சோழர்
|
|
பெருங் கடற் பரப்பில் சேயிறா நடுங்க,
|
|
கொடுந் தொழில் முகந்த செங் கோல் அவ் வலை
|
|
நெடுந் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு,
|
|
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு
|
5
|
அயிலை துழந்த அம் புளிச் சொரிந்து,
|
|
கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்
|
|
திண் தேர்ப் பொறையன் தொண்டி அன்ன எம்
|
|
ஒண் தொடி ஞெமுக்காதீமோ தெய்ய;
|
|
'ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை,
|
10
|
கோதை ஆயமொடு வண்டல் தைஇ,
|
|
ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி' எனக்
|
|
கொன்னும் சிவப்போள் காணின், வென் வேற்
|
|
கொற்றச் சோழர் குடந்தை வைத்த
|
|
நாடு தரு நிதியினும் செறிய
|
15
|
அருங் கடிப் படுக்குவள், அறன் இல் யாயே.
|
தலைமகற்குத் தோழி செறிப்பு
அறிவுறீஇ, வரைவு கடாயது.- குடவாயிற்
கீரத்தனார்
|
|
|
கேள் கேடு ஊன்றவும், கிளைஞர் ஆரவும்,
|
|
கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்,
|
|
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல்
சிறந்து;
|
|
ஆரங் கண்ணி அடுபோர்ச் சோழர்
|
5
|
அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன
|
|
பெறல் அரு நன் கலம் எய்தி, நாடும்
|
|
செயல் அருஞ் செய்வினை முற்றினம் ஆயின்;
|
|
அரண் பல கடந்த, முரண் கொள் தானை,
|
|
வாடா வேம்பின், வழுதி கூடல்
|
10
|
நாள் அங்காடி நாறும் நறு நுதல்
|
|
நீள் இருங் கூந்தல் மாஅயோளொடு,
|
|
வரை குயின்றன்ன வான் தோய் நெடு நகர்,
|
|
நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை
|
|
நிவந்த பள்ளி, நெடுஞ் சுடர் விளக்கத்து,
|
15
|
நலம் கேழ் ஆகம் பூண் வடுப் பொறிப்ப,
|
|
முயங்குகம் சென்மோ நெஞ்சே! வரி நுதல்
|
|
வயம் திகழ்பு இழிதரும் வாய் புகு கடாஅத்து,
|
|
மீளி மொய்ம்பொடு நிலன் எறியாக் குறுகி,
|
|
ஆள் கோள் பிழையா, அஞ்சுவரு தடக் கை,
|
20
|
கடும் பகட்டு யானை நெடுந் தேர்க் கோதை
|
|
திரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை.
|
|
தெண் நீர் உயர் கரைக் குவைஇய
|
|
தண் ஆன்பொருநை மணலினும் பலவே.
|
வினை முற்றி மீளலுறும்
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. - கணக்காயனார் மகனார்
நக்கீரனார்
|
|
|
நறவு உண் மண்டை நுடக்கலின், இறவுக் கலித்து,
|
|
பூட்டு அறு வில்லின் கூட்டுமுதல் தெறிக்கும்
|
|
பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின்
|
|
அர வாய் அன்ன அம் முள் நெடுங் கொடி
|
5
|
அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி,
|
|
அசைவரல் வாடை தூக்கலின், ஊதுஉலை
|
|
விசை வாங்கு தோலின், வீங்குபு ஞெகிழும்
|
|
கழனிஅம் படப்பைக் காஞ்சி ஊர!
|
|
'ஒண் தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து
|
10
|
கொண்டனை' என்ப 'ஓர் குறுமகள்' அதுவே
|
|
செம்பொற் சிலம்பின், செறிந்த குறங்கின்,
|
|
அம் கலுழ் மாமை, அஃதை தந்தை,
|
|
அண்ணல் யானை அடு போர்ச் சோழர்,
|
|
வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை,
|
15
|
இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய,
|
|
ஒளிறு வாள் நல் அமர்க் கடந்த ஞான்றை,
|
|
களிறு கவர் கம்பலை போல,
|
|
அலர் ஆகின்றது, பலர் வாய்ப் பட்டே.
|
தோழி வாயில் மறுத்தது.
மருதம் பாடிய இளங்கடுங்கோ
|
|
|
உண்ணாமையின் உயங்கிய மருங்கின்
|
|
ஆடாப் படிவத்து ஆன்றோர் போல,
|
|
வரை செறி சிறு நெறி நிரைபுடன் செல்லும்
|
|
கான யானை கவின் அழி குன்றம்
|
5
|
இறந்து, பொருள் தருதலும் ஆற்றாய்; சிறந்த
|
|
சில் ஐங் கூந்தல் நல் அகம் பொருந்தி
|
|
ஒழியின், வறுமை அஞ்சுதி; அழிதகவு
|
|
உடைமதி வாழிய, நெஞ்சே! நிலவு என
|
|
நெய் கனி நெடு வேல் எஃகின் இமைக்கும்
|
10
|
மழை மருள் பல் தோல் மா வண் சோழர்
|
|
கழை மாய் காவிரிக் கடல் மண்டு பெருந் துறை,
|
|
இறவொடு வந்து கோதையொடு பெயரும்
|
|
பெருங் கடல் ஓதம் போல,
|
|
ஒன்றில் கொள்ளாய், சென்று தரு பொருட்கே.
|
தலைமகன் இடைச் சுரத்துத் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. -
காவிரிப்பூம்பட்டினத் துக் காரிக்
கண்ணனார்
|
|
|
ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட
|
|
சிறு பல் கேணிப் பிடி அடி நசைஇ,
|
|
களிறு தொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம்
|
|
சென்று சேர்பு ஒல்லார்ஆயினும், நினக்கே
|
5
|
வென்று எறி முரசின் விறற் போர்ச் சோழர்
|
|
இன் கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்,
|
|
வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று
|
|
உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழிற்
|
|
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்,
|
10
|
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்
|
|
தீ இல் அடுப்பின் அரங்கம் போல,
|
|
பெரும் பாழ்கொண்டன்று, நுதலே; தோளும்,
|
|
தோளா முத்தின் தெண் கடற் பொருநன்
|
|
திண் தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன்
|
15
|
நல் எழில் நெடு வேய் புரையும்
|
|
தொல் கவின் தொலைந்தன; நோகோ யானே.
|
|
'தலைமகன் பிரியும்' எனக் கருதி வேறுபட்ட
தலைமகட்குத் தோழி
சொல்லியது.- உறையூர் |
முதுகூத்தனார்
|
|
|
அம்ம, வாழி தோழி! 'பொன்னின்
|
|
அவிர் எழில் நுடங்கும் அணி கிளர் ஓடை
|
|
வினை நவில் யானை விறற் போர்ப் பாண்டியன்
|
|
புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை,
|
5
|
அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து,
|
|
தழை அணிப் பொலிந்த கோடு ஏந்து அல்குல்
|
|
பழையர் மகளிர் பனித் துறைப் பரவ,
|
|
பகலோன் மறைந்த அந்தி ஆர் இடை,
|
|
உரு கெழு பெருங் கடல் உவவுக் கிளர்ந்தாங்கு,
|
10
|
அலரும் மன்று பட்டன்றே; அன்னையும்
|
|
பொருந்தாக் கண்ணள், வெய்ய உயிர்க்கும்'
என்று
|
|
எவன் கையற்றனை, இகுளை? சோழர்
|
|
வெண்ணெல் வைப்பின் நல் நாடு பெறினும்,
|
|
ஆண்டு அமைந்து உறைநர்அல்லர் முனாஅது
|
15
|
வான் புகு தலைய குன்றத்துக் கவாஅன்,
|
|
பெருங் கை எண்கின் பேழ்வாய் ஏற்றை
|
|
இருள் துணிந்தன்ன குவவு மயிர்க் குருளைத்
|
|
தோல் முலைப் பிணவொடு திளைக்கும்
|
|
வேனில் நீடிய சுரன் இறந்தோரே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார்
|
|
|
வினை நவில் யானை விறற் போர்த்
தொண்டையர்
|
|
இன மழை தவழும் ஏற்று அரு நெடுங் கோட்டு
|
|
ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர்,
|
|
கொய்குழை அதிரல் வைகு புலர் அலரி
|
5
|
சுரி இரும் பித்தை சுரும்பு படச் சூடி,
|
|
இகல் முனைத் தரீஇய ஏறுடைப் பெரு நிரை
|
|
நனை முதிர் நறவின் நாட் பலி கொடுக்கும்
|
|
வால் நிணப் புகவின் வடுகர் தேஎத்து,
|
|
நிழற் கவின் இழந்த நீர் இல் நீள் இடை
|
10
|
அழல் அவிர் அருஞ் சுரம் நெடிய என்னாது,
|
|
அகறல் ஆய்ந்தனர்ஆயினும், பகல் செலப்
|
|
பல் கதிர் வாங்கிய படு சுடர் அமையத்துப்
|
|
பெரு மரம் கொன்ற கால் புகு வியன் புனத்து,
|
|
எரி மருள் கதிர திரு மணி இமைக்கும்
|
15
|
வெல்போர் வானவன் கொல்லிக் குட வரை
|
|
வேய் ஒழுக்கு அன்ன, சாய் இறைப் பணைத் தோள்
|
|
பெருங் கவின் சிதைய நீங்கி, ஆன்றோர்
|
|
அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும்,
|
|
சென்று, தாம் நீடலோஇலரே என்றும்
|
20
|
கலம் பெயக் கவிழ்ந்த கழல் தொடித் தடக்
கை,
|
|
வலம் படு வென்றி வாய் வாள், சோழர்
|
|
இலங்கு நீர்க் காவிரி இழிபுனல் வரித்த
|
|
அறல் என நெறிந்த கூந்தல்,
|
|
உறல் இன் சாயலொடு ஒன்றுதல் மறந்தே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -
தாயங்கண்ணனார்
|
|
|
ஊரல் அவ் வாய் உருத்த தித்தி,
|
|
பேர் அமர் மழைக் கண், பெருந் தோள், சிறு
நுதல்,
|
|
நல்லள் அம்ம, குறுமகள் செல்வர்
|
|
கடுந் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்,
|
5
|
நெடுங் கொடி நுடங்கும் மட்ட வாயில்,
|
|
இருங் கதிர்க் கழனிப் பெருங் கவின் அன்ன
|
|
நலம் பாராட்டி, நடை எழில் பொலிந்து,
|
|
விழவில் செலீஇயர் வேண்டும் வென் வேல்
|
|
இழை அணி யானைச் சோழர் மறவன்
|
10
|
கழை அளந்து அறியாக் காவிரிப் படப்பை,
|
|
புனல் மலி புதவின், போஒர் கிழவோன்,
|
|
பழையன் ஓக்கிய வேல் போல்,
|
|
பிழையல கண், அவள் நோக்கியோர் திறத்தே!
|
தோழி தலைமகனை வாயில்
மறுத்தது. - பரணர்
|
|
|
குழற் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலைப்
|
|
பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த
|
|
உண்ணாப் பிணவின் உயக்கம் சொலிய,
|
|
நாள் இரை தரீஇய எழுந்த நீர் நாய்
|
5
|
வாளையொடு உழப்ப, துறை கலுழ்ந்தமையின்,
|
|
தெண் கட் தேறல் மாந்தி, மகளிர்
|
|
நுண் செயல் அம் குடம் இரீஇ, பண்பின்
|
|
மகிழ்நன் பரத்தைமை பாடி, அவிழ் இணர்க்
|
|
காஞ்சி நீழல் குரவை அயரும்
|
10
|
தீம் பெரும் பொய்கைத் துறை கேழ் ஊரன்
|
|
தேர் தர வந்த நேர் இழை மகளிர்
|
|
ஏசுப என்ப, என் நலனே; அதுவே
|
|
பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சினக்
|
|
கொல் களிற்று யானை நல்கல்மாறே;
|
15
|
தாமும் பிறரும் உளர்போல் சேறல்
|
|
முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின்,
|
|
யான் அவண் வாராமாறே; வரினே, வானிடைச்
|
|
சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல,
|
|
என்னொடு திரியானாயின், வென் வேல்
|
20
|
மாரி அம்பின் மழைத் தோற் சோழர்
|
|
வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை,
|
|
ஆரியர் படையின் உடைக, என்
|
|
நேர் இறை முன்கை வீங்கிய வளையே!
|
நயப் புப்பரத்தை இற்
பரத்தைக்குப் பாங்காயினார் கேட்பச்
சொல்லியது. - பாவைக் கொட்டிலார்
|
|
|
குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும்
|
|
மறம் கெழு தானை அரசருள்ளும்,
|
|
அறம் கடைப்பிடித்த செங்கோலுடன், அமர்
|
|
மறம் சாய்த்து எழுந்த வலன் உயர் திணி
தோள்,
|
5
|
பலர் புகழ் திருவின், பசும் பூட் பாண்டியன்
|
|
அணங்குடை உயர் நிலைப் பொருப்பின் கவாஅன்,
|
|
சினை ஒள் காந்தள் நாறும் நறு நுதல்,
|
|
துணை ஈர் ஓதி மாஅயோள்வயின்,
|
|
நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற
|
10
|
முயங்கல் இயையாதுஆயினும், என்றும்,
|
|
வயவு உறு நெஞ்சத்து உயவுத் துணையாக,
|
|
ஒன்னார் தேஎம் பாழ் பட நூறும்
|
|
துன் அருந் துப்பின் வென் வேற் பொறையன்
|
|
அகல் இருங் கானத்துக் கொல்லி போல,
|
15
|
தவாஅலியரோ, நட்பே! அவள்வயின்
|
|
அறாஅலியரோ, தூதே பொறாஅர்
|
|
விண் பொரக் கழித்த திண் பிடி ஒள் வாள்,
|
|
புனிற்று ஆன் தரவின், இளையர் பெருமகன்,
|
|
தொகு போர்ச் சோழன், பொருள் மலி
பாக்கத்து,
|
20
|
வழங்கல் ஆனாப் பெருந் துறை
|
|
முழங்கு இரு முந்நீர்த் திரையினும் பலவே!
|
அல்லகுறிப்பட்ட தலைமகன்
தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைக்
கணக்காயனார்
|
|
|
மேல் துறைக் கொளீஇய கழாலின் கீழ்த் துறை
|
|
உகு வார் அருந்த, பகு வாய் யாமை
|
|
கம்புள் இயவன் ஆக, விசி பிணித்
|
|
தெண் கண் கிணையின் பிறழும் ஊரன்
|
5
|
இடை நெடுந் தெருவில் கதுமெனக் கண்டு, என்
|
|
பொற் தொடி முன்கை பற்றினனாக,
|
|
'அன்னாய்!' என்றனென்; அவன் கை விட்டனனே,
|
|
தொல் நசை சாலாமை, நன்னன் பறம்பில்
|
|
சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய
|
10
|
கற் போல் நாவினேனாகி, மற்று அது
|
|
செப்பலென் மன்னால், யாய்க்கே; நல் தேர்க்
|
|
கடும் பகட்டு யானைச் சோழர் மருகன்
|
|
நெடுங் கதிர் நெல்லின் வல்லம் கிழவோன்
|
|
நல்லடி உள்ளானாகவும், ஒல்லார்
|
15
|
கதவம் முயறலும் முயல்ப; அதாஅன்று,
|
|
ஒலி பல் கூந்தல் நம்வயின் அருளாது,
|
|
கொன்றனன்ஆயினும் கொலை பழுது அன்றே
|
|
அருவி ஆம்பல் கலித்த முன்துறை
|
|
நன்னன் ஆஅய் பிரம்பு அன்ன
|
20
|
மின் ஈர் ஓதி! என்னை, நின் குறிப்பே?
|
பின்னின்ற தலைமகற்குக் குறை
நேர்ந்த தோழி தலைமகளைக் குறை நயப்பக்
கூறியது.-பரணர்
|
|
|
கண்டிசின் மகளே! கெழீஇ இயைவெனை:
|
|
ஒண் தொடி செறித்த முன்கை ஊழ் கொள்பு,
|
|
மங்கையர் பல பாராட்ட, செந் தார்க்
|
|
கிள்ளையும் தீம் பால் உண்ணா; மயில் இயல்
|
5
|
சேயிழை மகளிர் ஆயமும் அயரா;
|
|
தாழியும் மலர் பல அணியா; கேழ் கொளக்
|
|
காழ் புனைந்து இயற்றிய வனப்பு அமை நோன்
சுவர்ப்
|
|
பாவையும் பலி எனப் பெறாஅ; நோய் பொர,
|
|
இவை கண்டு, இனைவதன்தலையும், நினைவிலேன்,
|
10
|
கொடியோள் முன்னியது உணரேன், 'தொடியோய்!
|
|
இன்று நின் ஒலி குரல் மண்ணல்' என்றதற்கு,
|
|
எற் புலந்து அழிந்தனளாகி, தற் தகக்
|
|
கடல்அம் தானை கை வண் சோழர்,
|
|
கெடல் அரு நல் இசை உறந்தை அன்ன,
|
15
|
நிதியுடை நல் நகர்ப் புதுவது புனைந்து,
|
|
தமர் மணன் அயரவும் ஒல்லாள், கவர்முதல்
|
|
ஓமை நீடிய உலவை நீள் இடை,
|
|
மணி அணி பலகை, மாக் காழ் நெடு வேல்,
|
|
துணிவுடை உள்ளமொடு துதைந்த முன்பின்
|
20
|
அறியாத் தேஎத்து அருஞ் சுரம் மடுத்த
|
|
சிறியோற்கு ஒத்த என் பெரு மடத் தகுவி,
|
|
'சிறப்பும் சீரும் இன்றி, சீறூர்
|
|
நல்கூர் பெண்டின் புல் வேய் குரம்பை
|
|
ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில்
|
25
|
ஏதில் வறு மனைச் சிலம்பு உடன் கழீஇ,
|
|
மேயினள்கொல்?' என நோவல் யானே.
|
மகட் போக்கிய செவிலி
சொல்லியது. - நக்கீரர்
|
|
|
'சென்று நீடுநர்அல்லர்; அவர்வயின்
|
|
இனைதல் ஆனாய்' என்றிசின் இகுளை!
|
|
அம்பு தொடை அமைதி காண்மார், வம்பலர்
|
|
கலன் இலர் ஆயினும் கொன்று, புள் ஊட்டும்
|
5
|
கல்லா இளையர் கலித்த கவலை,
|
|
கண நரி இனனொடு குழீஇ, நிணன் அருந்தும்
|
|
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல்,
|
|
அத்த எருவைச் சேவல் சேர்ந்த
|
|
அரை சேர் யாத்த வெண் திரள், வினை விறல்,
|
10
|
எழூஉத் திணி தோள், சோழர் பெரு மகன்
|
|
விளங்கு புகழ் நிறுத்த இளம் பெருஞ் சென்னி
|
|
குடிக் கடன் ஆகலின், குறைவினை முடிமார்,
|
|
செம்பு உறழ் புரிசைப் பாழி நூறி,
|
|
வம்ப வடுகர் பைந் தலை சவட்டி,
|
15
|
கொன்ற யானைக் கோட்டின் தோன்றும்,
|
|
அஞ்சுவரு மரபின் வெஞ் சுரம் இறந்தோர்
|
|
நோய் இலர் பெயர்தல் அறியின்,
|
|
ஆழலமன்னோ, தோழி! என் கண்ணே.
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகன்
தோழிக்குச் சொல்லியது. - இடையன் சேந்தங்
கொற்றனார்
|
|
|
தன் ஓரன்ன ஆயமும், மயில் இயல்
|
|
என் ஓரன்ன தாயரும், காண,
|
|
கை வல் யானைக் கடுந் தேர்ச் சோழர்
|
|
காவிரிப் படப்பை உறந்தை அன்ன
|
5
|
பொன்னுடை நெடு நகர், புரையோர் அயர,
|
|
நல் மாண் விழவில் தகரம் மண்ணி,
|
|
யாம் பல புணர்ப்பச் சொல்லாள், காம்பொடு
|
|
நெல்லி நீடிய கல் அறைக் கவாஅன்,
|
|
அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ்
|
10
|
தித்திக் குறங்கில் திருந்த உரிஞ,
|
|
வளையுடை முன்கை அளைஇ, கிளைய
|
|
பயில் இரும் பிணையல் பசுங் காழ்க் கோவை
|
|
அகல் அமை அல்குல் பற்றி, கூந்தல்
|
|
ஆடு மயில் பீலியின் பொங்க, நன்றும்,
|
15
|
தான் அமர் துணைவன் ஊக்க, ஊங்கி,
|
|
உள்ளாது கழிந்த முள் எயிற்றுத் துவர் வாய்ச்
|
|
சிறு வன்கண்ணி சிலம்பு கழீஇ,
|
|
அறியாத் தேஎத்தள் ஆகுதல் கொடிதே.
|
மகட் போக்கிய
செவிலித்தாய் சொல்லியது. - குடவாயிற்
கீரத்தனார்
|
|
மேல் |