செழியன்
|
|
பகுவாய் வராஅற் பல் வரி இரும் போத்துக்
|
|
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி,
|
|
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக்
|
|
கூம்பு விடு பல் மலர் சிதையப் பாய்ந்து,
எழுந்து,
|
5
|
அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி,
|
|
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது,
|
|
கயிறு இடு கதச் சேப் போல, மதம் மிக்கு,
|
|
நாள், கயம் உழக்கும் பூக் கேழ் ஊர!
|
|
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை,
|
10
|
திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில்,
|
|
நறும் பல் கூந்தற் குறுந் தொடி மடந்தையொடு
|
|
வதுவை அயர்ந்தனை என்ப. அலரே,
|
|
கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச்
செழியன்
|
|
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப,
|
15
|
சேரல், செம்பியன், சினம் கெழு திதியன்,
|
|
போர் வல் யானைப் பொலம் பூண் எழினி,
|
|
நார் அரி நறவின் எருமையூரன்,
|
|
தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
|
|
இருங்கோ வேண்மான், இயல் தேர்ப் பொருநன்,
என்று
|
20
|
எழுவர் நல் வலம் அடங்க, ஒரு பகல்
|
|
முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரை செல,
|
|
கொன்று, களம்வேட்ட ஞான்றை,
|
|
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே!
|
தலைமகள் பரத்தையிற்
பிரிந்து வந்த தலைமகனொடு புலந்து
சொல்லியது. - மதுரை நக்கீரர்
|
|
|
சேற்று நிலை முனைஇய செங் கட் காரான்
|
|
ஊர் மடி கங்குலில், நோன் தளை பரிந்து,
|
|
கூர் முள் வேலி கோட்டின் நீக்கி,
|
|
நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய
|
5
|
அம் தூம்பு வள்ளை மயக்கி, தாமரை
|
|
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர!
|
|
யாரையோ? நிற் புலக்கேம். வாருற்று,
|
|
உறை இறந்து, ஒளிரும் தாழ் இருங் கூந்தல்,
|
|
பிறரும், ஒருத்தியை நம் மனைத் தந்து,
|
10
|
வதுவை அயர்ந்தனை என்ப. அஃது யாம்
|
|
கூறேம். வாழியர், எந்தை! செறுநர்
|
|
களிறுடை அருஞ் சமம் ததைய நூறும்
|
|
ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன்
|
|
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என்
|
15
|
ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க;
|
|
சென்றி, பெரும! நிற் தகைக்குநர் யாரோ?
|
வாயில் வேண்டிச் சென்ற
தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.- அள்ளூர்
நன் முல்லையார்
|
|
|
அழிவு இல் உள்ளம் வழிவழிச் சிறப்ப
|
|
வினை இவண் முடித்தனம்ஆயின், வல் விரைந்து
|
|
எழு இனி வாழிய நெஞ்சே! ஒலி தலை
|
|
அலங்கு கழை நரலத் தாக்கி, விலங்கு எழுந்து,
|
5
|
கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி
|
|
விடர் முகை அடுக்கம் பாய்தலின், உடன்
இயைந்து,
|
|
அமைக் கண் விடு நொடி கணக் கலை அகற்றும்
|
|
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி, கைம்மிக்கு,
|
|
அகன் சுடர் கல் சேர்பு மறைய, மனைவயின்
|
10
|
ஒண் தொடி மகளிர் வெண் திரிக் கொளாஅலின்,
|
|
குறு நடைப் புறவின் செங் காற் சேவல்
|
|
நெடு நிலை வியல் நகர் வீழ்துணைப் பயிரும்
|
|
புலம்பொடு வந்த புன்கண் மாலை,
|
|
'யாண்டு உளர்கொல்?' எனக் கலிழ்வோள்
எய்தி,
|
15
|
இழை அணி நெடுந் தேர்க் கை வண் செழியன்
|
|
மழை விளையாடும் வளம் கெழு சிறுமலைச்
|
|
சிலம்பின் கூதளங் கமழும் வெற்பின்
|
|
வேய் புரை பணைத் தோள், பாயும்
|
|
நோய் அசா வீட, முயங்குகம் பலவே.
|
தலைமகன் இடைச் சுரத்து
அழிந்த நெஞ்சிற்குச் சொல்லியது. -
ஆலம்பேரி சாத்தனார்
|
|
|
சிறு பைந் தூவிச் செங் காற் பேடை
|
|
நெடு நீர் வானத்து, வாவுப் பறை நீந்தி,
|
|
வெயில் அவிர் உருப்பொடு வந்து, கனி பெறாஅது,
|
|
பெறு நாள் யாணர் உள்ளி, பையாந்து,
|
5
|
புகல் ஏக்கற்ற புல்லென் உலவைக்
|
|
குறுங் கால் இற்றிப் புன் தலை நெடு வீழ்
|
|
இரும் பிணர்த் துறுகல் தீண்டி, வளி பொர,
|
|
பெருங் கை யானை நிவப்பின் தூங்கும்
|
|
குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை,
|
10
|
யாமே எமியம்ஆக, தாமே
|
|
பசு நிலா விரிந்த பல் கதிர் மதியின்
|
|
பெரு நல் ஆய் கவின் ஒரீஇ, சிறு பீர்
|
|
வீ ஏர் வண்ணம் கொண்டன்றுகொல்லோ
|
|
கொய் சுவற் புரவிக் கொடித் தேர்ச்
செழியன்
|
15
|
முதுநீர் முன்துறை முசிறி முற்றி,
|
|
களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின்
|
|
அரும் புண் உறுநரின் வருந்தினள், பெரிது
அழிந்து,
|
|
பானாட் கங்குலும் பகலும்
|
|
ஆனாது அழுவோள் ஆய் சிறு நுதலே?
|
பொருள்வயிற் பிரிந்த
தலைமகன் கிழத்தியை நினைந்து சொல்லியது.-
நக்கீரர்
|
|
|
எரி அகைந்தன்ன தாமரைப் பழனத்து,
|
|
பொரி அகைந்தன்ன பொங்கு பல் சிறு மீன்,
|
|
வெறி கொள் பாசடை, உணீஇயர், பைப்பயப்
|
|
பறை தபு முது சிரல் அசைபு வந்து இருக்கும்
|
5
|
துறைகேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை
|
|
நம்மொடு புலக்கும் என்ப நாம் அது
|
|
செய்யாம்ஆயினும், உய்யாமையின்,
|
|
செறிதொடி தெளிர்ப்ப வீசி, சிறிது அவண்
|
|
உலமந்து வருகம் சென்மோ தோழி!
|
10
|
ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன்
|
|
வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடுதொறும்
|
|
களிறு பெறு வல்சிப் பாணன் எறியும்
|
|
தண்ணுமைக் கண்ணின் அலைஇயர், தன் வயிறே.
|
தலைமகள் தன்னைப்
புறங்கூறினாளாகக் கேட்ட பரத்தை, அவட்குப்
பாங்காயினார் கேட்ப, சொல்லியது. - ஆலங்குடி
வங்கனார்
|
|
|
எரி அகைந்தன்ன தாமரை இடை இடை
|
|
அரிந்து கால் குவித்த செந் நெல் வினைஞர்
|
|
கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின்,
|
|
ஆய் கரும்பு அடுக்கும் பாய்புனல் ஊர!
|
5
|
பெரிய நாண் இலைமன்ற; 'பொரி எனப்
|
|
புன்கு அவிழ் அகன்துறைப் பொலிய, ஒள் நுதல்,
|
|
நறு மலர்க்காண் வரும் குறும் பல் கூந்தல்,
|
|
மாழை நோக்கின், காழ் இயல் வன முலை,
|
|
எஃகுடை எழில் நலத்து, ஒருத்தியொடு நெருநை
|
10
|
வைகுபுனல் அயர்ந்தனை' என்ப; அதுவே,
|
|
பொய் புறம் பொதிந்து, யாம் கரப்பவும்,
கையிகந்து
|
|
அலர் ஆகின்றால் தானே; மலர்தார்,
|
|
மை அணி யானை, மறப் போர்ச் செழியன்
|
|
பொய்யா விழவின் கூடற் பறந்தலை,
|
15
|
உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர்
|
|
கடல் மருள் பெரும் படை கலங்கத் தாக்கி,
|
|
இரங்குஇசை முரசம் ஒழிய, பரந்து அவர்
|
|
ஓடுபுறம் கண்ட ஞான்றை,
|
|
ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே.
|
தோழி தலைமகனை வாயில்
மறுத்தது. - பரணர்
|
|
|
ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட
|
|
சிறு பல் கேணிப் பிடி அடி நசைஇ,
|
|
களிறு தொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம்
|
|
சென்று சேர்பு ஒல்லார்ஆயினும், நினக்கே
|
5
|
வென்று எறி முரசின் விறற் போர்ச் சோழர்
|
|
இன் கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்,
|
|
வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று
|
|
உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழிற்
|
|
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்,
|
10
|
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்
|
|
தீ இல் அடுப்பின் அரங்கம் போல,
|
|
பெரும் பாழ்கொண்டன்று, நுதலே; தோளும்,
|
|
தோளா முத்தின் தெண் கடற் பொருநன்
|
|
திண் தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன்
|
15
|
நல் எழில் நெடு வேய் புரையும்
|
|
தொல் கவின் தொலைந்தன; நோகோ யானே.
|
|
'தலைமகன் பிரியும்' எனக் கருதி வேறுபட்ட
தலைமகட்குத் தோழி
சொல்லியது.- உறையூர் |
முதுகூத்தனார்
|
|
|
சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த
|
|
நெடுஞ் செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின்,
|
|
புல் அரை இருப்பைத் தொள்ளை வான் பூப்
|
|
பெருங் கை எண்கின் இருங் கிளை கவரும்
|
5
|
அத்த நீள் இடைப் போகி, நன்றும்
|
|
அரிது செய் விழுப் பொருள் எளிதினின்
பெறினும்
|
|
வாரேன் வாழி, என் நெஞ்சே! சேரலர்
|
|
சுள்ளிஅம் பேரியாற்று வெண் நுரை கலங்க,
|
|
யவனர் தந்த வினை மாண் நன் கலம்
|
10
|
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
|
|
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ,
|
|
அருஞ் சமம் கடந்து, படிமம் வவ்விய
|
|
நெடு நல் யானை அடுபோர்ச் செழியன்
|
|
கொடி நுடங்கு மறுகின் கூடற் குடாஅது,
|
15
|
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய,
|
|
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து,
|
|
வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து
|
|
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள்
|
|
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே.
|
தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லிச் செலவு அழுங்கியது.-எருக்காட்டூர்த்
தாயங்கண்ணனார்
|
|
|
வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை
|
|
வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர்
|
|
விடுதொறும் விளிக்கும் வெவ் வாய் வாளி
|
|
ஆறு செல் வம்பலர் உயிர் செலப்
பெயர்ப்பின்,
|
5
|
பாறு கிளை பயிர்ந்து படுமுடை கவரும்
|
|
வெஞ் சுரம் இறந்த காதலர் நெஞ்சு உண
|
|
அரிய வஞ்சினம் சொல்லியும், பல் மாண்
|
|
தெரி வளை முன்கை பற்றியும், 'வினைமுடித்து
|
|
வருதும்' என்றனர் அன்றே தோழி!
|
10
|
கால் இயல் நெடுந் தேர்க் கை வண் செழியன்
|
|
ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த
|
|
வேலினும் பல் ஊழ் மின்னி, முரசு என
|
|
மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி,
|
|
நேர் கதிர் நிரைத்த நேமிஅம் செல்வன்
|
15
|
போர் அடங்கு அகலம் பொருந்திய தார்போல்,
|
|
திருவில் தேஎத்துக் குலைஇ, உரு கெழு
|
|
மண் பயம் பூப்பப் பாஅய்,
|
|
தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே?
|
பிரிவின்கண் வற்புறுக்கும்
தோழிக்குத் தலைமகள் சொல்லியது;
தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்;
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள்
தோழிக்குச் சொற்றதூஉம் ஆம்.- ஆலம்பேரி
சாத்தனார்.
|
|
|
'தோளும் தொல் கவின் தொலைந்தன; நாளும்
|
|
அன்னையும் அருந் துயர் உற்றனள்; அலரே,
|
|
பொன் அணி நெடுந் தேர்த் தென்னர் கோமான்,
|
|
எழு உறழ் திணி தோள் இயல் தேர்ச் செழியன்,
|
5
|
நேரா எழுவர் அடிப்படக் கடந்த
|
|
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது' என,
|
|
ஆழல் வாழி, தோழி! அவரே,
|
|
மாஅல் யானை மறப் போர்ப் புல்லி
|
|
காம்புடை நெடு வரை வேங்கடத்து உம்பர்
|
10
|
அறை இறந்து அகன்றனர் ஆயினும், நிறை இறந்து
|
|
உள்ளார்ஆதலோ அரிதே செவ் வேல்
|
|
முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
|
|
செல்லா நல் இசை நிறுத்த வல் வில்
|
|
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த
|
15
|
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லி,
|
|
நிலை பெறு கடவுள் ஆக்கிய,
|
|
பலர் புகழ் பாவை அன்ன நின் நலனே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகளைத் தோழி வற்புறீஇயது. - கல்லாடனார்
|
|
|
கோதை இணர, குறுங் கால், காஞ்சிப்
|
|
போது அவிழ் நறுந் தாது அணிந்த கூந்தல்,
|
|
அரி மதர் மழைக் கண், மாஅயோளொடு
|
|
நெருநையும் கமழ் பொழில் துஞ்சி, இன்றும்
|
5
|
பெரு நீர் வையை அவளொடு ஆடி,
|
|
புலரா மார்பினை வந்து நின்று, எம்வயின்
|
|
கரத்தல் கூடுமோ மற்றே? பரப்பில்
|
|
பல் மீன் கொள்பவர் முகந்த இப்பி
|
|
நார் அரி நறவின் மகிழ் நொடைக் கூட்டும்
|
10
|
பேர் இசைக் கொற்கைப் பொருநன், வென் வேல்
|
|
கடும் பகட்டு யானை நெடுந் தேர் செழியன்,
|
|
மலை புரை நெடு நகர்க் கூடல் நீடிய
|
|
மலிதரு கம்பலை போல,
|
|
அலர் ஆகின்று, அது பலர் வாய்ப் பட்டே.
|
வாயில் வேண்டிச் சென்ற
தலைமகற்கு வாயில் மறுக்கும் தோழி
சொல்லியது. -மதுரைப் பேராலவாயார்
|
|
|
இருள் படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்
|
|
அருள் நன்கு உடையர்ஆயினும் ஈதல்
|
|
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாதுஆகுதல்
|
|
யானும் அறிவென்மன்னே; யானை தன்
|
5
|
கொல் மருப்பு ஒடியக் குத்தி, சினம் சிறந்து,
|
|
இன்னா வேனில் இன் துணை ஆர,
|
|
முளி சினை மராஅத்துப் பொளி பிளந்து ஊட்ட,
|
|
புலம்பு வீற்றிருந்த நிலம் பகு வெஞ் சுரம்
|
|
அரிய அல்லமன், நமக்கே விரி தார்
|
10
|
ஆடு கொள் முரசின் அடு போர்ச் செழியன்
|
|
மாட மூதூர் மதிற்புறம் தழீஇ,
|
|
நீடு வெயில் உழந்த குறியிறைக் கணைக் கால்,
|
|
தொடை அமை பன் மலர்த் தோடு பொதிந்து
யாத்த
|
|
குடை ஓரன்ன கோள் அமை எருத்தின்
|
15
|
பாளை பற்று அழிந்து ஒழிய, புறம் சேர்பு,
|
|
வாள் வடித்தன்ன வயிறுடைப் பொதிய,
|
|
நாள் உறத் தோன்றிய நயவரு வனப்பின்,
|
|
ஆரத்து அன்ன அணி கிளர் புதுப் பூ
|
|
வார் உறு கவரியின் வண்டு உண விரிய,
|
20
|
முத்தின் அன்ன வெள் வீ தாஅய்,
|
|
அலகின் அன்ன அரி நிறத்து ஆலி
|
|
நகை நனி வளர்க்கும் சிறப்பின், தகை மிகப்
|
|
பூவொடு வளர்ந்த மூவாப் பசுங் காய்
|
|
நீரினும் இனிய ஆகி, கூர் எயிற்று
|
25
|
அமிழ்தம் ஊறும் செவ் வாய்,
|
|
ஒண் தொடி, குறுமகட் கொண்டனம் செலினே!
|
தலைமகன் பொருள்
கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறிச் செலவு
அழுங்கியது. - மதுரைத் தத்தங் கண்ணனார்
|
|
மேல் |