் இலை, அமலை வெஞ் சோறு
|
|
தீம் புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து,
|
|
விடியல் வைகறை இடூஉம் ஊர!
|
|
தொடுகலம்; குறுக வாரல் தந்தை
|
|
கண் கவின் அழித்ததன் தப்பல், தெறுவர,
|
10
|
ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று, முரண்
போகிய,
|
|
கடுந் தேர்த் திதியன் அழுந்தை, கொடுங் குழை
|
|
அன்னிமிஞிலியின் இயலும்
|
|
நின் நலத் தகுவியை முயங்கிய மார்பே.
|
பரத்தையிற் பிரிந்து வந்த
தலைமகற்குச் கிழத்தி சொல்லியது. - பரணர்
|
|
|
என் எனப்படும்கொல் தோழி! நல் மகிழ்ப்
|
|
பேடிப் பெண் கொண்டு ஆடுகை கடுப்ப,
|
|
நகுவரப் பணைத்த திரி மருப்பு எருமை
|
|
மயிர்க் கவின் கொண்ட மாத் தோல் இரும்
புறம்,
|
5
|
சிறு தொழில் மகாஅர் ஏறி, சேணோர்க்குத்
|
|
துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன்,
|
|
மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன
|
|
அம் மா மேனி, ஆய்இழை, மகளிர்
|
|
ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்து
|
10
|
ஆராக் காதலொடு தார் இடை குழைய,
|
|
முழவு முகம் புலரா விழவுடை வியல் நகர்,
|
|
வதுவை மேவலன் ஆகலின், அது புலந்து,
|
|
அடுபோர் வேளிர் வீரை முன்துறை,
|
|
நெடு வெள் உப்பின் நிரம்பாக் குப்பை,
|
15
|
பெரு பெயற்கு உருகியாஅங்கு,
|
|
திருந்துஇழை நெகிழ்ந்தன, தட மென் தோளே?
|
வாயில் வேண்டிச் சென்ற
விறலிக்குத் தலைமகள் வாயில் மறுத்தது. -
மதுரை மருதன் இளநாகனார்
|
|
|
'நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்
மகள்
|
|
தான் புனல் அடைகரைப் படுத்த வராஅல்,
|
|
நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு,
|
|
வஞ்சி விறகின் சுட்டு, வாய் உறுக்கும்
|
5
|
தண் துறை ஊரன் பெண்டிர் எம்மைப்
|
|
பெட்டாங்கு மொழிப' என்ப; அவ் அலர்ப்
|
|
பட்டனம்ஆயின், இனி எவன் ஆகியர்;
|
|
கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும்,
|
|
கழனி உழவர் குற்ற குவளையும்,
|
10
|
கடி மிளைப் புறவின் பூத்த முல்லையொடு,
|
|
பல் இளங் கோசர் கண்ணி அயரும்,
|
|
மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான்
|
|
எறிவிடத்து உலையாச் செறி சுரை வெள் வேல்
|
|
ஆதன் எழினி அரு நிறத்து அழுத்திய
|
15
|
பெருங் களிற்று எவ்வம் போல,
|
|
வருந்துபமாது, அவர் சேரி யாம் செலினே.
|
தலைமகட்குப் பாங்காயினார்
கேட்பத், தனக்குப் பாங்காயினார்க்குப்
பரத்தை சொல்லியது. - ஐயூர் முடவனார்
|
|
|
தூதும் சென்றன; தோளும் செற்றும்;
|
|
ஓதி ஒண் நுதல் பசலையும் மாயும்;
|
|
வீங்கு இழை நெகிழச் சாஅய், செல்லலொடு
|
|
நாம் படர் கூரும் அருந் துயர் கேட்பின்,
|
5
|
நந்தன் வெறுக்கை எய்தினும், மற்று அவண்
|
|
தங்கலர் வாழி, தோழி! வெல் கொடித்
|
|
துனை கால் அன்ன புனை தேர்க் கோசர்
|
|
தொல் மூதாலத்து அரும் பணைப் பொதியில்,
|
|
இன் இசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க,
|
10
|
தெம் முனை சிதைத்த ஞான்றை, மோகூர்
|
|
பணியாமையின், பகை தலைவந்த
|
|
மா கெழு தானை வம்ப மோரியர்
|
|
புனை தேர் நேமி உருளிய குறைத்த
|
|
இலங்கு வெள் அருவிய அறை வாய் உம்பர்,
|
15
|
மாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானை
|
|
வாயுள் தப்பிய, அருங் கேழ், வயப் புலி
|
|
மா நிலம் நெளியக் குத்தி, புகலொடு
|
|
காப்பு இல வைகும் தேக்கு அமல் சோலை
|
|
நிரம்பா நீள் இடைப் போகி,
|
20
|
அரம் போழ் அவ் வளை நிலை நெகிழ்த்தோரே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு,தோழி
சொல்லியது. - மாமூலனார்
|
|
|
முதை படு பசுங் காட்டு அரில் பவர் மயக்கி,
|
|
பகடு பல பூண்ட உழவுறு செஞ் செய்,
|
|
இடு முறை நிரம்பி, ஆகு வினைக் கலித்து,
|
|
பாசிலை அமன்ற பயறு ஆ புக்கென,
|
5
|
வாய் மொழித் தந்தையைக் கண் களைந்து,
அருளாது,
|
|
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின்,
|
|
கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள்,
|
|
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்,
|
|
மறம் கெழு தானைக் கொற்றக் குறும்பியன்,
|
10
|
செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து, அவர்
|
|
இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய
|
|
அன்னிமிஞிலி போல, மெய்ம் மலிந்து,
|
|
ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து
|
|
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
|
15
|
நுண் பல துவலை புதல்மிசை நனைக்கும்
|
|
வண்டு படு நறவின் வண் மகிழ்ப் பேகன்
|
|
கொண்டல் மா மலை நாறி,
|
|
அம் தீம் கிளவி வந்தமாறே.
|
இரவுக்குறிக்கண் தலைமகளைப்
புணர்ந்து நீங்கும் தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
|
|
மேல் |