சேரல்
|
|
பகுவாய் வராஅற் பல் வரி இரும் போத்துக்
|
|
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி,
|
|
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக்
|
|
கூம்பு விடு பல் மலர் சிதையப் பாய்ந்து,
எழுந்து,
|
5
|
அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி,
|
|
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது,
|
|
கயிறு இடு கதச் சேப் போல, மதம் மிக்கு,
|
|
நாள், கயம் உழக்கும் பூக் கேழ் ஊர!
|
|
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை,
|
10
|
திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில்,
|
|
நறும் பல் கூந்தற் குறுந் தொடி மடந்தையொடு
|
|
வதுவை அயர்ந்தனை என்ப. அலரே,
|
|
கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச்
செழியன்
|
|
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப,
|
15
|
சேரல், செம்பியன், சினம் கெழு திதியன்,
|
|
போர் வல் யானைப் பொலம் பூண் எழினி,
|
|
நார் அரி நறவின் எருமையூரன்,
|
|
தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
|
|
இருங்கோ வேண்மான், இயல் தேர்ப் பொருநன்,
என்று
|
20
|
எழுவர் நல் வலம் அடங்க, ஒரு பகல்
|
|
முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரை செல,
|
|
கொன்று, களம்வேட்ட ஞான்றை,
|
|
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே!
|
தலைமகள் பரத்தையிற்
பிரிந்து வந்த தலைமகனொடு புலந்து
சொல்லியது. - மதுரை நக்கீரர்
|
|
மேல் |