சேரலாதன்
|
|
காய்ந்து செலற் கனலி கல் பகத் தெறுதலின்,
|
|
ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை,
|
|
உளி முக வெம் பரல் அடி வருத்துறாலின்,
|
|
விளி முறை அறியா வேய் கரி கானம்,
|
5
|
வயக் களிற்று அன்ன காளையொடு என் மகள்
|
|
கழிந்ததற்கு அழிந்தன்றோஇலெனே! ஒழிந்து
யாம்
|
|
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அசைஇ,
|
|
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
|
|
கண்படை பெறேன், கனவ ஒண் படைக்
|
10
|
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
|
|
பொருது புண் நாணிய சேரலாதன்
|
|
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்தென,
|
|
இன்னா இன் உரை கேட்ட சான்றோர்
|
|
அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்,
|
15
|
பெரும்பிறிது ஆகியாங்கு பிரிந்து இவண்
|
|
காதல் வேண்டி, எற் துறந்து
|
|
போதல்செல்லா என் உயிரொடு புலந்தே.
|
புணர்ந்துடன் போன தலைமகட்கு
இரங்கிய தாய் தெருட்டும்
அயலிலாட்டியார்க்கு உரைத்தது. - மாமூலனார்
|
|
|
இலங்கு வளை நெகிழச் சாஅய், அல்கலும்,
|
|
கலங்குஅஞர் உழந்து, நாம் இவண் ஒழிய
|
|
வலம் படு முரசிற் சேரலாதன்
|
|
முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து, இமயத்து
|
5
|
முன்னோர் மருள வணங்குவில் பொறித்து,
|
|
நல் நகர் மரந்தை முற்றத்து ஒன்னார்
|
|
பணி திறை தந்த பாடுசால் நன்கலம்
|
|
பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல்
|
|
ஒன்று வாய் நிறையக் குவைஇ, அன்று அவண்
|
10
|
நிலம் தினத் துறந்த நிதியத்து அன்ன
|
|
ஒரு நாள் ஒரு பகற் பெறினும், வழிநாள்
|
|
தங்கலர் வாழி, தோழி! செங் கோற்
|
|
கருங் கால் மராத்து வாஅல் மெல் இணர்
|
|
சுரிந்து வணர் பித்தை பொலியச் சூடி,
|
15
|
கல்லா மழவர் வில் இடம் தழீஇ,
|
|
வருநர்ப் பார்க்கும் வெருவரு கவலை
|
|
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும்,
|
|
பழி தீர் காதலர் சென்ற நாட்டே.
|
பிரிவிடை ஆற்றாளாகிய
தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார்
|
|
|
தோளும் தொல் கவின் தொலைய, நாளும்
|
|
நலம் கவர் பசலை நல்கின்று நலிய,
|
|
சால் பெருந் தானைச் சேரலாதன்
|
|
மால் கடல் ஓட்டி, கடம்பு அறுத்து, இயற்றிய
|
5
|
பண் அமை முரசின் கண் அதிர்ந்தன்ன,
|
|
கவ்வை தூற்றும் வெவ் வாய்ச் சேரி
|
|
அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழிய,
|
|
சென்றனர்ஆயினும், செய்வினை அவர்க்கே
|
|
வாய்க்கதில் வாழி, தோழி! வாயாது,
|
10
|
மழை கரந்து ஒளித்த கழை திரங்கு அடுக்கத்து,
|
|
ஒண் கேழ் வயப் புலி பாய்ந்தென, குவவு அடி
|
|
வெண் கோட்டு யானை முழக்கு இசை வெரீஇ,
|
|
கன்று ஒழித்து ஓடிய புன் தலை மடப் பிடி
|
|
கை தலை வைத்த மையல் விதுப்பொடு,
|
15
|
கெடு மகப் பெண்டிரின் தேரும்
|
|
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே!
|
தலைமகன் பிரிவின்கண்
தலைமகள் தோழிக்குச் சொல்லியது. -
மாமூலனார்
|
|
மேல் |